சித்தர்களை குருவாக வணங்குவது எப்படி?
Siddhar Vazhipadu | Siddhar Worship | சித்தர்கள் வழிபாட்டு முறை | சித்தர் வழிபாடு | சித்தர் தரிசன மந்திரம் | சித்தர்களை காண மந்திரம் | 18 சித்தர்கள் மந்திரம்
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு
ஓமெனும் ஓங்காரத்துள்ளே பல பேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே!
- திருமூலர் -
அனைவருக்கும் மேலான குரு இறைவனே! சாதித்த புண்ணியர்களுக்கும், சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் இறைவனே மேலான குருவாக இருப்பார். இதை உணர, அல்லது உணர்த்தி வழிகாட்டிட, ஒரு நல்ல மானிட குரு தேவை.
தகுதியானவர்கள் ஞானத்தேடலை உணர்ந்த மெய்யான குரு அவர்களைத் தேடி வந்து ஆட்கொண்டு வழிநடத்துவார். அப்போது அந்த மேலான குருவின் பாதங்களை கள்ளமனமின்றி பற்றி பணிந்து பயன்பெற வேண்டும் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.
உள்ளங்கையிற் கனிபோல பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைகத் தள்ளிக்கண்டு கொண்டன்பாய்க்
களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே.
- பாம்பாட்டிச் சித்தர்.
#aalayamselveer #siddharvazhipadu
9 сен 2024