"வாழைப்பூ விலை எவ்வளவுங்க?" அந்த பெண் கேட்டாள். "ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா " என்றார் அந்த பாட்டி. "சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள்." சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. முதல் வியாபாரம் உனக்குத்தான், சரி தாறேன்....."கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்" என்றார் அவ் முதிர்ந்த பாட்டி..... தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பூக்களை வாங்கிக் கண்டாள். பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள். அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்டது குறைவு மீதம் விட்டது அதிகம்! பில் தொகை ரூபாய் 1200/- அவள் ரூபாய் 1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து "மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றாள். ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரண விஷயம். ஆனால் வாழைப்பூ விற்ற பாட்டிக்கு வலி மிகுந்த விஷயம். இதில் உற்றுநோக்க வேண்டியது..... "நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தைக் காட்டுகிறோம். பணக்கார்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்!!" தயவு செய்து ஏழைகளிடம் பேரம் பேசாதீர்கள்...🙏🏻 இப் பதிவினை முடிந்த வரை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 🙏🏻