நான் ஒரு இசைப் பயித்தியம் அதுவும் நாதஸ்வரம் வாசிப்பில் பழைய பாடல்கள் எவ்வளவு இனிமையாக உள்ளது.முருகன் இந்த இருவருக்கும் நல்ல ஆயுசும் உடல் நலமும் வழங்கிட வேண்டுகிறோம். 💐
தென்றலே உறங்கிவிடும்...அப்படி நீங்கள் அபாரமாக வாசிக்கிறீங்கள் ....உங்கள் இருவர் பணி சிறக்கட்டும்....பல்லாயிறம் ஆண்டுகள் நிலைக்கட்டும் உங்கள் சறப்பு...🎉❤
என்ன ஓர் ஏகாந்த அனுபவம். உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மாபெரும் இசைக் கருவியான நாதஸ்வரத்தின் கம்பீரத்தில் இந்த பாடல் புதியதொரு பரிமாணம் பெற்று மிளிர்கிறது. பாடலில் உள்ள சின்ன சின்ன சங்கதிகளைக் கூட சற்றும் பிறழாமல் வாசிப்பதைக் கேட்டு புளகாங்கிதமடைந்தேன். நீங்கள் இருவரும் பெரும் புகழோடும், வளமோடும் நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழ் இசைக்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
சித்&பிரித் அருமை அருமை இறைவன் அருளால் நலமுடன் நீடூழி வாழ்ந்து கலைபணியை தொடர வாழ்த்துகள். பல கலைஞர்களையும் உருவாக்குங்கள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான வாசிப்பு இனிமையான பாடல் ரொம்ப ரொம்ப பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏
ஒரு முறை கேட்டு விட்டேன். அதில் இருந்து தினமும் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எப்போது முடியும் என்று தெரியவில்லை. வார்த்தைகளே இல்லை அவ்வளவு இனிமையாக உள்ளது நன்றி. இசை ஒர் நோய் தீர்க்கும் மருந்து
இந்த பாடல் நான் பலதடவை கேட்டதுண்டு ஆனால் உங்கள் நாதஸ்வரம் கேட்கும்போது இன்னும் இனிமையாக உள்ளது நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழ்கிறேன் இந்த குழுவினருக்கு அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல
வாழ்த்துக்கள் நண்பர்களே மிகவும் அருமையாக நாத வாத்தியம் இசைத்து உங்களில் உள்ள திறமையை என் போன்றோர்களுக்கு வெளிபுத்தியதற்கு எனது மனதின் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றேன். வாழ்க பல்லாண்டு வளர்க நாதஸ்வர இசை
3 நாட்களுக்கு முன் தான் பார்த்தேன் ஒரு நாளைக்கு 3 முறை கேட்கிறேன் .அன்பு தம்பியேர இனி எதிர்காலம் உங்கள் வசமாகும் தொடர்ந்து எந்த இக்கட்டான சூல்நிலை வந்தாலும் பிரியாமல் ஒற்றுமையுடன் இசைக்கு மதிப்பளித்து வெற்றியை உங்கள் வசமாக்குங்கள் உற்சாகமாக
நமது கலாச்சார இசை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது மறையாது என்று நிருபித்து விட்டீர்கள். இசைக்குழு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கேட்கும் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இது.நாதஸ்வர இசையில் இந்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது.நன்றி தங்களுடைய இசை மேன் மேலும் வளர்ச்யடைய என்னுடைய வாழ்த்துக்கள்
நம் தமிழ் கலாச்சாரம் மிகவும் தொன்மையானது நம் வீடுகளில் நடைபெரும் சுபகாரியங்கள் நாதஸ்வர கச்சேரியுடன் தொடங்குவது மரபு, சகோதரர்களின் நாதஸ்வரம் மிகவும் அருமை வாழ்த்துக்கள். இப்போது இந்த தொழில் மிகவும் சிலர் மட்டுமே செய்கின்றனர், இப்போது நம் விழாக்களில் மலையாள சென்டமேலம் பிரபல்யம் ஆகிக்கோண்டுள்ளது இது நம் கலையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் எனவே நம் கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்றால் இது போன்ற கலைஞ்சர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.