ஓம் நமச்சிவாயா கோலர் பதிகம் மிக அருமையாக இருந்தது எவ்வளவு வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம் மக்கள் இதை பின்பற்றி கொள்ளுங்கள் அனைவரும் மிக மிக நல்ல நல்ல வாழ வேண்டும் ஓம் நமச்சிவாயா நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க இந்த அம்மையார் குடும்பத்துக்கு என்றும் அருள் புரிய வேண்டும் ஓம் நமச்சிவாயா வாழ்க
பிறவிப் பயனை அடைந்த இன்பத்தை பெற்றேன் அம்மா.. தங்கள் சொற்பொழிவு காண இத்துனை ஆண்டுகள் ஆனது என் அப்பன் ஈசன் திருவருளால் இந்த பாக்கியம் பெற்றேன்....வாழ்க தமிழ்..வளர்க நின் தொண்டு... அம்மா வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன்.....🎉🎉🎉
நன்றி கூற வார்த்தைகள் இல்லை அம்மா அருமையான பதிவு புண்ணியகாலம் வருபவர்களுக்கு மட்டுமே இதை பார்க்க கேட்க முடியும் என்பது மட்டும் தின்னம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அம்மா வணக்கம் எனது அகவை 74 ஆகும். கோளறு பதிகத்திறகு இவ்வளவு நீண்ட நெடிய ஆன்மிக விளக்கமளித்த தாங்கள் இந்த நிலம் உள்ள வரை நீர் உள்ள வரை காற்றுள்ள வரை ஆன்மிகத்தில் மறுமலர்ச்சி ஏற்படு த்திட வேண்டும் என அந்ததோடுடைய செவியன் மலர் பாதம் பணிந்து இறைஞ்சுகிறேன்.உங்கள் இந்த உரை கேட்கும் போது என் கண்கள் பனித் தன. நன்றி ! வணக்கம்!!
மிக மிக மிக அதி மிக மிக சிறப்பான வளமையான சொற்பொழிவு ஆற்றல். தங்களின் ஆற்றலில் உள்ளம் உவந்து போனேன். வாழ்த்த சொற்கள் இல்லையே அம்மையே. வாழ்க வளமுடன் என்றென்றும் சிறப்பான சுபிட்சத்துடன்🎉🎉🎉🎉🎉
நீங்க சொன்ன மாதிரி இந்த சொற்பொழிவை சத்தியமா மறக்க முடியாது அம்மா அருமையான வார்த்தைகள் ஒவ்வொன்றும் கேட்க கேட்க அவ்ளோ ஒரு சுவாரஸ்யம் அருமை அருமை நீண்ட ஆயுள் எம்பெருமான் முருகப் பெருமான் உங்களுக்குஆயிரம் பிறை நீங்கள் இதே இதே போல் நிறைய சொற்பொழிவுகளை நான்
அம்மா நான் முதல் முதலா உங்களின் சொற்பொழிவு கேட்கிறேன். மிகவும் அருமை. உங்கள் குரலுக்கு அடிமை ஆகிவிட்டேன். உங்கள் யதார்த்தம் மிகவும் அருமை. வாழ்த்த வயதில்லை.உம் பாதம் வணங்குகிறேன். 🙏🙏🙏❤️
இறைவா எனக்கு ஒருநாள் இவர்களை நேரில் பார்க்கும் பாக்கியத்தை தாரும் மையா... அம்மையாரின் காலை தொட்டு வணங்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் ஓம் நமசிவாய....
ஆனந்தத்தால் மிகவும் பரவசமானோம் அம்மா !! எத்தனையோ உபன்யாசம் கேட்டுள்ளேன் ஆனால் இவ்வளவு தெளிவாக, ரத்தினச்சுருக்கமாக, கோள் என்செய்யும் - ஆகா ஆனந்தப்பட்டோம் !! தேனினும் இனிய குரல் வளம், ஆணித்தரமாக, மிகவும் மென்மையாக உண்மை ஊர்ஜிதப்படுத்தி சொல்லும் தொணி !! தெவிட்டாத தமிழ் மழையில் நனைய வைத்தீர் தாயே !! என்னைவிட தாங்கள் வயதில் சிறியவராகத்தான் இருப்பீர்கள், தாங்கள் நூற்றி இருபது ஆண்டுகள் பரிபூரணமாக வாழ்ந்து இந்த அருள் அமுதத்தை எத்தனையோ, எத்துணை, எத்துணையோ கோடி மக்கள் பரவசமடைந்து இன்புற்று வாழ செவிக்கும் மனதிற்கும் அளிக்க வேண்டுகிறேனம்மா !! தங்கள் அன்பு குடும்பத்தார் அனைவருக்கும் இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு !!! வாழிய, வாழியவே !!!
சொற்ப்பொழிவுக்கு இடையில் என்ன விளம்பரம் இது தேவையா? ஆண்டவன் இப்படி விளம்பரம் மூலம் பணம் சம்பாத்தியம் செய்ய சொல்லிட்டு இருக்கிறாரா.இது ஒரு கேவலமான செயல். மானம் உள்ள எவனுமே இப்படி செய்ய மாட்டான்.முட்டாள்கள் மட்டுமே இப்படி விளம்பரத்தில் காசு பார்த்து வாழ்க்கை வாழ்வார்கள்.
அருமை மிகத் தெளிவான உரை கேட்பவர் நெஞ்சமெல்லாம் நிலைத்து நிற்கும் சொற்பொழிவு நேரில் அமர்ந்த கேட்ட ஒரு மனநிறைவு வார்த்தை தெளிவு அருமையான சொற்பொழிவு அம்மா கேட்க கேட்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா
சகோதரியே! இப்படி ஒரு பேச்சினை நான் இப்போதுதான் கேட்கிறேன்.என்ன அருமையான பேச்சு! ஆகா! ஆகா! வளமான உச்சரிப்பு! இடைவெளிவிட்டு தங்கள் பேச்சு அமைவதால் கேட்பதற்கே மிகவும் உற்சாகமாக இருக்கிறது.
இந்திய நாடு 1947இல் சுதந்திரம் பெற்ற ஞான்று திருவாவடுதுறை ஆதீன மாணிக்க ஓதுவாமூர்த்தி "கோளறு பதிகம்" பாட மவுண்ட் பேட்டன் நேருவிடம் செங்கோல் தந்தார். வாங்கியவர் தம் வாழ்நாள் முழுவதும் போட்டி இன்றி இந்தியத் திருநாட்டின் பிரதமராக இருந்த சிறப்புக்கு உரியது "கோளறு பதிகம்'
அருமை அம்மா தெரியாமல் இருந்த கருத்தை தெளிவாக புரிய வைத்த தங்களுக்கு நன்றி அம்மா நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கு... மீண்டும் பல முறை நன்றி வாழ்க வளமுடன்
ஆதியும் அந்தமும் ஆகிய பரமனே நேரில் வந்து மண்டையில் புகுந்து சொன்னதுபோல் மிக மிக அற்புதமாக இருந்தது தாங்களின் சிங்க கர்ஜனை உரை, இந்த ஷனத்தில் இருந்து கோளறு பதிகத்தை எனது மூச்சுடன் கலந்துவிடுகிறேன் அம்மா, கோடானு கோடி நன்றிகள் அம்மா.
வணக்கம் அம்மா. கோளறு பதிகம் இத்தனை சிறப்பு கள் உள்ளது என்பதை இப்பொழுது தான் அறிந்தேன்.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதை கேட்கும் நேரம் படி த்துக்கொண்டிருக்கிறேன்.. கோளறு பதிகம் எனக்கு நல்லவையாக நடைபெறட்டும்..
I am honoured with siva’s grace to listen this wonderful rendition of kolaru patigam . Notsure how I missed this much time . That’s what they say lord siva blessed me today to listen this . I was really taken to out of the world the way she delivered this rendition . I pray god to provide all wealth and health to her and family . Thiruchirambalam
வணக்கம் அம்மா🙏🙏🙏🙏, தங்களுடைய பேச்சை நன்கு உற்று கேட்பேன் அது உனக்கு பல நேரங்களில் மன நிம்மதியும் நிறைவும் அடைந்துள்ளேன். குறிப்பாக பீஷ்மர், கர்ணனை பற்றிய வாழ்க்கை வரலாறு பற்றி பேசி அந்த அனைத்து வீடியோவைப் பார்த்து மனம் மகிழ்ந்து நிறைவடைந்து உள்ளேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்கலாம். இந்தப் பதிகத்தில் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு பகுதி வருகிறது. அதை நீங்கள் உண்மையிலேயே புரிந்திருந்தால் நீங்கள் அதை இங்கே பதிவிட்டி ருப்பீர்கள். இங்கே கேள்வாயாகக் கேட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் கேட்கவில்லை.
என்ன அருமையான சொற்பொழிவு பழைய கருத்துகளையும் முன்னோர்களின் மூத்த சொல் வார்த்தை மில் அமிர்தம் குறிப்பாக (பொறுத்துக்கொள்) என்ற வார்த்தை எல்லோரும் இதைக் கேட்டு தெளிவு பெற வேண்டும். வாழ்க வளமுடன். இன்பவதனி மனோகரன்.
அம்மா உங்கள் கணீர் குரலுக்கு நான் அடிமை அநேக ஞானம் பகவான் கிருஷ்ணர் ஆசீர்வாதம் அருளியுள்ளார் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே உள்ளது. பகவானுக்கு நன்றி சமர்ப்பிக்கிறேன்
உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது. கோளறுபதிகத்தை படித்து பார்த்தேன்.அர்த்தம் புரியவில்லை. அர்த்தத்தை புரிந்து நம் மனம் ஒன்றி படிக்கும் போது தான் நாம் வேண்டுவதும் நிறைவேறும்.ஆதலால் கோளாறு பதிகத்தை பதம் பிரித்து அர்த்தத்தை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
நன்றி அம்மா 🙏🏽 இன்று உங்கள் இனிமையான சொற்பொழிவு கேட்டது... அந்த ஈசனின் அருளே... எவ்ளோ கவலை இருந்த எனக்கு.. அனைத்தும் மறந்து சென்றேன்... மிக்க நன்றி அம்மா 🙏🏽🙏🏽 ஓம் நமசிவாய 🙏🏽
அற்புதமான உரை. நீங்கள் மிகவும் தெளிவாகவும் நல்ல விளக்கத்துடன் நடைமுறையில் மக்கள் செய்கின்ற தவறுகளையும் சுட்டி காட்டி பேசுவது மிகவும் அருமை. உங்களின் சொற்பொழிவை இப்பொழுதுதான் முதல் முறையாக கேட்கின்றேன். வாழ்த்துகள். உங்களின் பணி மேலும் சிறப்படைய நெஞ்சார்ந்த வாழத்துகள். நன்றி. த. விஸ்வநாதன்
இந்த அற்புதமான பதிவை பார்க்க வாய்ப்பை கொடுத்த எம்பெருமான் எல்லாம் வல்ல இறைவன் ஈசனுக்கு கோடான கோடி நன்றிகள்....!! அற்புதமான பதிவு அற்புதமான அறிவு அற்புதமான திறமை ஆழ்ந்த புலமை வாழ்க வளமுடன் தாயே....!!
உயர்திரு நாவுக்கரசிக்கு நன்றி நன்றி நன்றி. புத்தாண்டான இன்று மனச்சலனத்தில் இருந்து உங்கள் மகிமை பேச்சால் புனிதம் பெற்றேன். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மிக மிக அருமை யான உரை. 👏👏👏👏👏 உங்கள் தமிழைக் கேட்பதற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.அம்மா.எப்போதும்தங்கள்உரையைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. 😀 வாழ்த்த வயதில்லை அம்மா.வணங்குகிறேன்🙏💐💐💐💐💐 நன்றி நன்றி அம்மா 🙏 💞🌹
@@kalyanibalakrishnan7647 சகோதரி, ஆலயங்களில் வழிபடப்படுகின்ற அறுபத்து மூன்று நாயன்மார்களும் நாமும் ஒன்றா? அவர்கள் ஈசனை வழிபட்ட முறையும், நாம் இன்று வழிபடுகின்ற முறையும் ஒன்றா? ஏன் அவர்களை ஆலயங்களில் வைத்திருக்கிறார்கள்?
குரல் இனிமை ,அணைவரையும் தன்பால் சுண்டி இழுக்கும் சொல் இனிமை, அம்மா நீங்கள் கலை அரசியா,தமிழ் மலை அரசியா,நால்வர் புகழைக் பரப்பும் இளவரசியா. இவை எல்லாம் பெற்ற குணவதியே நீங்கள்