கோவை மாவட்டம் அக்கநாயக்கன்பாளையம் பக்கத்தில் கோப்பாஹள்ளிமேடு என்று ஓர் இடம் உள்ளது.
'இங்கே பேய் இருக்கு. யாரும் போகாதீங்க'னு முன்பு சிறுவர்களையும், இளைஞர்களையும் பெரியவர்கள் எச்சரித்து வந்த காலம் இருந்தது.
ஆனால் அங்கு இருப்பது பேய் அல்ல. மூவாயிரம் ஆண்டு பழமையான வரலாற்று பொக்கிஷம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
வரலாற்று ஆர்வலரும் அரசு கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியருமான நடராஜன் இந்த இடத்தை ஆய்வு செய்த போது தான் உண்மை தெரிய வந்தது.
நம்ம தினமலர் குழுவும் அவருடன் சேர்ந்து கோப்பாஹள்ளிமேடு பகுதிக்கு போனது. அங்கு கண்ட காட்சிகள் வியப்பையும் பிரமிப்பையும் தந்தது.#coimbatore #historicalPlace #Archaeologicalsite #Dinamalar
11 июл 2024