அருமையான கட்டிட கலை வாய்ந்த கோவில். நான் பெருமாள் மலை அடிவாரத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் நாகலாபுரம் எனது தாயார் ஊர். நான் பிறந்த ஊர். நாங்கள் வருடா வருடம். சிறிய வயதில் நடந்து வந்து. மாவிலக்கு எல்லாம் எடுத்து கொண்டு போய் படியேறி மேலே செல்வோம். சாமி தரிசனம் செய்து விட்டு மறுபடி இறங்கி வருவோம். இப்போது. எல்லாம் தார் ரோடு போட்டு உள்ளார்கள். வேன். பைக். டிராவல்ஸ் எல்லாம் போகுது. புரட்டாசி மாதம் நான்கு வாரமும் சனிக்கிழமை நல்ல விஷேச மாக இருக்கும். எங்கள் குல தெய்வமும். அடிவாரத்தில் தான் உள்ளது. கீரம்பூர் ரோடு போகும் இடத்தில் பிச்சாயி அம்மன் எங்கள் குலதெய்வம். ஶ்ரீகோவிந்தா ஶ்ரீகோவிந்தா. பிரசன்ன வெங்கடாசலபதி. சரணம் சரணம் சரணம்