சுழி போடு சுழி போடு
பிள்ளையார் சுழி போடு
காரியத்தின் முதல்வனவன்
கார் இருளை அகற்றுவான்
மோதகப் பிரியனவன்
போதகத்தின் முகத்தோன்
துதிக்கையிலே அடியவரை
தும்பிக்கையால் காத்திடுவான்
நாடிவரும் பக்தருக்கு
நம்பிக்கை பொருளாவான்
தொந்தி வயிற்றோன்
தொடரும் வினை நீக்கிடுவான்
எங்கும் நிறைந்திருப்பான்
ஏங்குவோர் துணையாவான்
தஞ்சமென பணிந்துவிட்டால்
தந்திடுவான் வரங்களை
நம்பிக்கை கொண்டுவிடு
நீங்கா துயர் தீர்ப்பான்
தூயமனம் கொண்டிரு
துட்டவினை ஓட்டிடுவான்
ஆக்கம் சகாதேவன் ரஜனிமாலா
யாழ்ப்பாணம்
இலங்கை
21 окт 2024