சாரு மற்றும் சுபாஷ் இன் பிரிவிற்கு காரணம் என்ன | Tamil | Srilankan Tamil | Mr Suman #jaffnavlog #fishing #swisstamil #mrsuman #food #suryalankabeach #skvlog #srilankavlog
சுமண்💙ப்ரோ நீங்க எல்லாம் வாழ்க்கையில சந்தோசப் பட வேண்டிய ஆக்கள் ஏன் என்று கேட்டா உங்களுக்கு கிடைத்த அத்தான் மார்கள் அன்பானவர்கள் எனக்கு எல்லாரையும் றொம்ப பிடிக்கும் இவர்கள் சந்தோசமாக வாழ்வார்கள் சீக்கிரம் இவர்களுக்கு ஒரு குழந்தை கிடைக்க இறைவன் அருள் புரிவாராக வாழ்க சந்தோசமாக எல்லோரும்👌👌👌.👌👌👌
உண்மை வாழ்க்கையில் புரிந்துணர்வு முக்கியம் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் கொஞ்சக் காலம் பிரிந்து இருக்கும் சூழ்நிலை வந்தாலும் அந்த இடத்தில் நம்பிக்கை புரிந்துணர்வு இருக்குமாயின் கண்டிப்பாக அது நிரந்தரமாகபிரிக்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் இருவருமக்கும் புரிந்துணர்வு இருக்குமாயின் கடவுளால் கூடஇருவரையும் பிரிக்கமுடியாது
எனக்கு சுபாசாய் பிடிக்கும் நல்ல பிள்ளை ,குழந்தை மனம்,குழந்தை என்றால் சுபாஷுக்கு நிறைய பிடிக்கும் பார்கும் வீடியோக்களில் குழந்தை உள்ள விட்டில் நல்லாய் கொஞ்சிவிளையாடுவர் ❤
super super thambi suman subas saru 👌👏kalla kadhalai pattiyum kadhaiyiungo. velinaddai vida sri lanka, india ponra nadugalil intha kalla kadhal thalai ovaragi viddadhu
உங்கள் உரையாடலில் சிலது சிலது பகிடியா கதைச்சாலும் உண்மை விசயங்கள் நிறையவே இருந்தது. மற்றது சுபாஷ் மற்றும் சாரு அக்காவுக்கு ஒன்று சொல்லுங்க. இந்த சாஜஹான்-மும்தாஜ்,லைலா-மஜ்னு, அம்பிகாபதி -அமராவதி இவர்கள் போன்றவர்கள் மட்டும்தான் இந்த உலகத்தில் திருமண வாழ்க்கை வாழவில்லை. இந்த சாஜஹான் கூட கட்டிய தாஜ்மகால் தன் ஏழாவதோ பதின்னாலாவது மனைவியின் நினைவாகத்தானாம் கட்டினானாம்.இப்படி நாம் உதாரணமாகப் பார்ப்பவர்கள் கூட ஒழுங்கா வாழ்ந்தார்களா என்றால் அதுவுமில்லை. அதனாலை என் சொந்த விசயத்தை அவர்களுக்கு உதாரணமா சொல்லுறன். எனக்கு 52 வயது. மகன்(26 இப்போது நானும், மகனும் மத்திய கிழக்கு நாடொன்றில்),மகள்(20 இப்போது பல்கலைக்குத் தயாராகிறார்) கல்யாணம் கட்டியது1997.இப்ப 2024.என் குடும்பத்துடன் நானிருந்தது(இயக்கத்தில்,இறுதி யுத்தத்தின் பின் தடுப்புமுகாமில்,பின் நாட்டிலேயே வேலை நிமித்தம் வெளியே தங்கி நின்ற காலங்கள்,இப்போ வெளி நாடொன்றிலென..)குடும்பத்துடன் இருந்தது கடந்த 27 வருடங்களில் பாதியைத் தின்று மீதியாக வெறும் பத்து வருடங்கள் தான் வாழ்ந்திருப்பேன். இதிலென்ன கொடுமையென்றால் என் ஒரேமகளோ, அல்லது மகனோ... அவர்களின் பாடசாலை நிகழ்வுகளில் ஒரு அப்பாவா நான் போனதில்லை, அவர்களின் ஒவ்வொரு வருடப் பிறந்தநாளும் கண்டதில்லை.ஸ்கொலஷிப் பாஸானார்கள் அன்று நானில்லை.O/L பாஸானார்கள் அன்று நானில்லை.A/L பாஸானார்கள் அன்றும் நானில்லை.மகன் தனியே வெளிநாடென்று புறப்பட்டார் அவரை வழியனுப்ப நானில்லை.என் ஒரேயொரு மகள் பருவமடைந்தாள் அங்கும் நானில்லை.இப்போ கம்பஸ் தயாராகிறாள் இன்றும் நானில்லை.இப்படியே உதவியற்ற எம் குடும்ப வாழ்க்கையில் இனியும் என்னென்னத்திற்கு நானில்லாமல் போவேனோ தெரியாது.ஆனாலும் என் வாழ்க்கையை ஒரு பத்து வருடங்கள் மண்ணுக்காக செலவழித்தேன்.உடம்பில் எஞ்சியவை ஆறேழு புண்கள்தான்.தொடர்ந்தும் என் பிள்ளைகளுக்காக எந்த துன்பத்திலும் உழலத்தயார். என் இவ்வளவு வருட வாழ்நாளில் எந்தவித குடிப்பழக்கங்களோ வெற்றிலை கூடப் போடுவதில்லை.ஒருமுறை நட்புகளுடன் வெற்றிலைபோட்டு வெற்றிலையை வாயில் வைத்துக்கொண்டு எச்சிலை மட்டும் துப்பத்தெரியாமல் வெற்றிலையுடனே துப்பிய அனுபவமும் கண்டேன்.இது ஜோக்தான் ஆனாலும் உண்மை.இதையேன் சொல்கிறேனென்றால், என்னைப்பொறுத்தவரை மனித வாழ்க்கை முற்பிறப்பு மறுபிறப்பு இதெல்லாம் யாரும் நிரூபிக்காத கற்பனை வாழ்க்கையே.அப்படியிருந்தும் என் வாழ்நாளை என் மனைவி பிள்ளைகளுடன் கழிக்கும் காலமும் எனக்குக் கைகூடவில்லை.இடப்பெயர்வென்றால் ஒரு இருபத்தைந்துக்குமேல்.ஒரேதடவையல்ல.கடந்தகாலப் போர்ச்சூழ்நிலைகளில் பலப்பல சந்தர்ப்பங்களில்.என் மனநிலை இப்படியிருக்க ஒரு குடுமப வாழ்க்கையில் இணைசேர்பவர்கள் தங்களுக்குள் என்னென்ன ஆசைகளைக்கொண்டிருப்பார்களென்ற ரீதியில் என் மனைவியையும் நான் துன்பத்தில் விட்டேனோ என்றும் எண்ணி மனம் கலங்குறேன்.பிள்ளைகள் பிள்ளைகளென்றே என்னில் பத்துமடங்காக அவளும் தன்னைத் திடப்படுத்தியோ திசைதிருப்பியோ வாழப்பழகிவிட்டாள். ஆகவே "சுபாஷ் -சாரு" என்ற இந்த என்மனதுக்குப் பிடித்த செல்வங்களுக்கு நான் என் மனதார வாழ்த்துச் செய்தியாகச் சொல்வது என்னவெனில் நீங்கள் உங்கள் வாழ்விலிருந்து எங்கோ கீழிருக்கும் என்போன்றவர்களின் உதாரணங்களால் ஆறுதலடைந்து உங்கள் வாழ்க்கையை ஒருவர் மற்றவருக்காக அர்ப்பணித்து வாழுங்கள். வாழ்த்துக்கள். சுமன் உங்கள் இந்த வீடியோ என் மனதைக் கவர்ந்தது.இதை விளக்க இந்தப் பகுதி போதாது.நீங்க உண்மையிலும் மற்றவரை நேசிக்கும் ஒரு அப்பழுக்கற்ற பிள்ளை. 💝💯💝💯💝💯💝💯💝💯💝
எனது அனுபவத்தில் திருமணம் செய்ய்மல் இருப்பது நல்லது காரணம் அடுத்தவரை பர்ரி கதைக்காது நமது குடும்பத்தை பர்ரி போசுவோம் எனது திருமணம் காதல் திருமணம் இல்லை திருமணம் செய்யும் போது எனக்கு தான் வயது 22 கணவயம் பொறுபபுள்ள வயது 30 உளைப்பு வேலை கிடையாது குடிவகை கிடையாது நான் தான் வேலை செயது பிள்ளைகள் 4பெரை வளத்து படிக்கவைத்து திருமணம் செய்து வைத்தது 3வரை தனிய இருந்து தான் எனி என்னத்தை விட்டு கொடுத்து சகித்து நீடியவரை வாழ்வது சுமன் சபாஸ் சாரு தலைவிதி
அடுத்த வருடம் சாருவுக்கு குழந்தை கிடைக்கும்.அன்னாசிப்பழம் ,பப்பா பழம் தவிருங்கள்.அத்திப்பழம் ,அரசம் குருத்து இலை சாப்பிடலாம்.FROM CDN MONAA COOK/CANADA