وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰٓى اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ அவர் வாலிபத்தையடைந்து, (வாழ்க்கையில்) அவர் நிறைவு நிலையைப் பெற்றபோது அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் நாம் வழங்கினோம், இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் (நற்) கூலி வழங்குவோம். (அல்குர்ஆன் : 28:14)
பிறவிப் பயணைப் பெற்றோம் ஐயா. நன்றி ஸ்ரீ பகவத் ஐயா, வெங்கடேஸ்வரன் ஐயா. இதுவே சத்தியம்! அடுத்தடுத்த நூல்களையும் இவ்வாறு ஒலி வடிவம் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன். சரணாகதி தத்துவம் மலரட்டும். திருவருள் சித்திப்பதாக! நற்பவி.
அருமை அய்யா..மனம் இயற்கை யானது ..அதனை அப்படியே ரசித்து விட்டு போய்விட வேண்டும் ..அதனை உருவாக்காவும் முடியாது ..நிறுத்தவும் முடியாது ..அருமையான தெய்வீக உண்மை. மனதை இவ்வளவு எளிமை யாக யாரும் சொன்னது இல்லை..
என்ன அபாரமான உச்சரிப்பு. ஞானம் செறிந்த கருத்துக்கள். அனைத்தும் நானும் என் அனுபவத்தில் உணர்ந்த உண்மைகளே. நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஞானமடைவோம். நீவிர் அனைவரும் வாழ்க வளமுடன்.
வாசிப்பு மிக அருமை. ஐயாவுடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி. உண்மையான, எளிமையான தேடுதல் கொண்ட அனைவருக்கும் ஐயாவின் கருத்துக்கள் நிச்சயமாக கிடைக்கப்பெறும். இந்த தொண்டு செழிப்பாக மென்மேலும் நிச்சயமாக வளரும். - சிவக்குமார், பாளையங்கோட்டை.
வாழ்க வளமுடன்.. ஐய்யாவின் புத்தகங்களை படித்துள்ளேன், மனம் முழுமையாக எற்றுக் கொண்டுள்ளது. தெளிவு ஏற்பட்டுள்ளது. ஒரே ஒரு ஐய்யம் மனத்தில் ஓடிக் கொண்டே உள்ளது விளக்கவும்.. நான் யார்? நான் இவ்வுடல் அன்று, இம்மனம் அன்று. நான் என்பது சச்சிதானந்நமானது, எங்கும் இருப்பது, உங்களில் இருப்பது, என்னில் இருப்பது, ஒன்றாய் இருப்பது, சுத்த வெளி, அதுவே மெய்ப்பொருள்.. என்னுடைய புரிதலின் படி, நான் என்ற ஒன்று தனியே இல்லை, அது ஒன்றே ஒன்று. நீ நான் என்ற பாகுபடில்லை. மெய்ப்பொருள். சரியா? மனதிற்கு வருவோம். அதன் எண்ணங்களை, சிந்தனைகளை அதன் போக்கில் விட்டு விடுங்கள். அதனை நீங்கள் கையில் எடுத்து சரி செய்ய முயற்ச்சிப்பதால் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. எனது கேள்வி. நான் என்பது யார்? மனதை அதன் போக்கில் விட்டால் சரி என்ற கூற்றில், இது யாருக்கு சொல்லப் படுகிறது? மனம் மனத்திற்கே சொல்லிக் கொள்கிறதா? விளக்கவும். ஐய்யாவின் இணைய வழியில் எவ்வாறு இணைவது?? நன்றி. இப்படிக்கு, மெய்ப்பொருள்.
ஐயா நீங்கள் நிறைய புத்தகங்களை வாசிச்சி இருக்கீங்க நீங்க குர்ஆனை கொஞ்சம் வாசிச்சா உங்களுக்கு கண்டிப்பா ஒரு சில விஷயங்களுக்கு உங்களுக்கு தீர்வு கிடைக்காமல் இருக்கிறதா இல்லையா அத அப்படியே விட்டுட்டு கடந்து போகணும் நீங்க நினைக்கிறீங்க இல்ல அப்படி இல்ல குர்ஆன்ல எல்லா விஷயத்துக்கும் தீர்வு இருக்கு. படைப்புக்குனு ஒரு நோக்கம் இருக்கு அது என்ன அப்படிங்கறத படைத்தவனை விளங்கும் போது மட்டும் தான் விளங்க முடியும் அதை விளங்கினாதான் நம்ம வாழ்க்கையே சரியான முறையில் விளங்கி நோக்கத்தை செயல்படுத்தமுடியும்.