#sanidhosham #pariharam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க சனி தாக்கத்தில் இருந்து தப்பிக்க எளிய வாழ்வியல் பரிகாரம் | Pariharam for Sani Dhosham For Business : Email : vangapanampannalam@gmail.com
நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசரிரு தாலும் சிலம்பும் தன்டையும் சதங்கையும் சண்முகன் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தொன்றிடினே ஓம் சரவணபவ ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா உண்மை சொல்ல வேண்டும் என்றால் நான் கும்ப ராசி என் கணவர் ,மகள் இருவரும் மகர ராசி என் மகன் சிம்ம ராசி எனக்கும் என் கணவருக்கும் சனி மகா தசை நடக்கிறது ஆனால் இப்போது தான் நாங்கள் ரொம்பவே சந்தோசமா இருக்கிறோம் ஓம் நமசிவாய🎉❤
திரு பிருகு பிரபாகர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இது வரை எந்த நிகழ்ச்சியிலும் யாரும் இவ்வளவு விரிவாக தெளிவாக சொல்லாததை அனைவருக்கும் புரியும் படி சொல்லிய உங்களுக்கு மிக்க நன்றிகள் உங்களிடம் ஜோதிடம் பார்க்கும் அனைவரும் நல்ல நிலையில் இருப்பார்கள் நன்றிகள் உங்களின் அறிவுரை எளிய முறையில் சொல்லியது யாரும் இல்லைங்க உங்களின் அன்புக்கும் என்றும் நாங்கள் உங்களிடாம் பணிகிறோம் நன்றிகள் கோவைலிருந்து பாலகிருஷ்ணன் மிகவும் தாழ்மையுடன் பணிகிறேன் நன்றிகள் கோடிங்க வாழ்த்துக்கள் நெறியாளர் திரு சாய் செந்தில் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் செந்தில் அவர்களே இதே போன்று நிகழ்ச்சிகள் பல வர வாழ்த்துக்கள்
ஐயா செந்தில் அவர்களுக்கு வணக்கம்.. உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமையாக இருக்கிறது.. நீங்கள் கடலில் மூழ்கி முத்து எடுப்பது போல பல ஜோதிடர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கின்றீர்கள்.. நல்ல விஷயம் தான்... ஆனால் என்னை போன்ற வாழ்க்கையில் பிறந்த நாள் முதல் இந்நாள் வரை எப்படியாவது ஒரு நல்ல நேரம் வந்து வாழ்க்கையில் நல்ல ஒரு நிலைமைக்கு வந்து விட மாட்டோமா? ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்ற பழமொழி நமக்கு தான் பொருந்தும் என்று புலம்பி கொண்டு எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருக்கும் என்னை போன்ற கோடானு கோடி பேர் இருக்கிறார்கள்... நாங்கள் எல்லோரும் எவனாவது சரியான வழியை நமக்கு காட்டி விடுவானா என்று அலை பாய்ந்து கொண்டு இருப்பவர்கள்... கோடீஸ்வரன்கள் கிடையாது... ரஸ்க் சாப்பிட்டு விட்டு அது செரிக்க மாட்டேங்குது என நடை பயிற்சி செய்யும் பணக்காரர்கள் அல்ல... அன்றாட அன்ன காவடிகள்.. நீங்கள் என்னவென்றால் அறிமுகப்படுத்தும் ஜோதிட சிகாமணிகள் எல்லோரும் ஒரு அப்பாயிண்ட்மெண்ட்க்கு 3000/ரூபாய், 4000/ரூபாய் என காணிக்கை கேட்பவர்களாக அறிமுகபடுத்துகிறீர்கள்... என்னை போன்ற சாமானிய மக்கள் இந்த தொகை கொடுத்து எப்படி வாழ்க்கையை மாற்றி அமைக்க, கஷ்டம் தீர அந்த ஜோதிடர்களை போய் எப்படி பார்ப்பது... ஐயா தயவு செய்து தாங்கள் அறிமுகம் செய்து வைக்கும் ஜோதிட சிகாமணிகள் அருமை, பெருமை, அந்தஸ்து னு எல்லாம் சொல்லும் போது அவர்கள் காணிக்கை எவ்வளவு வாங்குகிறார்.. அலைபேசியில் அழைத்தால் எடுப்பாரா? இல்லை படுத்து கொண்டு விட்டத்தை பார்த்து கொண்டு ரொம்ப பிஸியாக இருப்பது போல் பல நாட்கள் போனை பார்த்து கொண்டே இருப்பாரா? என சொல்லி விடுங்கள்.. ஐயா நீங்கள் எப்போதும் இப்படி காணிக்கை அதிகம் வாங்கும் ஜோதிட சிகாமணிகளைத்தான் அறிமுகம் செய்து வைப்பீர்களா?இல்லை என்னை போன்ற சாமானியனும் பலன் அடைய வேண்டும் என்ற நோக்கில் 300/ரூ..500/ரூ வாங்க கூடிய உண்மையில் ஜோதிடத்தை வியாபாரம் செய்யாமல் இறைவனின் உன்னத பொக்கிஷம் என்று உணர்ந்து இந்த கலையை தெய்வீக கலையாக எண்ணி ஜோதிடம் பார்க்கும் ரத்தினங்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? வாழ்க்கையில் வழி தெரியாமல் முழிப்பவனுக்கு வழிகாட்டி ஜோதிடர்கள்.. ஆனால் வழி தெரியாமல் திணறும் என் போன்றவர்களுக்கு நீங்கள் வழிகாட்டியாக நல்ல ஜோதிடர்களை, தெய்வீக கலையாக நினைத்து ஜோதிடத்தை மதிக்கும் ரத்தினங்களை தேடி சென்று அறிமுகப்படுத்துங்கள் அதை விடுத்து பணத்தையே குறிக்கோளாக கொண்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகளை நீங்களும் உங்கள் சேனலில் வியாபாரம் செய்யாதீர்கள்...பாவ புண்ணியம் சேர்க்கும் மானிட பிறப்பில் நல்லவர்களை சாமானிய மக்களுக்கு அறிமுகம் செய்து நீங்களும் நீங்கள் அறிமுகம் செய்து வைக்கும் ஜோதிடரும் அதனால் பயன் அடைய கூடியவர்களின் புண்ணியமும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உறு துணையாக இருந்து இறைவனின் கருணையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்... அந்த அடிப்படையில் இனி வரும் காலங்களில் நல்லவர்களை நாணயமானவர்களை சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் மாற அறிமுகம் செய்து வையுங்கள் எனற நம்பிக்கையுடன் ஒரு சாமானியன்.வாழ்க வளமுடன்.. நன்றி.
😂😂😂😂 நீங்கள் எந்த அளவுக்கு ஜோதிடர்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. விதியை மாற்ற ஜோதிடர்களால் முடியாது. ஜீவசமாதி வழிபாடு செய்யுங்கள் எல்லாம் நலமாக அமையும்.
நீங்கள் இவ்வளவு ஜோதிடர்கள் பேட்டி காண்கிறீர்கள் நேரில் சென்றால் ஐந்து நிமிடம் பேசிவிட்டு உங்கள் நேரலையில் பேசுவதற்கு நேர் மாறான நிலை தான் உள்ளது இவரை நான் கூறவில்லை சாய் செந்தில் உங்கள் அலைபேசி எண் பதிவு இடவும் நான் பார்த்த சந்தித்த யு டியுப் ஜோதிடர்கள் அனுபவங்களை நான் தனிப்பட்ட முறையில் பகிர்கிறேன் மக்கள் பணம் கொடுத்து இவர்களிடம் கேட்டால் சரியான பரிகாரம் விளக்கம் இல்லை நான் கூறுவது இவர் இல்லை சாய் நீங்கள் பேச வேண்டும்
Sir romba nanri sir romba azhaga anba utharanam solringa neenga nalla irupinga nalla irykkanum ungalukku anaithum kidaikkatum sir mana niraiva solren sir thanqqqq❤
அருமையான அற்புதமான பதிவு, ஐயா அவர்களின் சாத்வீக சமயோசிதமான வார்த்தை மிக்க கேட்பதற்கு ஆறதலாக உள்ளது, தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள், எளிய பரிகாரங்கள் மிக்க நன்றி பயனுள்ள தகவல்களையும் வழங்கியுள்ளார் 🙏🙏
ஐயா... நான் திருவோணம், மகரம், துலா லக்கினம்... கடந்த 3 ஆண்டுகளாக(ஐயா கூறியது போல் )ஹோட்டல் இலை எடுப்பவர்களுக்கு நான் பணம் கொடுத்து வருகிறேன்... என்னை அறியாமல் நான் செய்தது... இதை ஐயா கூறியதால் அகமகிழ்ச்சி அடைந்தேன்... நன்றி ஐயா... 🙏🏻 சாய் செந்தில் ஐயாவிற்கு நன்றி... 🙏🏻 வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்... 🙏🏻
Sir en life la elanthutu nikuren., please en jathagam ivar kita kati enaku oru sani bagavan parigaram sona nan nambikaiyoda seinji elantha en valkaiya meetupen
வணக்கம் அய்யா நானும் உங்களைப்போலவே ஓட்டல்ல சாப்பிட செல்லும் போது என் இலையை யார் எடுக்கிறார்கள் என்பதை கவனித்து அவருக்கு உதவி செய்வது தான் என் பழக்க வழக்கம்