அனைத்து பள்ளிகளின் பாட நூல்களில் இந்த பாடல் அவசியம் இடம்பெற வேண்டும். மிக அருமையான கருத்துள்ள பாடல்.வாத்தியார் என்ற பெயர் MGR அவர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.
1966 இல் வந்த படம். நல்ல கருத்துக்கள் கொண்ட அழகான பாடல். அப்போது நான் படித்து கொண்டிருந்த போது ஆசிரியர்கள் இந்த பாடலை குறித்து எங்களிடம் இதேபோல் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியது என் நினைவுக்கு வருகிறது.
நாலணா தரைக் கட்டணத்தில் நண்பர்களுடன் பார்த்தேன்! இருபத்தைந்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சியில் பார்த்தேன்! நாற்பதாயிரம் மதிப்பு கைபேசியில் பார்க்கிறேன்! ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பைத் தந்த ,மனதைக்கவரும் அற்புத மனிதர் இன்று மட்டுமல்ல ; எந்தக்காலமும் தோன்றிக்கொண்டே இருப்பார். இந்தப் பூமியில் நாம்தான் அவரை தனியே விட்டுச் செல்வோம்!!
தங்கள் கமெண்ட் ஸூப்பர். நானும் இப்படத்தை திருச்சி, சோமரசம்பேட்டை ராஜ கணபதி டூரிங் டாக்கீஸில் 1968 ல் நாலணா கட்டணத்தில் பார்த்தது நினைவிற்கு வருகிறது. நீங்கா நினைவுகள்.
இது போன்ற பாடல்களை சிறு வயதில் கேட்டு வளர, இறைவன் அருளால் வாய்க்கப்பட்டது. இறைவனுக்கும் நமது நாட்டிற்கு நற் படைப்புகளை கொடுத்த முன்னோர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. ஒரு சிறந்த மனிதனாக வாழக் கற்றுக் கொடுத்த முன்னோர்களை வாழ்த்த, நன்றி கூற வார்த்தைகள் போதாது.
புரட்சித்தலைவரின் வலிமையை ஊக்கப்படுத்தும் வாலியாரின் பாடல் வரிகள் இதற்க்கு சான்று இது போன்ற பாடல்கள் சாகா வரம் பெற்ற பாடல்கள், மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்ற வரிகளை சென்சாரின் அறிவுறுத்தலின் படி பிறகு மாற்றியது நினைவாகுது புரட்சித்தலைவர்.புகழ் வாழ்க
தொலைநோக்குபார்வையோடு வாழ்ந்த மனிதர் எம் ஜி ஆர். சமூக சிந்தனையோடு சொல்கின்றவார்த்தைகள் அடித்தட்டு மக்களுக்கு போய் சேரவேண்டும்.என்ற என்னத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து செய்தார். கடவுள் ஒன்று அண்ணா ஒன்று எம்.ஜி.ஆர் ஒன்று கலைஞர் ஒன்று.
போற்றுதலுக்குரிய அறிவுரை.. வருங்கால தலைமுறைக்கு மக்கள் திலகம் எம்ஜிஆரை முன் நிறுத்தி கவிஞர் வாலி வழங்கிய வழிக்காட்டல் .. சின்னஞ்சிறு கைகளில் நாட்டின் சரித்திரம் இருப்பதை பாடிய இசை செல்வர் சௌந்தரராஜன்... " மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்".. என்ற பாடல் வரியை நீக்கிய தணிக்கை குழுவினர்.. சின்னஞ்சிறு பிள்ளைகளிடம் தலைவர்களின் செயலாக்கம் பாடிய திரைக்கலை. (சினிமா).. சமூக பொறுப்பு ஏற்ற என் கால திரைப்படங்கள்..
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் கடமை இருந்தால் வீரன் ஆகலாம் கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் கடமை இருந்தால் வீரன் ஆகலாம் பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப்போல் ஓஒ..ஓஹோ.. அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல் ஆ..ஆ..ஹா.. கவிதையை வழங்கு பாரதியைப்போல்.. ஆ..ஆஅஹா.. மேடையில் முழங்கு திரு வி கா போல். மேடையில் முழங்கு திரு வி கா போல். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
இந்த உலகத்திலே மனிதனே இல்லை என்று உணர்த்தும் அட்புதமான பாடல். காரணம் கருணைஉம் இல்லை. கடமையும் இல்லை. பொறுமை யும் இல்லை. உங்கள் மனசாச்சியிடம் கேளுங்கள் அதுவே பதில் தரும். Vazhka mgr புகாழ்
அந்த கால கட்டத்தில் மிக வறுமையில் இருந்த ,படிக்க கூட முடியாத என்னை போன்றவர்களுக்கு ஞான குருவாக இருந்து, நீங்கள் இன்று யாரிடமும் இல்லை என்று சொன்ன அந்த மூன்றையும் எங்களுக்கு தந்தால்தான் இன்று வரை நாங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அந்த ஆசிரியருக்கு எங்கள் நன்றி.....
நம் நாடு என்ற தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகளான வரும் தலைமுறைக்கு வாழும் நெறி பாடிய மக்கள் திலகம்... பாலூட்டிய அன்னை நடமாடும் தெய்வம்.. அறிவூட்டிய தந்தை வழிகாட்டும் தலைவன்.. விழி போல எண்ணி நம் மொழியை காக்க வேண்டும்... தவறான மனிதர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்... இப்படி எல்லாம் வளர்ந்து நாம் மன்னர்களாக ஜனநாயகத்தை பின் பற்றி வாழ சொன்ன அறிஞர் அண்ணா... வருங்கால சமூகத்திற்கு வழி காட்டும் இந்த மாதிரி பாடல்களை பாடசாலையில் ஒலிக்கும் படி செய்யவேண்டும்..
நீங்கள் இன்னும் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டுமம்மா! குழந்தைகள் எம்.ஜி.ஆரின் பாடல்களைக் கேட்டாலே போதும். நல்லவர்களாக, நல்லெண்ணம் கொண்டவர்களாக வளருவார்கள் என்பது நிச்சயம்.
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இப்போது மூன்றாவது அடியாக உலகளந்த ஒரு பெருமாள் வந்துள்ளார் மிக விரைவில் மன்னராட்சி நடக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் வாழ்க பெருமாள் புகழ்
மாபெரும் கழகத்தில் மகத்தான தலைவர்களின் வழியி உழைத்துக் கொண்டு வெற்றிக்கு துணை இருக்கும் வேளையிலே எம் உயிர் பிரிந்த போதும் இன்பமாய் கட்சிக்கு உழைப்போம் வீர அதிமுகவின் எளிய தொண்டன்
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்.. இது தான் ஒரிஜினல் ட்ராக் ஆகும். திரு.வி.க. போல் என்று திணிக்கப் பட்டுள்ளது.! இதனால் இப்பாடலின் இனிமை மட்டுமல்ல, தரமும் குறைந்து விட்டது..!
At the time I am 10th std in madras, nungambakkam high school, seen @ saidai, madras Noorjagaan theater, night show tkts only for my family members 8 persons. Good great film, dr mgr.
அவரின் வாயசைப்பிலே கண்டு கொள்ளலாம், மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்..! ஆயிரம் முறை மக்களால் கேட்கப் பட்ட பாடல் இது..! இதன் மூலப் பிரதி, அல்லது ஒரிஜினல் ட்ராக்கில் அறிஞர் அண்ணா போல் என்று தான் வரும்..! எடிட்டிங்க் செய்யப்பட்டதால் பாடலின் இனிமையுடன் அதன் வலிமையும் குன்றி விட்டது..!
தனக்கு எப்படிப்பட்ட கருத்துள்ள பாடல் வேண்டும் என்று முதலில் கவிஞர்களிடம் சொல்லி அவர் எதிர்பார்த்த அளவுக்கு வரும் வரை விட மாட்டார். அந்த குறிப்பிட்ட கவிஞரிடம் தான் எதிர்பார்த்த வரிகள் வரவில்லை எனறால் வேறு கவிஞர் மூலம் தான் எதிர்பார்க்கும் கருத்தைக் கொண்டு வந்து விடுவார். பாடலுக்கு டியூன், பாடகர் எல்லாம் அவர் தான் செலக்ட் பண்ணுவார். அதனால் தான் அவரின் கொள்கைப் பாடல்கள் நீதி நுல்களின் தொகுப்பாக எளிய மக்களையும் சென்றடைந்து வாழவாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நல்லதையும் கெட்டதையும் என்மேல் விதைத்தது யார் ? இந்த நான் என்பவன் நான் யார் ? ஒரு உயிரை உருவாக்கத்திற்கு முன் இருவர் உடல் மனநிலை எதுவோ அதன் விதை தான் நான் ? ஒரு சமுதாயம் இனம் நாடு உலகம் 800 கோடியில் நானும் ஒருவன் ? பிறப்பின் வழியாக என்ன செய்யவேண்டும் நான்? இதுதான் உண்மை ...எப்படி பட்ட வாழ்க்கையிலிருந்து தவறி குடிபோதை வாழ்க்கை இதிலே கலாச்சாரம் நகர வாழ்வியல் மோகம் ...இதன் விளைவில் நானும் ஒருவன் ...இயற்கையிலிருந்து விலகி போகிறோம்..பணம் தேவை ....மட்டுமே வியாபாரம் ...கேளிக்கை ...கல்வி ...வேலை ....திருமணம் ...இதை எல்லாம் செய்து .....இதுக்குத்தான் பிறந்தோமா ?
குறள் சொற்படி வாழ்ந்த மேதை, பொருள் தந்து உதவிய வள்ளல், கடவுள் போல் கருணை மனம் கொண்டு, அருள் மனிதர்க்கு தந்த உத்தமர், இருள் அகற்றிய மனித சூரியன், எள் அளவு குறைமற்ற தலைவர், அள்ளுவார் மனங்களை என்றென்றும்! M V Venkataraman