திருவாரூர் முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் (ஆரூர்,ஆவூர்,கருவூர், புகார்,உறந்தை) ஒன்றாகவும்,அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் இடமாகவும் விளங்கியது.திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை பிற்கால சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே இந்தக் கல்தேர் அமைந்துள்ளது. இவ்வூர் முற்காலச் சோழர்களின் ஐந்து தலைநகரங்களனுள் ஒன்றாக விளங்கியது. இவ்வூரில் உள்ள பாடல் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். இவ்வூரில்தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார். திருவாரூர் தியாகராஜர் கோயில்
முதன்மைக் கட்டுரை: திருவாரூர் தியாகராஜர் கோயில்
தியாகராஜர் கோயிலில் உள்ள சிவபெருமான், முருகன் மற்றும் உமையவள் ஆகியோரின் சிலையை அலங்கரிக்கப்பட்ட புகைப்படம்
திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் "தியாகராஜா" என்ற பெயர் பொ.ஊ. 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 мар 2024