அம்மா தாயே ஸ்ரீ வாராஹியம்மனே.உனக்கு என் நமஸ்காரங்கள்.உத்திரகோசமங்கை கோயிலுக்கு வந்து விரளி- மஞ்சள் மாலை அணிவித்து விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்தேனே.அம்மா தாயே ஸ்ரீ வாராஹியம்மனே என் மகனுக்கும் மகளுக்கும் ஏன் இன்றுவரை தொடர்ந்து இன்னும் வரன்கள் அமையவில்லை ? தாயே ஏதும் நடக்கவில்லையே . நிம்மதி இல்லாமல் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். அம்மா வாராஹி அம்மனே உன்னை மனமார்ந்த உணர்வுகளுடன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.நன்றி.
அம்மா எங்களுடைய வாழ்க்கைக்காக நீங்கள் இந்தப் பதிவை கொடுப்பதற்கு எத்தனை தேடுதல்கள் செய்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் போது உங்களை கண்டுபிடித்து கொடுத்த பெருமாள் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள். நீங்கள் நோய்நொடி இல்லாமல் நீடுடி வாழ்க❤❤
அம்மா உங்களுக்கு இறை அருள், நல்ல நிம்மதியான சந்தோசமான மனநிறைவான செல்வ செழிப்பான நோய் நொடியற்ற நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இதே போல் மன அமைதிக்கு இழந்த சொத்துக்கள் மீட்க நில பிரச்சனைகள் முற்றிலும் தீர கடுமையான எதிரி தொல்லை நீங்க எதிரிகளால் உயிர் பயம் நீங்க எதிரிகள் செய்யும் கெடுதல்கள் நீங்க தங்கள் சொத்துக்கள் மீட்டு வர அனியாத்திற்கு துணை போகும் அரசு அதிகாரிகள், புரோக்கர்ஸ், கைதூக்கிகள் சதி திட்டம் தொல்லைகள் நீங்க மற்றும் சதிகாரர்கள் செய்யும் மாந்ரீக பாதிப்புகள் உடனே நீங்க தங்கள் சொத்து விற்று முன்னுக்கு வர,தங்கள் சொந்த சொத்துக்கள் விற்பதை தடை செய்யும் (நிலம்) சதிகள், செயல்கள் முற்றிலும் நீங்க, பயங்கள் நீங்க, அரசு அதிகாரிகளின் அநிதிகள் லஞ்சம் நீங்க மிக பவர்புல் பரிகாரங்கள் தெய்வ வழிபாட்டு முறைகள் உடனே மிக விரைவில் சொல்லும்மாறு கேட்டு கொள்கிறேன். இந்த பதிவு எல்லா கஷ்டபடும் மக்களை காக்க உதவும். கடவுளை முழுமையாக நம்பும் மக்களுக்கும், ஆதரவு இல்லாமல் நேர்மையாக வாழ்பவர்க்கும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. சொத்து இருந்தும் மற்றவர்கள் தொல்லைகளால் அனுபவிக்க முடியாமல் கடவுளை நம்பி வாழ்பவர்க்கு வர பிரசாதமாக அமையும். தங்களின் மீது முழு இறை நம்பிக்கை வைத்து மிக விரிவான அதிக ஆற்றல் உள்ள சத்தியமான வழிபாடுகள் பரிகாரங்கள் ஹோமமுறைகள் மந்திர உச்சாடண வழிபாடுகள் விரத முறைகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்
அம்மா என் மகளின் திருமணம் பிரச்சினைகாக கேட்டிருந்தேன் விரைவில் இப்பதிவு போட்டுள்ளீர்கள் மிக்க நன்றி அம்மா கடலில் தத்தளிக்கும் எனக்கு கலங்கரை விளக்கம்மாக தந்துள்ளீர்கள் 🎉
❤❤❤❤❤அம்மா வாசுகி மனோகரன் அனேக சௌக்கியத்துடன் நலமுடன் வளமுடன் நல்வாழ்வு வாழ உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை சூப்பரோ சூப்பர் தமிழ் தொன்மையானது நமசிவாய ஜிவகருன்யம் மஞ்சள்💛 கிருமி நாசினி முருகன் தட்சிணாமூர்த்தி சுக்கிரன் அம்பிகை வாராஹி கிருபைகளை நல்ல👍👍👍👍👍 விளக்கம் உங்கள் பணி தொடர்க❤❤❤❤❤
நான் எப்பொழுது உங்கள் மூலமா நான் வேறாகிய பக்தியை நான் பார்த்தது ரொம்ப சந்தோஷமா நான் எப்பொழுதுமே உங்களுடைய உங்களுடைய பட்டிமன்றம் ஒவ்வொரு தீபாவளிக்கும் பொங்கல் எப்பவும் நான் பார்ப்பேனா சின்னப் பிள்ளையிலிருந்து பாத்துட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப புடிக்கும் உங்களோட வாய்ஸ் உங்களுடைய உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் வராகியம்மன்
அம்மா!எனக்குதிருமணம் வயது 33ஆகிறதுதிருமணம் தள்ளி போய்கிறது. எனது ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளது. நான் மாதம் ஒருமுறை திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்கிறேன். வருடம் ஒருமுறை திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா அன்று அன்னதானம் கொடுத்து வருகிறேன் அம்மா!
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
நமஸ்காரம்.... என் மகனின் திருமணம் தாமதமாகும் என்று கூறுகிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.... நீங்கள் சொல்வது போல் சிவனுக்கும் அன்பான விளக்கு போட்டு வருகிறேன்
Amma en paiyanukum marageye akalaima rompa manathiku kasdama erukku nanum niraiya edam sendru parikaram pannunen amma age 33 mudiyapokuthu ethunalum solunka amma
அம்மா திருமண உறவு முறை பற்றி சொல்லுங்கள்,ஒரு பக்கம் கட்டும் முறை உள்ளது,ஒரு பக்கம் கட்டும் முறை இல்லாமல் வருது,சாதாரணமாக பார்த்தால் எங்களுக்கு அவர்கள் பிரத்தி ,marriage செய்யலாமா.