எப்போ வருவாரோ என்ற தொடர் ஆன்மீக நிகழ்வில் உங்க பேச்சை மட்டுமே கேட்கிறேன்.... மற்றவர்களின் பேச்சை கேட்கும் விருப்பம் ஏனோ வரவே இல்லை.... மதம் கடந்து ஆன்மீக பயணம், பற்றை விட சிலரை மட்டுமே பற்ற சொல்லுது இதயம்...
நமசிவாய சிவா அப்பாவின் திருவிளையாடல்களையும் நால்வரின் ஒருவரான நாவுக்கரசரையும், வாய் வழியாக என் செவிக்கு விருந்து என்ன புண்ணியம் செய்தேனோ! என்னப்பன் சிவபெருமானின் திருபுராணங்களை கேட்பதற்கு அனைவருக்கும் நன்றி ஜெயராஜ் ஐயாவிற்கும் நன்றி.....🙏🏼🌳
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே- அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்த்து நிறைந்ததும் இந்நாடே... இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வாயுற வாழ்த்தேனே...
மதிப்பிற்குரிய திரு. மரபின் முத்தையா மூலமாக, எப்போ வருவாரோ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக கம்பவாரிதி ஐயா அவர்களை வரவழைத்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மூலமாக பேச வைத்ததற்கு நன்றி. கோவை பெருமை பெறுகிறது. 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗
வணக்கம் அய்யா. ஆசா நிகளம் துகளாயின பின் பேச அநுபூதி பிறந்ததுவே.. மோனம் ஞானி நிலை புதுமணதம்பதியினர் தனிவீடு செல்லும் போது தாய் தந்தையர் சீதனம் கொடுப்பது போல இறைவன் முதலில் பெட்டியை அனுப்பு நம்மிடம் சாவியைக் கொடுத்து அனுப்புகிறான். நம் பெட்டியின் சாவி எது எண்று தெரியாமல் பெட்டியும், சாவியும் கெடுத்து விடுகிறோம். வித்தையை பெருமானை அறிய பயன்படுத்த வேண்டும். நம்மை முன்நிறுத்த அல்ல. வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான் தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்-யாம் பெரிதும் வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண்! எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. புலவர்,படகோட்டி கதை அருமை அய்யா. பேச்சை கடப்பவன் பேச்சாளன். ஞானத்தை தொடுவது இறைசந்நிதியில் கலப்பது தமிழும், சைவமும் இரண்டு கண்கள் தமிழ் என்ற சொல் திருக்குறளில் இல்லை. தமிழ்,சைவனாக, யாழ்பாணத்தில் பிறக்க வேண்டும். சமயம் எதற்கு? ஆன்ம சுதந்திரம் அடைய. ஆன்மாவிற்குதான் அறிவு உண்டு. கண்ணாடி காட்சியை தெளிவாக காட்ட உதவும். அதுபோல் கருவிகள் உயிர்க்கு உதவும் பொருள்கள் உயிர் ஆகாது. முக்தி என்பது சாகாமல் இருப்பது வடிவத்தால் அறிவாலும் மாறுபடுவோம் ஒவ்வொருவரும். சைவம் சுதந்திரம் உடையது. சாப்பாடு படிப்பு வழிபாடு அவரவர் விருப்பத்திற்கு உரியது. படிப்பு கூட கூட கோளறும் கூடும். கோளாறில் சிக்கி முதலில் அவதிப்பட்டவர் திருநாவுக்கரசர் புகழனார் மாது இனியார் நாம் செய்யும் உணவு குழந்தைகளுக்கு அமிர்தம் ஆக வேண்டும் என்று வணங்கி சமையல் செய்ய தொடங்க வேண்டும் . பெரியபுராணத்தை படிக்கும் போது சுதந்திரமாக சிந்திக்கும் தன்மையும் நமக்கு கொடுத்த இருக்கிறார். துன்பம் வரும்போது நிமிர வேண்டும் என்ற வைராக்கியம் வர வேண்டும். துன்பத்தை வெல்ல சுகமான வழி கல்வி படிப்பு போன்ற ஆயுதம் வேறொன்றும் இல்லை. சிவசிவ ஏசுவை மறப்பனோ... கல்வி பெருமானிடம் செல்ல தடை மணிவாசகர் சொல்லும் தடைகள் பெருமானிடம் செல்ல காலை மலமொடு கடும் பகல் பசி நிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் கரும்குழல் செவ்வாய் வெள்நகை கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கி உள் அமர்ந்து கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன் பணைத்து எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து ஈர்க்கு இடை போகா இள முலை மாதர் தம் கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும் பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள் மத்தக்களிறு என்னும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும். பெண் ஆசையை ஆறு வரியில் சொல்கிறார். கண்ணப்பர் ஒருபக்கம் ஆகமபூசை ஒருபக்கம் அன்பு பூசை நாள் ஆறில் கண் இழந்து அப்பவல்லேன் அல்லேன். அப்பருக்கு எண்பத்தொன்று, அருள்வாதவூரர்க்கு செப்பிய நாலெட்டில், தெய்வீகம் இப்புவியில், சுந்தருக்கு மூவாறு தொன் ஞான சம்பந்தர்க்கு அந்தம் பதினாறு அறி ஓசை கொடுத்த நாயகி அம்மை அப்பரை கடைசிவரை சோதனை செய்தார். பெரும் தவம் உடைவரும் செல்வம் வந்தால் மாறிப்போவார். காமம் கோபம் உயிர் குணங்கள். வசான மலங்கள் உள்ளன. விதைகள் எப்பொழுதும் இருக்கும். பெருங்காய டப்பி விருப்பத்தின் வித்து எப்பொழுதும் உள்ளே இருக்கும். சூலை நோய் பரிசாக கொடுத்தார் சிவன். நீறு இல்லாத நெற்றி பாழ். விலக்ககலீர் மரியாதையாக.. ஏற்றாய்.. உரிமை கூடக்கூட நட்பு கூடும். நற்றுணை ஆவது நமச்சிவாய. நாமம் சிறப்பு சொல்ல பாடல் இல்லை. விபூதி சிறப்பு சொல்ல திருநீற்றுப் பதிகம் உண்டு. நீறும் உருத்திராக்கும் ஐந்தெழுத்தும் போதும். அஞ்சக்கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக்கருத்தின் நிலை அறிவித்து... சம்பந்தர் அப்பரே என்று அழைக்க அதுவே பெயராக நிலைத்து விட்டது. எங்கு உற்றார் அப்பர்? இங்கு உற்றேன். இளமையில் ஆற்றல் இருக்கும் அறிவு இருக்காது. முதுமையில் ஆற்றல் இருக்காது அறிவு இருக்கும். திருமதி. மு.மங்கையர்க்கரசி, மடத்தூர் திருமறைக்காடு இரண்டு அடுத்த மூன்று என்று சொல்ல பேச்சாளர் தேவைஇல்லை. இரண்டுக்கும் மூன்றுக்கும் இடையே சொல்ல வேண்டும். பக்தியில் தொடங்கி புத்தியில் முடிப்போம். அற்புதம் சிவன் கொடுக்கும். அங்கீகாரம். குருவை வழிபட்டு முக்தி அடைந்தவர் அப்பூதி அடிகள். கல்வி தடை ஞானமாக இருந்தால் தடை இல்லை. கற்றாரை யான் வேண்டேன். புத்தியின் கூர்மை ஆணவத்தின் கூர்மை. வைத்த நிதி பெண்டீர் மக்கள் குலம் கல்வி என்னும் பித்த உலகில்...
அறியாமை நீக்க கல்வி. செம்பின் அழுக்கை நீங்குவது புளி. தண்ணீர் விட்டால் தான் தண்ணீர் வரும். கல்வி உள்ளே போனால் தான் அறிவு மிளிரும். ஞானத்தை அருளிய அய்யாவிற்கு நன்றி சிவாய நம பழனி மு.மங்கையர்க்கரசி