அய்யா இறையன்பின் வேகம் முக்தியை கூட வேண்டாது ஆன்மிகம் எனும் பாதையின் இலக்கு இறைவனே அவனை கொஞ்சுவது முக்திக்காக அல்ல அது இதயத்தின் பாதை அவனால் அவனில் அவனுக்காக ஏங்கும் அன்பின் பாதை 🙏
மன்னிக்க வேண்டும் .. மனைவி உதாரணம் சரிவராது உடல் சுகம்..உலக சுகம் ..பாதுகாப்பு இவற்றை நாடி வருபவள் தான் மனைவி. இது கிடைக்க வில்லை எனில் கணவனை மதிக்க மாட்டாள். துறவறம் எல்லாம் துறப்பது
மாணிக்க வாசகர் தன்னை இறை சக்தியிடம் தன்னை இழந்து விட்டார் அதுவே சரணாகதி இந்த மாயையில் இருந்து விடுபட்டு பிரமத்துள் பிரம்மமாக ஐக்கியமாதலே பிறவாமை இப்பவே நீங்க பகவானே எல்லாம் செய்வதாக கூறுகிறீர்கள் எண்ணங்கள் அற்ற நிலையே பிறவாமையை கொடுக்கும் அதுவே *சும்மா இரு* எண்ணங்கள் அற்ற நிலை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நமக்கு கிடைத்த வாழ்க்கை என்னும் வாய்ப்பை மனிதாபிமானத்தோடு யாருக்கும் எந்த கெடுதலையும் நினைக்காமல் செய்யாமல் முடிந்தால், மனமிருந்தால் உதவிகள் செய்து கொண்டு வாழ்ந்து முடித்தலே சிறந்த ஞானம். இறைவன் இருந்தாலும் சரி.இல்லாவிட்டாலும் சரி. வாழ்க்கை அமைவது ஒரு வாய்ப்பு மட்டுமே. அதை ஞாயமாக அனுபவித்து வாழ்ந்து முடிக்க வேண்டும். போனபிறவி, அடுத்த பிறவி, கர்மா,விதி, பிராப்தம், கொடுப்பினை, ஞானம், மோக்ஷம், சொர்க்கம் நரகம், கடவுள், இறைசக்தி, பாவம், புண்ணியம் எல்லாம் ஒரு அனுமானமே தவிர நிஜம் என்று நம்ப முடியாது. யாரும் எதையும் பார்த்தது இல்லை. அத்தனையும் மூளையின் செயல்பாடு. இந்த பிரபஞ்சம் என்பது உண்மை. அதை இயக்கி நடத்திக் கொண்டு வரும் ஏதோ ஒரு உன்னதமான காரணியை தான் நாம் இறை என்று உணரவேண்டும். அந்த இறை முக்தி தருமா தராதா என்று தெரியவில்லை. அதைவிட முக்தி என்பது தேவைதானா என்பதே சந்தேகம். எனவே நல்ல எண்ணங்களோடு நம்மோடு நடமாடும் மனித சமூகத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்து விட்டு போய் சேருவோம் மண்ணோடு மண்ணாக. இவை எல்லாம் முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்துக்கள்.
ஐய்யா, எனக்கும் எந்த கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருந்தது........ இன்று எனக்கு தெளிவுகள் கிடைத்தது ஐய்யா.....நாகராஜ் ஐய்யா அவர்களுக்கு நன்றி.........தேடத்தேடத்தான் தெளிவுகள் கிடைக்கும். நம் மனதில் தேடுதல் தானாகவே வரும்பொழுது அதற்கான விடை கிடைக்கும். நன்றிகள் ஐய்யா
ஆன்மீக பரிணாமம் வளர்ந்து கொடுத்தான் இருக்கிறது ஐய்யா....ஆதிசங்கரர் தொடர்ந்து ஐய்யா......தொடர்ந்து ஒவ்வொரு மகான்களின் அறிவு நிலையும் வள்ளல் பெருமான், வேதாத்திரி மகரிஷி ஐயா எல்லோரும் நிறைய இறை உண்மைகளை கொட்டி இருக்கிறார்கள். இறைவனை யாராலும் வரையறைக்குள் கொண்டு வர முடியாது. அந்தந்த காலகட்டங்களில் மாற்றம் வரும். நன்றிகள் ஐய்யா.
மிக சிறப்பான விளக்கம். புறத்தில் பூசிப்போருக்கு இதற்க்கு அர்த்தமும் தெரியாது சொன்னாலும் புரியாது. கேளிக்கையாக பேசுபவர்கள் பலர் ஆனால் சிந்திப்பவர் மிக அரிது. உங்கள் உன்னதமான தகவல் மக்களுக்கு இன்னும் பலருக்கு பொய் சேரவேண்டும். இது அடியேனுடைய வேண்டுக்கோளும் கூட. நன்றி ஐயா. மலேசியா, பினாங்கிலுருந்து செல்வகுமார்.
🙏 நல்ல ஞானம் திரு நாகராஜ் துறவிகளே ..பாராட்டுகள் 👍🏼🇮🇳 புத்தகம் படிக்க கூடாது என உறுதி கொண்டீர். சரி மனிதன் எழுதிய நூலை படிக்க வேண்டாம் ஆனால் சிவ கீதை அல்லது ஈஷ்வர கீதை பகவத் கீதை யை நீங்கள் படித்து ஈசன் மகாவிஷ்ணு வின் நேரடி வாக்கு மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்னால் .. அது 100% உலகை நல்வழிப்படுத்தும் உங்கள் ஞானம் இன்னும் மேலே போகும்.
Ayya நீங்கள் கூறிய அத்தனையும் சரிதான் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வது தான் துறவு என்கிறீர்கள் ஒரு இடத்தில் நீங்கள் பெரிய பதவி அடையாமல் இப்பாதையில் வந்தது இறைவனால் என்கிறீர்கள் அப்படி என்றால் நடப்பில் இறைவன் நமக்கு தந்த சுதந்திரம் எங்கே போனது இதை எப்படி இறைவன் செயல் என்று சொல்கிறீர்கள் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் destination அடைய இறைவன் பல வழிகள் தந்துள்ளார் அதி ஒன்று உங்கள் வழி எப்படியும் ஒருநாள் இரைவ்நோடு இணைவது உறுதி ஆற்றில் மிதக்கும் கட்டை போல் வாழ்வை எடுத்துக் கொண்டால் ஒருநாள் கடலில் கலப்பது உறுதி.நம்பிக்கையே பொறுமையே வாழ்க்கை.
ஆன்மாவின் சொந்தம் இறைவன் மட்டுமே இந்த உலகில் எதுவுமே நிரந்தரமாக இருப்பதில்லை எல்லாம் ஒருநாள் மறைய கூடியது. உடல் அழிந்தாலும் ஆன்மா அழியாதது இந்த ஜென்மத்தில் மட்டும் அல்ல. எத்தனை கோடி ஜென்மம் உடல் எடுக்கும் அழியும் ஆன்மா என்பது. என்றும். அழியாதது எல்லா பிறப்பிலும் தொடர்ந்து வருவது நம் உடலுக்கும் ஆன்மாவும். தந்தை இறைவனே நம் தந்தையான அவரை நாம் கொஞ்சுவதும் அப்பா என்று அவர் திருவடியே கதி என்று வணங்குவதும் என்ன தவறு.
Excellent same as my inner thought sir . All my confusion has been clarified. Its a great inner and mind conflict has over today . Created a happiest moment and relaxed mind .
This is the maturity of spirtuality... I dont see this maturuty from Mr. Jaggi vasudevan's speech except a Ahankar too much in his speech... Hats of to you Ayya for your clarity of your mind...Om Namha Shivaya
கொஞ்சம் குழப்பமான உரைதான் பற்றற்று என்பது சரிதான் ஆனால் உலகமே அன்பில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது..... Full of gravity... And in end of speach அன்புடன் என்று முடித்தீர்கள் கவனிக்க......... நன்றி
ஒருமுறை மிகுந்த ஆசையுடன் உங்களிடம் பேச வந்தேன். அன்று என்னை தெருநாயை விட கேவலமாக விரட்டினிர்கள்.சகமனிதனை மதித்து கனிவுடன் பேசாதெரியாத நீங்கள் ஆன்மீகத்தை பத்தி பேசுவது வேடிக்கை.பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் பேச்சில் எனக்கே எல்லாம் தெரியும் ஏன்ற கர்வம் தெரிகிறது.உங்களிடம் நாங்கள் ஆன்மீகத்தை பற்றி ஏந்த அறிவுரையும் கேட்கவில்லை.நீங்கள் ஆன்மீக குருவும் அல்ல. தயவுசெய்து உங்கள் அபிப்ராயத்தை உங்களிடமே வைத்துக்கொண்டு, நீங்கள் வந்த பணியில் கவனத்தை சேலுத்துங்கள். எங்களுக்கு வழிகாட்ட அப்பன் அண்ணாமலையார் இருக்கிறார்.🙏
ஐயா வணக்கம் 🙏 நீங்கள் சொல்லும் ஆன்மீகம் உண்மைதான் ஆனால் எல்லா ஆன்மீகவாதிகளும் ஒவ்வொரு கோவிலிலும் சென்று தான் முக்தி அடைகின்றனர் அப்படி என்றால் கடவுளை நாடித்தான் செல்கிறோம் ஐயா
எங்களது சந்தேகம் தீர தங்களது நாக்கில் சரஸ்வதி தாய் உட்கார வேண்டும் என்று சொல்லி சொல்வீர்கள் அதுபோல் மாணிக்கவாசகருக்கு நிமிர்ந்து நிற்பதற்கு தங்களைப் போல் ஒருவரை இறைவன் சொல்லி வைத்திருக்க வேண்டும்
உங்கள் கருத்துகள் ஒரு சிலவற்றை ரசித்திருக்கிறேன்...ஒரு சிலவற்றில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறேன்....இந்த பதிவில் கருத்து வேறுபாடு இருக்கிறது....முக்தி எதற்கு? முக்தியை இறைவன் வழங்குவான் என்பதால் இறைவனை கொஞ்சவில்லை..பூஜை செய்யவில்லை....அடிபணிந்து வணங்கவில்லை....நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி காணிக்கையாகவே இவற்றை மேற்கொண்டு வருகிறோம்...நீங்கள் சந்தித்த நபர்கள் வேண்டுமானால் இறைவனை அளவுக்கு அதிகமாக கொஞ்சியதால் உங்களுக்கு அப்படி தோன்றி இருக்கலாமே தவிர ....மற்றவர்களும் இறைவனை அவ்வாறே கொஞ்சிகிறார்கள் என்று அர்த்தம் இல்லை....இறைவன் மீது கொண்ட பக்தியிலும் ஒரு நேர்மை இருக்கிறது....என்ன தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் அக்கால ரிஷிகள் ,ஞானிகள், புலவர்கள்,சித்தர்களை போல் ஆயிரம் இல்லை இன்னும் எத்தனை இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் ஆக முடியாது....மாணிக்கவாசகர்...பக்தி பரவசத்தில் நற்சொற்களை தேடி தேடி பிடித்து நற்சொற்களால் இறைவனை அபிஷேகம் செய்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது....மாணிக்கவாசகர் கையில் இறைவன் இருந்தார் என்றாலுமே....மாணிக்கவாசகர் சொன்னது எனக்கு முக்தி அளித்து என் கையில் இறைவா நீ இருக்கிறாய் என்று சொன்னது ....இறைவனை கொஞ்சியதால் அல்ல....இறைவன் மீது அவர் கொண்ட அளவற்ற பக்தியினால்....ஈசன் மீது கொண்ட ஆசையையும் அறு என்று திருமூலர் சொன்னதாக நீங்கள் சொன்னாலும்...திருமூலர் ஆசையை அறு என்றே சொல்கிறார் ....இறைவனோடு கொண்ட பக்தியை அல்ல....ஆசை வேறு நேர்மையான பக்தி வேறு தானே.....அய்யா....இறைவன் மீது நேர்மையான கொஞ்சுதலே பக்தி.....உங்களுக்கு ஒருவர் உதவி செய்கிறார் என்றால்...நீங்கள் அவருக்கு நன்றி கூறுவீர்கள் தானே....உதவி செய்தவருக்கே நன்றி சொல்லும் போது... படைத்த இறைவனுக்கு சற்று கொஞ்சி பெருமையாக பக்திக் கொள்ளக் கூடாதா என்ன?
எங்களது சந்தேகம் தீர தங்களது நாக்கில் சரஸ்வதி தாய் உட்கார வேண்டும் என்று சொல்லி சொல்வீர்கள் அதுபோல் மாணிக்கவாசகருக்கு நிமிர்ந்து நிற்பதற்கு தங்களைப் போல் ஒருவரை இறைவன் சொல்லி வைத்திருக்க வேண்டும்
உண்மையான P.HD ..இது தான் க.niceஆனால் பரிமான வளர்ச்சி யில் நம் முன்னோர் கள் அணுவிற்கு அணுவால் அப்பாலுமாய் அன்றே உணர்தார்கள் தன் ஞானத்தினால் என்பது தான் உண்மை அல்லவா
அன்புள்ள சாமி உங்களுடைய மேலதிகாரி நீங்கள் சோப்பு போட்டு பேசாமல் இருப்பதை மதிக்காமல் இருந்ததால்தான் தாங்கள் இந்த நிலைக்கு வந்து எங்களுக்கு அறிவுவுற்றீர்கள் எனவே உங்களது மேலதிகாரிக்கு நன்றி கூறலாமா சாமி
இது தவறான முடிவாக இருக்கலாம். துரவ்பதிக்கு கிருஷ்ணர் உதவியது நினைவுக்கு வருகிறது. இறைவனிடம் உதவி கேட்காமல் இருந்திருந்தால் திரவபதியின் அன்றைய நிலை என்னவாயிருக்கும் என நினைத்து கூட பார்க்க இயலாது. நாம் பார்த்து கொள்ளலாம் என ஓடும் வரை நிச்சயம் இறைவன் தலையிட மாட்டார். Because, we have a freedom. My opinion, may differ for others. ஆனால் நேர்கோடு என்பது சரியான ஆலோசனை தான், இருப்பினும் அது முக்தி நிலையில் தான் சாத்தியம் ஆகும். உயிர் கொண்டு வாழும் நிலையில் சாத்தியம் இல்லை, நேர்கோட்டில் நாம் நிலைக்கும் வேலையில் உயிர் ஓட்டமும் ஆட்டமும் என யாவும் நின்றிருக்கும்.
நாகராஜ் ஐயா மனிதனின் வாழ்க்கை நான்கு கட்டங்களாக அதாவது பிரம்மச்சரியம் இல்லறம் வானபிரஸ்தம் சந்நியாசம் என்று பிரித்து வைத்து உள்ளனர் இதில் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு பிடிமானத்தோடுதானே கடந்து வரவேண்டி உள்ளது சந்நியாசகட்டத்தை இறை என்ற பிடிமானம் இல்லாமல் எப்படி கடப்பது இந்த பதிவு எனக்கு புரியவில்லை
55sec ல் இருந்து 58sec க்குள் சொல்கிறார் மிகச் சமீபத்தில் அடைந்த ஞானம்!.. அடிக்கடி இதுபோன்று ஞானமடைவார் போல!.... பகவான் தான் இவரையும் , இவரை follow பண்றவங்களையும் காப்பாத்தனும்! என்ன ஞானமோ?!....
இவர் இன்னும் மௌன நிலை அடையவில்லை , இவர் பேசுவதை நிறுத்தி, உள் முகம்மாக பயணிக்க வேண்டும்இவர் இன்னும் மௌன நிலை அடையவில்லை , இவர் பேசுவதை நிறுத்தி, உள் முகம்மாக பயணிக்க வேண்டும்