மகா பெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ராம நாமத்தின் மகிமை அழகாகவும் விவரமாக வும் தெளிவாக சொன்னதற்கு நன்றி இதுபோன்ற ஆன்மீகம் சார்ந்த தகவல் தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் sri ராம ஜெயராம ஜெய ஜெய ராம
மகா பெரியவா சரணம் மூன்று வருடம் முன் ஜோதி வடிவ தரிசனம் மகா பெரியவா கொடுத்தார் 14 நாட்களாக ராம நாமம் 11000 தடவை தினம் சொல்கிறேன் பல உடல் தொந்தரவுகள் படிப்படியாக முழுவதும் என்னை விட்டு விலகிவிட்டது உடலும் மனமும் முக மலர்ச்சி உற்சாகம் கொடுக்கிறது மற்றவர்கள் சொல்ல வைக்கிறேன் நான் பெற்ற இன்பம் எல்லா ஜுவ ராசிகளும் பெற வேண்டும் நான் சொன்னது உண்மை சத்யம் நம்பிக்கை விடாமுயற்சியுடன் தொடர்ந்து 48நாள்கள் சொல்லுங்கள் நானும் என் அனுபவத்தை பதிவிடுவேன். மகா பெரியவாக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி❤இதைதான் எனக்கு புதியதாக கொடுத்தார்கள்
உண்மை சத்தியம் ஆம் அனுபவம் பேசுகிறது எதுவுமே நான் செய்கிறேன் பார் என்று அதற்காக முனைந்து செய்யும் போது அது நடக்காது ஏனெனில் அங்கே நம்மையும் அறியாமல் அகங்காரம் வந்து உட்கார்ந்து கொள்ளும் ஆம் ஒரு முறை ஒரே முறை நடந்த நிகழ்வு தான் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை பூஜை முடித்து விட்டு ஸ்ரீ ராம நாமம் ஜெபித்துக் கொண்டே சமையலில் ஈடுபட்டிருந்தேன் சமையல் முடியும் வரை ராம நாமம் பிறகு முடிந்து பூஜை அதாவது ஹாலில் ஒரு ஷெல்ப் மூடிய கதவு கொண்டது ஆனால் பூஜை செய்ததால் கதவு திறந்து இருந்தது வாழைப்பழத்தைக் காணவில்லை யாரும் வரவில்லை அப்படியே இருந்தாலும் யாரும் எடுக்கப் போவதில்லை ஒன்றும் புரியல சரி என்று பகவானுக்கே வெளிச்சம் என்று நினைத்துக் கொண்டு துவைத்த துணிகளை உலர்த்த மாடிக்குச் சென்றால் அங்கே கம்பீரமாக ஒரு வானரம் உட்கார்ந்து அழகாக பழத்தை உண்பதைக் கண்டேன் திகைத்துப் போனேன் ஆம் எப்படி இது சாத்தியம்? மெயின் கதவுகள் மூடியிருந்தது ஒன்றும் புரியல ஆம் இறைவன் நமது இல்லத்திற்கு வரவேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் வருவார் இதுல ஒரு வேடிக்கை என்ன தெரியுமா அதன் பிறகு அப்படி நான் ராம நாமம் ஜபிக்கவே முடியவில்லை அதனால் தான் கூறுகிறேன் நாமாக செய்வோம் என்று நினைத்தால் அது முடியாது தானாக அதுவாக நடக்கும் அப்போது தான் அதற்கு ஒரு மகத்துவம் உண்டு மேலும் கைலாசத்தில் இறைவனிடம் சக்தி தேவி உபதேசம் பெற்றது ராம நாம மந்திரத்தை தான் ராம நாமத்தில் சிவமும் நாராயணரும் இருக்கின்றனர் இந்த மந்திரத்தைக் கூறுவதற்கு கால நேரம் கிடையாது உரு ஏற்றி விட்டால் போதும் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும் காதில் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அதே சமயத்தில் வேலையிலும் ஈடுபடலாம் வேலை விரைவாக நேர்மையாக நடக்கும் இதன் மகிமை பேச முடியாது நன்றி வணக்கம் ஜெய் பவானி