பெண் பிள்ளைகள்,வீட்டு வேலைகள் செய்யாமலௌ போனதற்குக் காரணம்,அம்மாதான்! செல்லம்❤தமிழ் தெரியும், தமிழ் இருக்கறது தெரியும்! வெள்ளத்தணையது மலர் நீட்டம் விளக்கம் சூப்பர்!😂
சோதனையைக் கொடுத்த கடவுளுக்கு வெற்றியை கொடுக்க ஒரே ஒரு நொடி போதுமானது! முயற்சியைக கைவிடாதே!! இலக்கில் கவனமாயிரு!!! உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துவதே கல்வியின் உயர்ந்த நோக்கமாகும்!!!!
இழகிய மனமே துயர் போக்கும், பழகிய மனிதர் நிலை கண்டு, எனினும் இறுகிய மனம் கொள்க, ஏமாற்றிடுவார் மனிதர்கள்! அச்சம் உலகம் அதில் இல்லை, அடுத்தவர் நலமும் புறமில்லை, எனினும் மிச்சம் கவனம் கொள், உனக்கென நீயொரு நிலை கொள்க!! எல்லாம் நடக்குது நடக்கட்டும், எதிலும் மெய்ப்பொருள் தேடி நட, ஒன்றில்லாமல் ஒன்றில்லை, எனினும் எல்லாம் ஒன்றில்லை!!! இன்றில்லாமல் நாளை இல்லை, என நீ இன்றே தேர்ந்து விடு, கப்பல் ஒரு நாள் கரை சேரும், கடவுள் எனவோர் பொருள் மெய் காண்!!!! .. 08.11.2023
மனிதர்களும் மனிதர்களும் பொருதாமல் இருப்பதற்குத்தான், மனித ஒழுங்குகள், சட்டதிட்டங்கள், இத்யாதி இத்யாதிகள் எல்லாம் உருவானது, எல்லாவற்றையும் மனிதர்கள்தான் உருவாக்கினார்கள், எல்லாம் ஐ.நா.சபைக்கு கீழ் அடைக்கலம் என்றானது, ஐ.நா.சபை சுயாதீனமானது என்று சொல்லப்பட்டாலும், பிற நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டதுதான், ஆளுகைச் செறிவான நாடுகளின் நலன்களுக்கு மாறாக உலகத்தில் எது நடந்தாலும், அதற்கு எதிராக ஐ.நா.சபை உடன் களத்தில் இறங்கும், ஏனைய நாடுகளின் விடயத்தில் ஐ.நா.சபை அவதானிக்க முடியுமே தவிர ஆணையிட முடியாது, இப்படித்தானே இந்த ஐ.நா.சபையை உருவாக்கினோம், ஆமாவா இல்லையா?
அரசுகள் போகத்தில் காலம் கழித்தால், அரச பயங்கரவாதம் கொண்டு நாட்டை நடாத்தினால் அங்கே கலகம் உருவாகும். இப்படித்தான் இங்கே உருவானது. பிராந்திய வல்லரசுகள் உதவிக்கு வந்து மூக்கறுபட்டன. தேசத்தின் சொத்துக்கள் சிலர் வசமானது. உருவான நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அவர்களே உலை வைத்தார்கள், ஆனாலும், ரணில் விக்ரம சிங்கே தலைமையில் நாடு கொண்டு வரப்டட்டது. இப்பொழுது, நீதிமன்று முதன்முறையாக குற்றப் பிரேரணை சமர்ப்பித்துள்ளது. இங்கே என்னதான் நடக்கிறது, பார்க்கலாமா?