சில நாட்களாக உயர்திரு உமாபதி அவர்களின் நேர்காணல்களை பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உலக அரசியல் உள்நாட்டு அரசியல் தமிழ் நாட்டு அரசியல் அரசியல் சதி செயல்களை நுட்பமாக கவனித்து அது மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைக்கிறார் ஆனால் இவ்வளவு செய்தி ஆற்றலுள்ள பத்திரிகையாளர் எந்த ஒரு தொலைக்காட்சிகளிலும் பங்கேற்காதது வேதனையே
Understand something,. Interviewer kept on pushing anti BJP views on Mr. Nedumaran. Mr. Nedumaran smartly answered all the questions and evaded the sinister intentions of the interviewer. When he didn't get his needed answer, he was trying to interject him pity this guy.
தமிழர் பெருமை பற்றி உலகம் அறிந்ததே! தமிழர் யாவரும் ஒன்று பட்டால் மட்டுமே இதுக்கு விடிவுகாலம். மனிதநேய அற்ற இந்த உலகத்தில் எளியோருக்கு நடக்கும் அநீதி உலகம் முழுவதும் உள்ள அனைவரும் அறிந்ததே.
தம்பி ஜீவா டுடே தினமும் எத்தனை வீடியோக்கள் வெளியிடுகிறது ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் காரணம் மக்கள் பிரச்சனை அரசியல் பிரச்சினை சமூகப் பிரச்சினை உலகப் பிரச்சனை மக்களுக்கு தேவையான அனைத்து வழங்குவது தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காக வாழும் தம்பி ஜீவா டுடே
அருமையான பதிவு ! அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் வரலாற்று விளக்கமும் பதிலும் அருமை மற்றும் தொலைநோக்க பார்வை கொண்டதாக உள்ளது ! தமிழக அரசும் ஆர்வலர்களும் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையாக தமிழ் ஈழ சொந்தங்களுக்கு நல்லது நடக்க பாடுபட வேண்டும் !
முதலி்ல் இந்த சந்திப்புக்கு நன்றி. பிரபாகரனைப் பற்றிய விஷயத்தை தவிர.. அய்யா பழ நெடுமாறன் அவர்களின் மற்ற பழைய அனுபவங்கள் எல்லாம் மிகத்தெளிவாக இருக்கிறது. இன்று நடக்கும் எல்லா தவறுகளுக்கும் அன்றைய காங்கிரஸ் தான் ஆரம்பம்.
தம்பி ஜீவா நீங்க வேற லெவல் ஜீவா தமிழர்களுக்காக அண்ணனும் பார்ப்பதையும் தமிழ்மொழி பற்றாளர் அய்யா பழ நெடுமாறன் அவர்களையும் நேர்காணல் வைத்து எங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி
நான் இப்போது தான் முதன் முறையாக ஐயா.பழ நெடுமாறன் அவர்களின் காணொலி நேர்காணலை காண்கிறேன். நம் தமிழ் நாட்டிற்கொரு பிரட்சினை எனில் அரசியல் வேறுபாடுகளை கலைந்து சேர்ந்தெதிர்த்த முந்தைய அரசியல் தலைமைகளின் செயல்பாட்டை மிகவும் நேர்த்தியாக எடுத்துறைத்தது. மிகவும் நேர்த்தியான தெளிர்ந்த பதில்கள்.
Excellent Jeeva., You really open the eyes of other Journalists., this is the healthy initiation to making a better community. God Bless you, Jeeva,, Our support is always with you.,
இது இடியப்ப சிக்கல் பதிவாகி விட்டது. பதிவை பார்க்கும் எமக்கே தலை சுற்றுகிறது. பாவம் உமாபதி எப்படி இருந்திருக்கும்.நாள் முழுவதும் பேட்டி எடுத்தாலும் விடை கிடைக்காது.ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தேன்.கடைசியில் வடிவேல் காமெடி போலாகிவிட்டது.பதில் வரும்,ஆனால் வராது. நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦
90 வயதில் உங்கள் ஞாபக சக்தி தெளிவான பேச்சு விலைபோகாத கொள்கை உறுதி புல்லரிக்கிறது இவை அனைத்துமே உங்கள் மூலமாக இந்த செய்தியை கசியவிட்டு உலக அசைவுகளை அவதானித்து பின்னர் நிதானமாக முடிவு எடுக்கலாம்
சீர்மையும் சிறப்பும் மிக்கது இந்த நேர்முக உரையாடல் ! அரசியல் பார்வையா ளர்கள் முதல் வாழ்த்திப் பார்முழுதும் பாராட்டி மகிழும் கூர்மையும் வாய்ப்பையும் கொண்டது உமாபதி குறிப்பிட்ட வினாக் கணைகள் நன்றி மகிழ்ச்சி வாவா என்றழைத்து நாவார விசாரிக்க வைத்தது எனக்குத் தேவாமிர்தம் போற்கிடைத்த நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தேன் ஜீவா டுடே விற்கும் நன்றி மகிழ்ச்சி
வயது முதிர்ந்த நெடுமாறன் அவர்கள் பிஜேபி யை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ரகசியத்தை உங்களால் ஏன் உணரமுடியவில்லை. நன்றாக கவனிக்கும் அறிவார்ந்த வர்களுக்கு மட்டுமே புரியும் தெரியும்.
இந்திரா காந்தி இலங்கையை இந்தியாவுக்கு தனவசபடுத்தும் நிலையில் இருந்தார். அமெரிக்காவின் அன்றைய அச்சுறுத்தலும் இருந்தது. அதை செய்தால் மட்டுமே இந்தியாவுக்கு நிதந்தர பாதுகாப்பு. ஈழத்தமிழருக்கு சிங்கள அரசால் நடந்திட்டிருந்த கொடுமைகளை இந்திரா காந்தி பார்த்தார் 30 ஆண்டுகள் தந்தை செல்வாவின் அகிம்சை போராட்டம் கூட இந்தியாவும் கண்டு கொள்ளவில்லை ... பின்னர் படிப்பிலும் கைவைக்க இளைஞர்கள் இரத்தம் கொதித்ததை இந்திரா பார்த்தார் இளைஞர்களுக்கு ஆயிதத்தை வளங்கினார். விடுதலை புலிகளுக்கு மட்டும் வளங்கவில்லை வேறு நிறைய இயக்கத்திற்க்கும், இதில் கொடூர இயக்கங்களுக்கும். பின்னர் தலைவர் வழியில் மக்களுக்கு பாதுகாப்பு விடுதலை புலிகளின் மனதை வென்ற பெரும்பான்மை மக்கள். விடுதலை போராட்டம் உரிமை கேட்டு தொடங்கியது பின்னர் தனி ஈழம் கிடைத்தால் மட்டுமே ஈழத்தமிழர் உரிமையோடு தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்றளவிற்க்கு முடிவுகள் எடுக்கப்பட்டது .சாதி ஒழிப்பு அனைத்தும் நடந்தது, தமிழர் தனிநாடாகிடும் இல்லையா..இந்திரா காந்தி ஆயுதங்களை திரும்ப பெற முயற்ச்சியெடுத்தார் ஆனால் நடக்கவில்லை ..சிங்களமும் ஒரு போதும் இந்தியாவுடன் நிற்க்காது, 3000 ஆண்டுகள் மேற்கொண்ட கோபம் சிங்களத்திற்க்கு இந்தியாவுடன் இருக்கிறது. அயல்நாடுகள் ஒற்றுமை இல்லாவிட்டால் இப்படித்தான். சிங்கள புத்த பேரினவாதத்தின் மாசாக்கங்களும் பீடங்களும் சாதிய அடிப்படையில் தான் இயங்குது. இவர்களின் அடிப்படையே நிதந்தர இந்திய எதிர்ப்பு வாதம் - தமிழின அழிப்பு வாதம். இவர்கள் ராஜபக்சேக்களுக்கு தான் Silent "support " செய்யுது. இந்தியா இந்தியன் ஆமியை இறக்க தான் பாஜக செயற்ப்படுது, 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமூல்படுத்தும் இலங்கை அரசென்று இந்திய அரசு எதிர்பார்க்கிறார்கள் என்ற அறிக்கையை அண்ணாமலை வைத்திருந்தார் . அது ஏற்க்கனவே அமுலில் தான் இருக்குது ஆனால் ஈழத்தமிழர் பாதுகாப்பை கருதி மட்டுமே உள்ளே வரமுடியும். ஈழத்தமிழருக்கு இந்தியன் ஆமி செய்த நம்பிக்கைத் துரோகமும் அட்டூழியமும் மறக்க முடியுமா ... இதற்க்காகத் தான் அய்யா நெடுமாறன் காசி ஆனந்தனை வைத்து RAW BJP எழுதிக் குடுத்ததை வாசிக்க வைத்தார்கள் . எங்கட தங்கை துவாரகா தேசியத்தலைவர் உயிருடன் இருப்பதாக பின்பத்தை உருவாக்கி ஒரு புதிய இயக்கத்தை அதாவது ஏற்க்கனவே இருந்த மூன்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் 600 பேரை இந்தியன் ஆமி அழைத்துச் சென்றது அவர்களுக்கு, பிள்ளைகளுக்கு படிப்பு வசதிகள் எல்லாம் செய்து குடுத்து பேச்சுவார்த்தை நேரம் 2004 கொஞ்சப்பேரை ஈழத்தில் இறக்கியவர்கள். நாட்டுக்குள் வந்தவுடன் உண்மை தெரிந்தவர்கள் சிலர் புலம்பெயர் தேசம் வந்தார்கள். இவர்கள் பலர் இலங்கை மற்றும் இந்தியாவில் இருக்கும் நிலையில் இறக்கிவிட்டு புலிகள் தான் மறுபடியும் உருவாகியுள்ளார்கள் என்று சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு பொய்யை உருவாக்கி தமிழீழ மக்களுக்கும் கொடுமை செய்து பின்னர் இந்தியன் ஆமிகள் வரும்படியும் செய்யும் திட்டம் பாஜகவின் உளவுத்துறையின் பெரும் திட்டம். ஆக மொத்தம் தமிழீழ் தமிழினத்தை வாழவிட மாட்டார்கள். இந்தியா சீனா ... இதுக்கிடையில் அமெரிக்காவும் இந்தியா மேல் பெரும் கோபத்தில் உள்ளது. இந்தியா ஈழத்தமிழருடன் ஒரு போதும் நிற்க்காது ... தலைவர் காலம் காலமாக இந்தியாவுக்கு சொன்னார் சிங்களத்துடன் நின்றால் இந்தியாவுக்கு ஆபத்துக்கள் சீனா அமெரிக்காவல் வருமென்று ... உங்களுக்கு 90 வயது இப்ப செய்யும் இந்த வேலையால் தமிழீழ்த்தினம் பல கொடூரத்தை அனுபவிக்க வைக்கப்போறீர்கள்...
The way Mr.Nedumaran is speaking and replying seems very clear he is a scape goat of Indian Politicians, Mr.Jeeva and Umapathy Sir hatts off to this brilliant interview.
உங்கள் அருகில் 12 வருடமாய் வாடும் (அகதிமுகாம்களில்) ஈழத்தமிழனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு குடியுரிமை வழங்க எதாது செய்தது உண்டா? அது என்னடா காசு தரும் வெளிநாட்டில் வாழம் ஈழத்தமிழனிடம் மட்டும் உணர்ச்சியக்கொட்டிறீங்க ? ஈழத்தில் ஊனமுற்ற போராளிகளுக்கு/மக்களுக்கு என்ன உதவி அளிதீர்களா? மாவீரர் குடும்பத்துக்கு துணை இருந்துத உண்டா? போரில் சாகும் போதாவது 1000 பேர் ஆவது கடல் கடந்து வந்தீர்களா? பிறகு என்ன இதுக்கு எங்களை வைத்து பொழைப்பு நடந்துகிறீர்கள்? கட்சி அடிமட்ட தொன்டர்கள்/மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் வந்தவன் இருக்கிறான். ஆனால் தலைமையிடம் கூவத்தையும் விடவும் நாற்றம் அதிகமா இருக்கு.
சகோதரன் ஜூவாவுக்கு நன்றியும், வாழ்த்தும். நான் நினைத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இதுதான் உங்களின் அக்கறைக்கும், திறமைக்கும் அடையாளம். ஐயா. மாறன் அரசியல் செய்தவர், செய்கிறவர். திரு. சபாபதி அரசியல் தெரிந்தவர். திறமை மிகுந்த சபாபதி அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பொறுமையும், வரலாறு அறியும் ஆர்வம் அவசியம். பழம்பெரும் அறிஞர்களின் அனுபவம் நமக்குத் தேவை; அவசியம். இது சரியான நேரம், நல்ல கலந்துரையாடல். வாழ்க, நமது Jeeva Today ஊடகம்.
உன்னதமான பதில்கள், உமாபதி அவர்கள் ஊடகவியலாளர் தர்மத்தை காக்க வேண்டும். ஐயா சொன்னது போல ,கேள்வி கேட்டபின் பதில் சொல்வதற்கு முன் அடுத்த கேள்வியை கேட்காமல் இருந்திருந்தால் ஐயா நெடுமாறன் அவரகளிடமிருந்து அதிகமான செய்திகளை எங்களுக்கு கிடைக்க நீங்கள் உதவியிருக்கலாம்.
நெடுமாறன் ஐயாவின் வீயுகம் காலம் கடந்துவிட்டது எனபது தான் எதார்த்தம், இந்த காலத்து அரசியல் வாதிகளை பற்றிய தெளிவும் சரியான புரிதலும் இவர் தலைமுறையினருக்கு புரிய வாய்பில்லை.
நெடுமாறன் அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் நெறியாளர் உமாபதி அவர்கள் அவருடைய நேர்மைக்கு வழி விட்டு மிகப்பெரிய உயர்ந்த நேர்மையான அய்யா நெடுமாறன் அவர்கள் நமக்கு தோன்றியவை மட்டுமே நேர்மையானவை என்று எண்ண வேண்டாம் அவரிடம் உள்ள நேர்மை உங்களுக்கே எனக்கு மற்றவர்கள் இருக்க வாய்ப்பு இல்லை ஐயா அவர்கள் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நேர்மையாளர் ஐயா அவருக்கு வாழ்த்துக்கள்
நெடுமாறன் ஐயா அவர்களின் நேர்மை, தொலைநோக்கு பார்வை... நமது தமிழர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 🙏 ஐயாவை பின்பற்றி செல்வது... உலக தமிழர்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் 👍
அய்யா. பழ நெடுமாறன் அவர்களது தெளிவான உரையின் விளக்கம் தொடர்பாக அவரது கருத்துக்களை த் தொடர்ந்து தமிழர்களாகிய நாமே அவரைத் தொடர்ந்து துன்புறுத்துதல் தயவுசெய்து தவிர்க்கப்படுதல் வேண்டும். மணிராஜன்...
இருவரின் கேள்வியும் பதிலும்.அருமை..இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஜீவ மிகவும் பாராட்டுக்கு உரியவர்..கேலிக்கு பதில் மிகவும் சாமர்த்தியமாக சாதுரியமாய் மாநில அரசில் கட்சிகள் பொதுநோக்கிர்க்கு ஒன்று படாமல் இருப்பதை சூசகமாக சுட்டிக்காட்டி தன் கொள்கையில் திரம்படனிற்கும் அய்யா நெடுமாறன் பழம் பெரும் அறிவாளி அரசில்வாதி எண்ணத்தை நிரூபித்து விட்டார். வாழ்க யியவின் கூற்றில் ஒரு நன்மை விலிந்த்ல் சரி
உமாபதி அழகாக கேள்விகளையும் விளக்கங்களையும் முன்வைக்கிறார். ஆனால் திரு நெடுமாறன் அவர்களுக்கு தற்போது மத்தியில் ஆளும் கட்சியின் மீது உள்ள மென்மையான ஆதரவு நன்கு தெரிகிறது.இன்றைய அரசியல் சூழ்நிலையை விட்டுட்டு பழைய கதைகளை கூறிக்கொண்டு இருக்கிறார்.
சிங்கத்தையும் சிங்கத்தையும் நேருக்கு நேர் மோத விட்டுட்டீங்களே சிவா அண்ணா .....தமிழர்களுக்கே உள்ள வீரமும் நெஞ்சுரமும் மிகுந்த இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி மிகவும் வியப்பளிக்கத்தக்கது ......அண்ணன் உமாபதி பேச்சுக்கு மட்டுமில்ல நெஞ்சுத் துணிவு மிக்கவர் என்பதை மிகவும் மிகவும் ஆணித்தனமான கேள்விகளை அள்ளி இருந்துள்ளார் மிகவும் மகிழ்ச்சி
நேரடியான கேள்விகள்...சுற்றி வளைத்து பதில் அருகில் கூட வரவில்லை...பா.ஜ.க வில் சேர்வதற்கான அனைத்து தகுதிகளும் இவரிடம் வந்து விட்டன...கருணாவிற்கும் உமக்கும் என்ன வேறுபாடு . ...
மூன்று தலை முறையாக ஒட்டுமொத்த நாட்டின் அரசியலை நன்கு ஆராய்ந்து புரிந்து கல்லூரி மாணவப் பருவத்தில் இருந்து இன்று வரை ஒரு தலைவராக நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்
நேர் விவாதம் மிகவும் சிறப்பு! திரு ஜீவா மற்றும் திரு உமாபதி அவர்களுக்கு நன்றி! மே 18, 2009.அன்று சென்னை தூர தர்சன் அருகில் உள்ள ஒரு அரங்கில் (அன்றைய தினம், ஈழ மக்களின் விடுதலை போர், முற்றிலுமாக அழிக்கப் பட்ட நாள்) அண்ணன், மேதகு பிரபாகரன் அவர்கள் கடல் வழியாக தப்பிச்சென்று விட்டார்.என திரு பழ நெடுமாறன் அரிவித்தார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அடியே னும் அந்த செய்தியை நம்பினேன். ஆனால், சமீப காலமாக வரும் செய்திகள் அண்ணன் மெதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு உள்ளார் என்பது தவறான செய்தி என்று நம்ப நம்பவேண்டிஉள்ளது திரு உமாபதி சார்! மிக அருமையாக நேர் மையாக சிறப்பான கே ள்விகளை கே ட்டீர்கள். அருமை! நன்றி!
Jeeva you have designed for a wonderful meeting of writer Umapathy with the thamizh nationalist Thiru Pazha Nedhumaran.I think in fact I am happy that this is the way to sort out issues with different factions of Thamizh nationalist and Eazhath Thamizhar. Thank you Jeeva a crore times.
அருமையான பேட்டி திரு உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள், கேள்விகளுக்கு பதில் தெளிவாக இல்லை அல்லது பதில் சொல்ல மறுக்கிறார் கேள்விகளுக்கும் பதிலுக்கும் சம்மந்தமே இல்லை.
பத்திரிக்கையாளர் திரு உமாபதி அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய நேர்மையான ஊடக விவாதம் போற்றத்தக்கது மிகுந்த மதிப்புடையது அதைப்போன்று உயர்திரு பழ நெடுமாறன் அவர்களின் செயல்பாடுகள் கருத்துக்கள் கொள்கைகள் இவை அனைத்தும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மதிக்கப்பட வேண்டியது நன்றி செலுத்த வேண்டியது நாடே அவரைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாட வேண்டியது என்பது உண்மை ஆனால் வயது மூப்பின் காரணமாக அவருக்கு சில குழப்பமான கொள்கைகளையும் கருத்துக்களையும் சரி என்று நம்புகிறார் அதனால் இனிமேல் வரும் காலங்களில் தமிழர்கள் அவரைக் கொண்டாட வேண்டியதுமில்லை மதிக்க வேண்டியதுமில்லை என்பதை உணர வேண்டும் அவர் சொல்லும் கருத்திலிருந்து ஒரு கட்சியும் இன்னொரு கட்சியும் எதிரி எதிர் நிலைப்பாட்டை கொண்டு இருந்தாலும் அரசியல் தேர்தல் கூட்டணி என்று ஒன்று வரும்போது இருவரும் எப்படி கூட்டணி வைக்கிறார்கள் என்று கேட்கிறார் அதையே அவரிடம் கேட்டால் இந்த தேசிய கட்சிகள் அனைத்துமே தமிழர்களுக்கு எதிராகத் தானே இருக்கிறது அவர்களோடு நீங்கள் எப்படி கூட்டு சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிடுகிறார் என்று கேட்டால் அதற்கு அவரிடம் பதில் இல்லை எனவே இனி வரும் காலங்களில் பழ நெடுமாறன் அவர்களை நன்றி பாராட்டும் மதிக்கவும் தேவை இல்லை என்பதை தமிழ் சமூகம் உணர்ந்து அவரை புறக்கணித்து செயல்படுவது என்பது உலக தமிழர்களுக்கு உலக தமிழர்களுடைய நல்லுறவுக்கு ஒற்றுமைக்கு மிக மிகச் சரியானதாக இருக்கும்
பத்திக்கை விதிபடி சாதுர்யமான கேள்விகள் அதற்கு சாதுர்யமான பதில்கள் பலே பொருள் என்ன ஈழமக்களுக்கு பஞ்சத்தை போக்கி அரசியல் வழியாக உரிமை பெற நான் எந்த எல்லையும் அடைவேன் அற்புதம்
ஐயா நெடுமாறன் அவர்களே தங்களின் பார்வையில் மிக அதிக அளவில் கோளாறுகள் இருக்கிறது முடிந்தால் அதை மாற்றி அமைத்து கொள்ளுங்கள். தங்களது கருத்துக்களை எங்கே வேண்டுமானாலும் பேசுவேன் என்று கூறுவது மிகவும் அற்பத்தனமாக இருக்கிறது எங்கே பேச வேண்டுமோ அங்கே பேச வேண்டும் அது புத்தி சாலித்தனமாக இருக்கும். வயதாகிறது விட்டதல்லவா அதனால் புத்தி வேலை செய்யாது என்பது நிதர்சனமான உண்மை உமாபதி சார் தங்களது நிலையில் இருந்து எப்போதும் மாறவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உமாபதி சார் அருமையா,கண்ணியமான தர்க்கம் பெரிசா பேசாம கேள்வி கேட்டீங்க! ஆனா ஐயா பழ நெடுமாறன் பேச்சில் பழைய செய்திகளை பேசுற போதும் உள்ள தெளிவு, தற்போதைய செய்தி பற்றி பேசுற போது தெளிவில்லை!
ஜீவா மற்றும் உமா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். தமிழனுக்கு தலைவன் கிடைத்து விட்டான் என்று நற்செய்தி கூறிய ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் ஓங்குக ஒற்றுமை. தமிழ் சொந்தங்களிடம் நிலவட்டும் நிம்மதி...
உண்மை தெளிவாக தெரிகிறது. பழ. நெடுமாறன் ஐயா மீது இருக்கும் மரியாதை மேலும் அதிகரிக்கிறது... 🙏 கேள்வி கேட்பவர்கள் சற்று நிதானமாக செயற்பட வேண்டும்... மற்றபடி இது ஒரு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்...
This fellow will talk all unnecessar points, will never come to topic of discussion. This is the problem with him, very cunning fellow. He may get some award like Bharat Ratna .
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. பிரபாகரன் அவர்கள் களத்தில் நின்று போராடும் போராளி என்றுதான் நமக்கெல்லாம் தெரியும். அவர் போராட்டக் களத்தில் இருந்து உயிரைப் பாதுகாக்க தப்பிச் சென்று இருப்பார் நம்ப கடினமாக உள்ளது
Great work Jeeva and Mr. Umapathi. Good journalism is about finding truth on an issue and Mr.Umapathi tried his best with different questions but Aiya Nedumaran stick to his answers by not giving any evidence. We should have a QA with Mr. Umapathi as a follow up post interview on his thoughts
Poi solrathula yennadaa Arivu irrukka povuthu ? Neengealaam thirunthavea maateengalaa? He is living in the past ! He should come to reality of today's politics. Those days are golden period where Anna, KAMARAJAR, Rajaji & Periyaar did wonders for the cause of common people of this lands, ever since MGR & JJ came to politics in TN politics has become extremely dirty and we can't survive in this politics at all.