சாஸ்திரிய சங்கீதம் தெரியாதவர்களுக்கு புரியும் வகையில் ஆலாபனை செய்து அற்புதம் செய்யும் டாக்டர் நாராயணனுக்கு ஜே. என்ன ஒரு அருமையான குரல் வளம்...அருவி போல கொட்டுகிறது குரலும் பாடலும்.. காலை முதல் இரவு வரை உங்கள் குரலை கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது...சாப்பாடு உறக்கம் எதுவுமே வேண்டாம். பொதுவாக ஒருவரை பேட்டி எடுக்கும் போது அவரிடமிருந்து பல விஷயங்களை வெளிக் கொணருவதுதான் பேட்டியாளரின் திறமை. அதை அருமையாக செய்துள்ளார் சரண்யா. நன்றிகள் பல. கடந்த ஒரு மாதமாகத்தான் உங்கள் சேனலை பார்க்க ஆரம்பித்துள்ளேன். இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டோமே என்கிற வருத்தம். ஆனால் அதை தன் குரலால் போக்கிவிட்டார் டாக்டர் நாராயணன். உங்கள் இருவருக்கும் கடவுள் ஆசிகள் என்றென்றும் இருக்கும்
இளையராஜாவை கார்னர் பன்னி சில புல்லுருவிகள் ஊடுருவி பேசுகின்றது அவரின் இசை ஞானத்தை பிரதிபலிக்க உலகத்தில் இன்னும் ஒருவர் பிறக்கவில்லை இந்த பிரபஞ்சத்தில் தமிழனாக நமக்கு கிடைத்த வாரம்தான் இசைஞானி இளையராஜா வணங்குகிறேன் நன்றி 👍👍👍❤️❤️❤️
அண்ணாச்சி அவருடைய திறமையில் யாருக்கும் ஐயமில்லை. இசைக்கு நான் தான் ராஜா என்று மமதையில் சொல்வதுதான் தவறு. எம் எஸ்வி யும் இந்த ராகத்தில் கண்கள் எங்கே என்ற பாடலும் சிறப்பே.
சுடர் விளக்கு ஆயினும் ஒரு தூண்டுகோல் வேண்டும். 🪔 கீதையை உபதேசம் செய்யக் கண்ணனுக்கு ஒரு அர்ஜுனன் தேவைப் பட்டான். இங்கு இராக தேவதைகளைக் காட்டுவதற்கு ஒரு கலைச் செல்வி தேவைப் படுகின்றார்.🎉 வாழ்க இவர்கள் கூட்டணி.❤ தன்யாசி ராகம் பட்டுப் போல மென்மையானது. சுத்த தன்யாசி அதைத் தூக்கி சாப்பிட்டு விட்டது! வள்ளுவர் வாக்கு மெய்யே! செவிக்கு உணவு இல்லாத போது தான் வயிற்றுக்குத் தேவைப்படுகின்றது. இந்த செவியின் உணவு ஒருபோதும் வயிற்றை ரிப்பேர் செய்யாது.😊 அஜீர்ணம் ஆகாது.😊
நேரம் போவதே தெரியாமல் கண்களை மூடி ரசிக்கக்கூடிய அருமையான இசை நிகழ்ச்சி!! டாக்டரின் அபார இசை ஞானம் வியக்க வைக்கிறத 👏👏 சுத்த தன்யாசி ராகம்/ ஸ்வர விளக்கம் அடா அடா!!! சரண்யாவுக்கும் அற்புதமான குரல். அருமையான உங்கள் நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்….
மாலையில் யாரோ, மனதோடு பேச, பாட்டு என்னை என்னவோ செய்கிறது. ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் சோகத்தை தனிமையில் எதோ மலை அடிவாரத்தில் அமர்ந்து பாடுவது போல் நான் கற்பனை செய்து கொள்வேன். ஸ்வர்ணலதாவிற்கு , ஒரு கோடி வந்தனங்கள்.
ஸ்வர்ணலதா வின் மூலம் இது போன்ற Haunting melodies வந்துள்ளன. அநியாயமாக காலன் அவரை நம்மிடமிருந்து தட்டிப்பறித்து விட்டான். இல்லாவிடில் மேலும் நிறைய treasures நமக்கு கிடைத்திருக்கும்.
புதைந்தே போகும் நம் தமிழ் இசையை தோண்டி எடுத்து உலகதமிழ் இனம் அறிய சுவைக்கவைக்கும் புத்துயிர் கொடுக்கும் நம் தமிழ் இசைவித்துவான்களுக்கு நன்றிகள் 🇨🇦 ஈழத்தமிழர்👏👏🤝
எனது favorite "மாலையில் யாரோ மனதோடு" டாக்டர் உங்கள் குரலில்... ப்பா இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரண்யா madam மிக இனிமையாக இணைந்து பாடியது ....ஜன்மசாபல்யம் பெற்றோம். மிக்க நன்றி ❤
மாலையில் யாரோ மனதோடு பேச - வெற லெவல், நெஞ்சை அள்ளும் இசை ❤ , மனசு மயங்கும், ஆயிரம் மலர்களே பாடல்களையும் எதிர் பார்த்தேன் இந்த ராகத்தில் .., Dr இன் இசை ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது ..❤❤ தொடரட்டும் உங்கள் இசை பயணம்.👌🙏
அருமை அருமை சார். மாலையில் யாரோ பாடல் எப்பொழுது கேட்டாலும் அழுதுவிடுவேன் அப்படி மனதை பிழியும் டியூன். ஸ்வர்ணலதாம்மா குரல் நம்மை மயக்கி கட்டிப்போட்டுவிடும்
‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ பாடலை விட்டுட்டீங்களே.. பாலசந்தர் இந்த பாட்டை கேட்டுட்டு இளையராஜாவை ‘இவன் ஜீனியஸ்தான்யா’ என்று கூறினாராம்.. ஏன்? சுத்த தன்யாசி மாதிரி ஒரு ஸாஸ்த்ரிய ராகத்தை கிராமிய பாட்டாக மாற்றி அமைத்திருப்பார் இளையராஜா என்கின்ற மேதை
ராகங்களில் சுரங்களில் உயிர் இருக்கிறது.....உங்களுடைய குரலாக ஒலிக்க....மெய்சிலிர்குது....DR....ஐயா எங்களுக்கு ரசிக்கதானே முடியுது...ஆழமான இசை நுணுக்கங்களை...அறிய இயலவில்லை..... more programme and more detail's needed dr....hatsoff ov you sir
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அப்படி ஒரு ஸ்வர ஆலாபனை சுத்த தன்யாசி ராகம் எளிமையாக புரியும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் இசை தொண்டு ❤❤❤
மிக அருமையான நிகழ்ச்சியாக உள்ளது. இரசனை என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியசெப்யும் நிகழ்ச்சி. இந்த உலகில் அதிசயங்கள் நிகழ்த்த மனிதர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்திய இருவரும் இறைவன் ஆசியுள்ளவர்கள்......சேவை மனது.....
@@chandrasekarb2216முத்துக்களோ...கண்கள், பூ... மாலையில் ஓர் மல்லிகை, தேடினேன் வந்தது, அமைதியான நதியினிலே ஓடம், நாளாம் நாளாம் திருநாளாம், பொட்டு வைத்த முகமோ.... இன்னும் லிஸ்ட்...பெரிசு...
நானும் மன்னரின் பரம ரசிகன்தான். ஆனால் இசைஞானியின் பாடல்களையே அதிகம் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் அவர் purist என்பதுதான். மன்னரின் இசையில் பெரும்பாலும் ராகங்கள் கலந்து வரும்
Very very excellent rendition. The way Mr. Narayanan sir explaining the swaras are great. Even the lay man like me can easily understand. Sudha dhanyasi raga swaras to hear from his voice is superb. A Full day won't be enough. Malayil yaro song is superb. Swara prastharas are great. Please continue the same in the coming episode.
Really useful programme to learn about ragad especially a novice like me.I request you to give a chance in your future programme my favourite raga Sahana.Thanks
வணக்கம் வணக்கம் ஐயா தெய்வமே நீங்க எவ்வளவு இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் மனம் அமைதி பெறுகிறது இதயம் ஆனந்தக் கூத்தாடுகிறது கடவுள் உங்களுக்கு 100 பேரும் வாயிலை நிச்சயமாக தருவார் எங்களைப் போன்ற இசை விரும்பிகள் உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் நேசிக்கிறோம் நன்றி நன்றி தேங்க்யூ
பூவரசம்பு புத்தாசு மாஞ்சோலை கீளிதானோ புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (famous பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை vs உதயமூர்த்தி argument on sudhadhanyasi) ஆசை ஆசை இப்போது இன்னும் நிறைய நனி நன்று 🎉