ஆரூர் அருள் அருமை ஊரையும் காட்டி பாடியும் காட்டி ஆரூருக்கு பெருமை சேர்த்து தேரை காட்டி அசையும் கொடி காட்டி ஆரூருக்கு பெருமை தொடரட்டும் உங்கள் பணி வளரட்டும் திருமுறை பாடல்கள் .
வெள்ளை மண்ணில் இருந்து கொண்டு, வேதம் படிக்கும் இச் சிறுமிகளைத் தலை வணங்கி வாழ்த்துகிறேன். பக்தி ரசம் மேலோங்க, இவர்கள் பாடுவதைக் கேட்க மெய் சிலிர்க்கிறது . நல் வாழ்த்துக்கள்
மிக இனிமையாக, அனுபவித்து பாடியுள்ளனர். "அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்" என்று பாடியபின் "அத்தன் ஆரூர் அத்தன்" என்று இரு முறை பாடுவது அழகு. திருவாரூர் தேரழகை காட்சிப்படுத்தியுள்ளது சிறப்பு.
இனிமையான குரலில் அருமையாக பாடியுள்ளார்கள். திருவாரூர் தேரின் அழகை நேரில் கண்டது போல் இருக்கிறது காட்சியமைப்பு. அதுவும் "பத்தர்களோடு பாவையர்சூழ" என்று பாடும் போது சரியாக தேரினை பக்தர்கள் இழுக்கும் காட்சி இடம்பெற்றிருப்பதும், "வெண்கொடியோடு விதானங்கள்" என்று பாடும் போது கொடியினைக் காட்டும் போதும் மெய்சிலிர்க்கிறது. மேலும் சிறார்கள் அத்தான் ஆரூரா என்று ராகம் பாடுவது அவர்களது திறமையை பறைசாற்றுகிறது. அதுவும் இளைய சகோதரி நாளால் அது வண்ணம் என்று பாடும் போது இரு கைகளையும் தூக்கி, அப்படி தான் என்று செய்வது அவர் இப்பாடலை எவ்வளவு ரசித்து பாடுகிறார் என்பதைக் காட்டுகிறது. அருமை அருமை. வாழ்த்துகள் அனைவருக்கும்.
அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் கொய்ம்மலர் வாவித் தென் திருவாரூர் கும்பிட்டே உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் 🙏 எம்பிரான் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி 🙏 எம்பிரான் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி 🙏 மிகவும் அருமை 🙏 பெருவாழ்வு வந்தது 🙏
ஓம் நமசிவாய காரைக்கால் அம்மையார் திருவடிகள் போற்றி போற்றி திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி போற்றி சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி எம்பெருமான் ஈசன் திருவருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி விண்ணப்பம் செய்யப்படுகிறது திருச்சிற்றம்பலம் . கணம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம்தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கன்களே .
திருமுறை - 4 பதிகம் - 21 தலம் - திருவாரூர் பண் - குறிஞ்சி திருவாதிரை திருப்பதிகம் பாடல் 1 முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள் அத்தனாரூ ராதிரைநாளா லதுவண்ணம். பொழிப்புரை : எம்பெருமானுக்குவிழாக்காலத்திற் கொண்டு செல்லப்படும் நிவேதனப் பொருள்களின் பின்னே முறைப்படி பத்தி மிக்க ஆடவரும் மகளிரும் மாவிரதியரும் சூழ்ந்துவர, வெள்ளிய தலை மாலையை அணிந்த திருவாரூர்த் தலைவன் முத்துக்களால் அமைக்கப்பட்ட மேற்கட்டியின் நிழலிலே அழகிய பொற்காம்பினை உடைய கவரி வீசப்பெறச் சிறப்பான செயற்கையழகோடு திருஆதிரைத் திருநாளில் வழங்கும் காட்சி அது. அது என்று எப்பொழுதும் அடியவர் மனக்கண் முன் நிற்பதாகும். பாடல் 3 வீதிகடோறும் வெண்கொடியோடு விதானங்கள் சோதிகள்விட்டுச் சுடர்மாமணிக ளொளிதோன்றச் சாதிகளாய பவளமுமுத்துத் தாமங்கள் ஆதியாரூ ராதிரைநாளா லதுவண்ணம். பொழிப்புரை : வீதிகள் தோறும் வெண் கொடிகளும் மேற் கட்டிகளும் சிறந்த பவளங்களாலும் முத்துக்களாலும் புனையப்பட்ட மாலைகளும் தம்மிடையே பதிக்கப்பட்ட மணிகளால் பேரொளியை வெளிப்படுத்த, எல்லாப் பொருள்களுக்கும் முதல்வனாகிய ஆரூரனுடைய திருவாதிரைத் திருநாளின் பெருவனப்பு எப்பொழுதும் அது அது என்று அடியவர்கள் நினைக்குமாறு உள்ளது.