அருமையான பயான். நினைவு தெரிந்த நாள் முதலாக நான் பட்ட கஷ்டத்திற்கு, விளக்கமாக அமைந்தது இந்த பயான். இன்ஷா அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இது போன்ற நல்ல புரிதலை தருவானாக. அமீன்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 4428.
அல்லாஹ் நாடியது தான் உங்களுக்கு கிடைக்கும் அது நீங்கள் விரும்பும் பெண்ணாக இருக்கலாம் பொருளாதாரம் ஆக இருக்கலாம் இன்னும் மற்ற மற்ற பொருட்கள் எது வேண்டுமானாலும் இருக்கலாம் அதை அல்லாஹ் உங்களுக்கு தர எண்ணிவிட்டால் அதைத் தடுப்பவன் எவனும் இல்லை அது இறைவன் தடுக்க நினைத்து விட்டால் அதை கொடுப்பவனும் எவனும் இல்லை இதை மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் எந்த பாதிப்பும் உங்களை ஒன்றும் செய்யாது மனது திடமாக இருக்கும் உங்களுக்கு புரியும் படியாக இன்னும் சொல்ல வேண்டுமானால் உங்களிடம் மிகுந்த அழகு இருக்கலாம் மிகுந்த செல்வம் இருக்கலாம் மிகுந்த பொருளாதார இருக்கலாம் சிறந்த அறிவு திறமை இருக்கலாம் இத்தனையும் இருந்தும் ஒரு பெண் உங்களை விரும்பவில்லை என்றால் நீங்கள் நினைக்கலாம் ஏன் இடம் அழகில்லையா அறிவில்லையா பொருளாதாரமில்லையா என்ன இல்லை அவள் ஏன் என்னை விரும்ப மாட்டுகிறாள் இன்று உங்கள் மனம் பல குழப்பங்களில் கஷ்டப்படலாம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நான் மேற்கூறிய அனைத்து விஷயங்கள் உங்களிடம் இருந்தாலுமே ஒரு பெண் உங்களை விரும்பவில்லை என்றால் அல்லது ஒரு ஆண் உங்களை விரும்பவில்லை என்றால் ஒரு விஷயத்தை முடிவு செய்து கொள்ளுங்கள் அவர்களை உள்ளத்தில் அல்லாஹ் உங்களை விரும்ப வைக்கவில்லை உங்கள் மனதை யோசிக்கலாம் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் நம்மை விரும்பவில்லையே என்று இந்த இடத்தில் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ் நாடவில்லை. இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் நமக்கு ஏன் தர மாட்டேங்கிறான் என்று உங்களுக்கு தோன்றலாம் படைத்த ரப்புல் ஆலமீன் மனிதர்களின் மீது அளவற்ற அருளுடையவன் அவன் ஒன்றை நமக்கு தடுக்கிறான் என்றால் அதில் நன்மை இருக்கிறது. இறைவன் கொடுப்பது மட்டும் அருள் அல்ல தடுப்பதும் அருள் தான் ஒரு வேலை உங்களுக்கு அவரினால் சிறந்த வாழ்க்கை அமையாமல் போகலாம் பிற்காலத்தில் ஏதேனும் மனக்கசப்புகள் வரலாம் அது உங்களுக்கு தெரியாது நீங்கள் அறிய மாட்டீர்கள் மறைவானவற்றை அறிந்த ஞானமுள்ள இறைவனுக்கே எல்லாம் தெரியும் இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியது இந்த நேரத்தில் உங்களுக்கு பெரிதாக தெரியலாம் ஆனால் அல்லாஹ் ஒன்றை தடுக்கிறான் என்றால் ஆக அதைவிட சிறந்ததை கண்டிப்பாக தருவான் கையேந்திய தன் அடியார்களை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான் இது வரும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல அனைத்தும் சத்தியம் ஆக அல்லா தடுக்கிறான் என்றால் புரிந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக நன்மைக்காக இருக்கும் என்று அதற்காக ஒரு விஷயத்தை முடியவில்லை என்றால் உடனே நாம் முடிவு செய்து விடக்கூடாது அல்லாஹ் நமக்கு தடுக்கிறான் என்று நம்மால் முடிந்த அளவு முயற்சி எடுக்க வேண்டும் கடைசிவரை முடியவில்லை எனது இறைவனின் நாட்டம் இல்லை என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும் முடியவில்லை