ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு செல்ல முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவனுக்கு தேவை யானது எதுவும் இவ் உலகில் இல்லை செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் மனமானது பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லா மும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் )நிலை கொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவு ம் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (எதிலும் நிலை கொள்ளாமை பற்று அற்று இருத்தல்)இது தான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை.இது உனர்ந்தவர்களுக்கு தான் புரியும்.பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கு காரனம் ஆசை பற்று மாயை அறியாமை தன் நிலை உனறாமை தான் காரணம்.