தயவு செய்து யாராக இருந்தாலும் பறவாய் இல்லை தமிழீழக்கொடிக்கு ஒரு மரியாதை கொடுங்கோ நீங்கள் இப்படி செய்யும் செயலால் இவ்வளவு காலம் மண்ணுக்கு மடிந்தவர்களுக்கு ஒரு அர்த்தம் இல்லாமல் போய் விடும் எதற்காக மடிந்தார்கள் உங்களை போல அவர்களும் சுயநலமாக வாழ்ந்திருக்கலாம் தானே😢
எப்போதும் எந்நிலையிலும் நாகரிகம் கடைப்பிடிக்க பட வேண்டும். வார்த்தைகளை யோசித்து பேச வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இது எமது தலைவருக்கு அந்த மாமனிதனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. புலிக்கொடியை ஏந்திய படி தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்ய கூட வே கூடாது. அதேவேளை CTC க்கு மிகவும் தான் தோன்றிதனமாக தமிழரின் தலைவிதியை தம்முடைய Board of directors உடன் மட்டும் முடிவெடுக்க முடியாது. இவர்கள் யார் ? ராஜபக்ச கூட்டம் நடத்திய இனப்படுகொலையை அது இனப்படுகொலை தான் என்று ஏற்றுக் கொள்ளவே விரும்பாத CTC எப்படி தமிழரக்காக குரல் கொடுக்க முடியும். தெரு விழாவை நடத்தி முடிப்பதற்காக CTC தலைவரால் ஒரு பொது மன்னிப்பு நாடகம்!!!! ஏன் CTC யால் உதயன் S.Pillai நடந்தும் talk show வுக்கு வந்து கலந்து கொள்ள வில்லை???? எமது நியாயமான கேள்விகளுக்கு CTC , உதயன் நடத்தும் talk show வில் வந்து முடித்தால் பதில் சொல்லட்டும். மூடிய கதவிற்குள் கூடி முடிவுகளை எடுக்காமல் media முன் வந்து பதில் சொல்ல முன் வர வேண்டிய கட்டாயம் இது. CTC: You aren't Tamils voice.
பெரும்பான்மை மக்களின் ஆதரவு CTC க்கு இருந்திருக்கும் பட்சத்தில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடந்து ஆர்ப்பாட்டம் நீர்த்துப்போயிருக்கும். CTC ஐ வைத்து தமிழர்களடம் சில வேலைத்திட்டங்களை செயல்படுத்த முனைந்த சில புலனாய்வு நிறுவனங்கள் தமிழ்மக்களிடம் தோற்றிருக்கின்றனர்.
தயவு செய்து ஆர்ப்பாட்டம் செய்யும் போது நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் தலைவரையும், அவர் எங்களிடம் கையளித்த தேசியக் கொடியின் மதிப்பையும் மரியாதையும் பிரதிபலிக்கும்.
தேசியக்கொடியின் மதிப்பும் மாண்பும் இவர்களுக்கு தெரியாது தெரிந்திருந்தால் கண்ட இடமெல்லாம் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யமாட்டார்கள் மிகபெரும் தியாகங்களாலும் உயிர்கொடைகளாலும் உயர்ந்து நின்ற தேசிய கொடியை இவர்கள் ஒழுக்கமும் கட்டுபாடும் இல்லாத இவர்கள் இழிவுபடுத்திகொண்டு சிறுமைபடுத்திகாகொண்டு இருக்கின்றார்கள்
Now தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லுடா என்ற நிலை. இலங்கையிலும் தமிழன் நிலை அதோகதி, இப்பொழுது கனடாவிலுள்ள தமிழர் நிலையும் கேள்விக்குறியாக மாறிய வண்ணமாக உள்ளது.
உங்களுக்குள் பிரச்சனை என்றால் நீங்கள் பேசுங்கள் போராடுங்கள் அது ஏற்புடையது. ஆனால் வேறு நாட்டவரை மரியாதையுடன் நடாத்த வோண்டும். ஏன் மற்றவர்களுக்கு அந்த வார்த்தைகள் பாவிக்க படவில்லை. நாம் உண்மையான தமிழனாக இருந்தால் மரியாதை முக்கியம்.
பாடவேண்டாம் என்று சொன்ன பின்பு பாடினால் எவருக்கும் கோபம் வரும் மேடையில் வரும்போது சீனிவாசுக்கு தெரியும் எதிர்க்கிறார்கள் என்று மேடையிலேயே சொல்லலாம் இங்கே இந்நிகழ்வு சம்பந்தமாக ஒரு எதிர்ப்பை பார்க்கிறேன் இது நான் பாடுவதற்குரிய சூழ் நிலையல்ல இந்த பிரச்சனைகளை அவர்களே பேசி நிலையை சுமூக மாக்கும் வரை நான் இந்நிகழ்விலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் அதை விடுத்து அவர் பேசிய பேச்சு கோபத்தை உண்டுபண்ணக்கூடியதுதான் நான் பக்கத்தில்தான் நின்றேன்
பாட காசு வாங்கிக்கொண்டு பாடாமல் போக முடியாது. ஆகையால் அவர் தெண்டித்து பார்த்தார். அவருக்கு CTC சொன்னது மட்டும் தெரியும். அவரை பச்சை துரோகி என்று நிந்திபதில் நியாயமில்லை.😅
@@muttiahyathindra3853 தம்பி பாடி முடித்த பின்னர்தான் காசு கொடுப்பார்கள் வேலை செய்யமுன்பு எங்கயாவது சம்பளம் கொடுக்கிறார்களா அப் சீனீவாசுக்கு பணம்தான் முக்கியம்
Very true. Everyone is after money, including CTC and protesters. In the future, no one shouldn't use the flag for any protest .please respect the flag and do the right thing or keep quiet and stay away from everything
அது உண்மை இத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருந்தாலும் இலங்கை இந்தியாவிலுள்ள வர்கள் போல் நாகரீகம் தெரியாத புரியாதவர்களை போல் கனேடியர்கள் அருவருக்கும் நாய் குணம் அழிய வேண்டும் இங்கே க்ளாஸ் ஆதரவாளர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டமும் கனேடியர்கள் கனடா அரசு மீடியாக்கள் கூட அருவருக்கின்ற ஆர்ப்பாட்டம் இதை ஒத்ததே அதனாலேயே பேயாக அலையவேண்டடியும் உள்ளது 😕
தென்னிந்தியப்பாடகர் ஶ்ரீநிவாஸ் அவர்கள் கொழும்பில் 20 வருடத்துக்கு முதல் மயூரா அம்மன் கோயிலில் நடந்த இசைநிகழ்ச்சியில் வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லாப்பா என்ற பாடலைப் பாடியபோது சிங்களக் காடையர்களால் செருப்புகள் மேடையை நோக்கி வீசப்பட்டது அவர்கள் வீச வீச அதைப் பொருட்படுத்தாமல் அந்தப்பாடலை முழுமையாகப் பாடி முடித்தார் அந்தப் பாடலில் புலி என்ற சொல் இருந்ததால் செருப்பு வீசினார்கள் அப்படி அவர் தமிழருக்கு support பண்ணிய ஒருவர் கனடா ஏடையில் பாடும் போது பொருட்களை வீசி எறிந்து துரோகி என்று கத்தி ஆர்ப்பட்டம் பண்ணி ஒட்டு மொத்த ஈழத்தமிழரின் மானத்தையும் கப்பலேத்தீட்டாங்கள் இவர்கள் செய்த வேலைக்கும் சிங்கள காடையர்கள் செய்த வேலைக்கும் என்ன வித்தியாசம் ????? காட்டுமிராண்டிகள் மாதிரிக் கத்துறாங்கள் எதுக்கெடா விடுதலைப் புலிகளின் கொடியை வைத்துக்கொண்டு கத்துறீங்கள் ???? விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருக்கவே தகுதி இல்லாதவங்கள் படிப்பறிவில்லாத கேவலமான காட்டு மிராண்டிக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடிகை தமன்னா, வந்தபோது இதே மாதிரி ஆர்ப்பாட்டம் நடந்தது இப்ப கனடாவில் ஒட்டு மொத்த ஈழத்தமிழரின் மானத்தையும் வாங்கீட்டாங்கள் வன்முறையைத் தூண்டறவங்களை கனடா அரசாங்கம் deport பண்ண வேணும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் மாவீர்ர் களையும் அசிங்கப்படுதி இருக்கிறாங்கள்
சீனிவாஸ் சின்னப்பிள்ளையா மேடைக்கு வருமபோதே தெரியுது இங்கு ஒரு குளப்ப சூழ்நிலை காணப்படுகிறது இது நான் பாடுவதற்கூரிய சூழ்நிலையல்ல நல்ல அமைதியான சூழ்நிலை வரும்வரை இதிலிருந்து விலகுகிறேன் என்று செல்லியிருந்தால் பாரட்டலாம் ஆனா அவர் சொன்னார் அவர்கள் என்னை பாடுவதற்குத்தான் அழைத்தார்கள் நான் பாடுவேன் என்று சொன்னால் நானேகேட்பேன் அறிவில்லயா என்று எனினம் நான் அருகில் நின்று இவ்வாறுதான் நினைத்தேன் குளப்பமான சூழ்நிலையில் இந்த ஆள் பாடுதே என்ன கண்ண மூடிக்கொண்டு பாடுதா என்று நகரம் பற்றி எரியும்போத பிடில் வாசித்த மாதிரி ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது கவலை யில்லை தமனாவும் சீனிவாசும் அவஸ்தப்பட்டார்கள் என்றுதான் கவலை
உங்கள் பிரச்சனைகளை உங்களோடு வைத்திருக்க வேண்டும்.இந்தியக் கலைஞர்களை மிகக் கேவலமாகப் பேசியது வேதனைக்குரியது. எத்தனை லட்சம் மக்கள் தமிழ்நாடு கேரளா போன்ற இடங்களில் ஈழத் தமிழர்கள் அகதியாக இருக்கிறார்கள் என்பதைச் சற்றேனும் உணரவில்லை. ஆகவே இவர்கள் சுவரொட்டிகள் மூலமோ அல்லது சமூக வலைத் தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் ஏற்கனவே நிகழ்ச்சியைப் புறக்கணியுங்கள் என முன்னறிவித்தல் செய்யத் தவறி விட்டார்கள். அத்தோடு கனேடிய அரசும் தமிழர் விடயத்தில் பாகுபாடுகளைக் காட்டலாம். இது ஒரு தவறான வழி காட்டல். உங்கள் கருத்து நியாயமானது.
சிங்கள அடிவருடிகள் எல்லா தமிழரும் தான் . CTC and protesters are not clean people. All collected money from poor people and cheated those people with false information . All are bad.
உங்களுக்குள் ஆயிரம் பிரச்சனையிருக்கலாம் ஆனால், இந்திய பாடகர்களுக்கு பிரச்சனை கொடுப்பது தவறு, தமிழ் இலங்கை மக்கள்தான் தமிழன் நினைத்து குரல் கொடுப்பது தவறு, புலிகள் தியாகத் தை கொச்சைபடுத்து கிறீர்கள்
“When I go to School 🏫 I Studied for My Culture and History And language More than 2000 years ago Historically I Learned About My Culture Hospitalizations Wise I Proud of Myself.Now My Simple question is Where is a Our Cultural Identity and Hospitalizations?
வணக்கம் தமிழ் மக்களை நீங்கள் கனடாவில் அல்லது இலங்கை தவிர்த்து எந்த நாட்டில் குடிபெயர்ந்து வாழ்ந்தாலும் அந்த நாட்டில் இருந்துகொண்டு இல்ஙகைக்கு அல்லது இலங்கை அரசுக்கு அல்லது இலங்கை தமிழ் மக்களுக்காக போராடுவது மிகவும் பிழையான ஒரு விடயமாக மாறிக்கொண்டே வருகின்றதை உணருகின்றீர்களா எனத்தெரியவில்லை.. நீங்கள் வாழும் நாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக போராடுவதாக நினைத்துகொண்டு உங்கள் வாழ்கையை வாழ்வியல் இடத்தை நாட்டை இழந்துவிடாதீர்கள்.. காரணம் நீங்கள் போராடுவது அந்த நாட்டு மக்களுக்கு பிரச்சனையாக அந்த நாட்டு அரசுக்கு பிரச்சனையாக இருந்தால் உங்களுக்கு வாழ்வுரிமை கொடுத்தது பற்றிய சிந்தனை அந்த அரசுக்கு அந்த மக்களுக்கு வந்துவிட்டால் இலங்கையர்களுக்கு ஒரு பிரச்சனை வந்துவிடும் . அப்போது அந்த மக்களால் அல்லது அந்த அரசால் விரட்ட முற்படுவார்கள்.. தற்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல நாடுகளில் போராட்டாம் அல்லது அந்த மக்களை ஏற்றநாடுகள் இப்போது சிந்திக்கின்றது இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவர்களின் நாட்டில் உள்ள பிரச்சனைக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டில் பிரச்சனைகளை உருவாக்குகின்றார்கள் என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே நீங்களும் அந்த நிலைக்கு செல்லவேண்டாம். சிந்தித்து செயல்படுங்கள்..
Why are these people using tigers flag. No more tigers alive after 2009. People should not insult this flag anymore and show disrespect to others. Disgusting attitude
நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதால் இங்குள்ள எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது. நீங்கள் உங்கள் இருப்பை நிலைநிறுத்தும் பொருட்டு இப்படி பாதுகாப்பான ஒரு நாட்டில் இருந்து கொண்டு செய்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் விடுமுறைக்கு இங்கு வரும் போது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் விசாரணை அழைத்து செல்லக் கூடிய சந்தர்ப்பம் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
கனடா தமிழர் விழாவில் CTCயினர் பணத்தை கொடுத்து இந்திய பாடகர்களை ஏன் இங்கு கொண்டு வந்தீர்கள். பணத்தை கொடுத்து தமிழ் ஈழத்து பாடகர்களை இங்கு கொண்டு வந்திருக்கலாமே. ஈழத்து குயில் பாடகர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?
Well Mr. Srinivas didn't come here for free. He was paid a huge lumpsum to sing here. No one here is doing free service to Tamils. Simple problem with every tamil organization is same ppl or group running the boards. Instead they need to amend their constitutions to allow all tamils to run and be part of the decision making boards. Otherwise, no associations should be running such festivals in the name of Tamil. If CTC cannot allow every tamil an equal opportunity run for the board and run based on selective membership based voting to elect their board then they cannot represent all Tamils in Canada.