Video tour on my native house in kanadukathan, chettinad. Audio recorded in sight, have some disturbance. This is my second video on my native house, uploaded with detail explanation for my viewers wish and request.
வாழ்த்துக்கள், இன்றும் பழமை மாறாமல் அப்படியே பாதுகாத்து வருகிறீர்கள் என்று கூறுவதைக் கேட்க சந்தோஷமாக உள்ளது.எனக்கும் செட்டிநாடு வீடுகளை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த வீடியோ தொகுப்பு என் ஆவலை ஒரளவு பூர்த்தி செய்து உள்ளது.மிக்க நன்றி. 👍😊
சினிமாவில் பார்க்கும் பொழுதே ஆச்சரியத்துடன் பார்ப்போம் இதுபோன்ற வீடுகளை இப்போது நேரில் பார்ப்பதும், நீங்கள் பராமரிப்பதும் என் கண்களில் ஆனந்த கண்ணீர். நன்றி சார்.
எனக்கு ரொம்ப ஆச்சிரியமாக, வியப்பாக உள்ளது. இவ்ளோ கலை நயத்துடன் , முன்னோர்கள் அதி பயங்கரமா க வடிவமை துள்ள நர். அவர்கள் அனைவருகும் என்னுடைய தாழ்மையான வணக்கம் ஐயா 🙏🙏🙏
Fantastic, artistic and interesting... We really admire and praise the construction and wood work! I pray Lord Muruga to bless this Chettiar family and maintain this house for more and more of their generations. Worth seeing this video 🙏
உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை! நீங்களும் பாராட்டுக்குறியவரே! மூதாதையர் கட்டி வாழ்ந்த வீட்டை இது நாள் வரை பராமரிப்பது இன்றைய சூழ்நிலையில் கொஞ்சமும் பழுதுகள் இல்லாமல் அவ்வப் பொழுது சரி பார்த்து இன்று கட்டிய தோற்றத்தில் வைத்திருப்பதும் மிகப் பெரிய பணியே! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.! உங்களது சந்ததியினருக்கும் அதே வகையில் எதிர் காலத்தில் இன்னும் பலகாலத்திற்கு செய்ய வேண்டிய அவசியம், அதன் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்துங்கள். இந்த செயல் ஆக்கங்களில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே உறுதுணையாக இருப்பார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.!
இவ்ளோ பெரிய வீடு பார்க்க அருமையா இருக்கு இதுவரை இவற்றை பாதுகாதிங்க இனி உங்கள் சமூகமும் கண்டு பொறுமை கொள்ளும் இனி வரும் காலங்களில் வாழ்த்துக்கள் ஐயா அருமை இவற்றை பாதுகாத்து எங்களிடம் இதை பகிர்துகொண்டதுக்கு நன்றி உங்கள் முன்னோர்கள் கண்டு பிரமிக்கிறேன் 👏👏👏
Amazing.Thanks for the video you shared with us Brother.Everyone who saw the video travelled on House cannot image How your ancestors built this House hundred years ago.Long Live the new geration with Health and prosperity.Vazha Vazhamudan
இந்த வீட்டின் அருகே பலமுறை கடந்துள்ளேன்... இவ்வீட்டின் உட்புறம் காண மிக ஆவலாக இருந்தேன்.... நீங்கள் மிக அருமையாக விளக்கம் அளித்து முழுவதும் காண்பித்ததற்கு மிக்க நன்றிகள்
இந்த மாதிரி ஒரு வீட்ல நான் பார்த்ததே கிடையாது ரொம்ப சூப்பரா இருக்கு இதெல்லாம் பாரம்பரிய அழியாத சொத்துக்கள் நம்முடைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான சொத்துக்கள் எல்லாம் நீங்க இவ்வளவு அழகா பரம்பரை கருத்து ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய வருங்காலத்துக்கு நல்ல சொல்லி கொடுங்க நாங்க கண்டிப்பா இந்த ஊருக்கு வந்தால் இந்த வீட்டை வந்து பாப்போம்
Very neat and new every where it gives a new 🏠 . God has given you the needed wealth to maintain it . We respect your privacy, respect for elders. God Bless you all. We pray for your family 👪 and your children 🙏
மிகவும் அருமையான அழகிய நேர்த்தியாக உருவாக்கப்பட்ட இந்த வீடு பிரமிப்பை உண்டாக்குகிறது....இப்பதிவை எல்லோருக்கும் அறியசெய்தமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல🙏👏👏
வணக்கம் சார் தாங்கள் சொன்ன மாதிரி தமிழகத்திற்கு பெருமை மூதாவீர்கள் வணங்கி நிற்கும் போது மீண்டும் பிறப்பார்கள் அளப்பரிய அன்பும் ஆசிர்வாதமும் பெருகும் வாழ்க நன்றி.
அற்புதம். கலைநயம். யோசித்தவர்கள், திட்டமிட்டவர்கள், உருவாக்கியவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இது பாதுகாக்கப் பட வேண்டும். செட்டிநாடு வீடுகள் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்தது இல்லை. இன்று பார்த்த நிறைவு.
ரொம்ப அருமையான வீடியோ நாங்கள் காணாடு காத்தான் வந்தபோது தங்கள் வீட்டை பார்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை ஆனால் இந்வீடியோவில் மிக அருமையாக தெளிவாக மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் மிக்க நன்றி
ஆனால் தாங்கள் மிக சிறப்பாக இந்த பதிவில் நேரில் பார்த்தது போல் பதிவிட்டுள்ளீர்கள் . தங்கள் மூதாதையரகளை வணங்குகிறேன் தங்கள் குலம் மேன்மேலும் மேன்மை பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் நலமாக நன்றி
வாழ்ந்த இப்படி வாழனும்... செம்ம வாழ்ந்துருக்காங்க 😨 இப்போ 600 சதுர அடில வீடு கட்டவே வாழ்க்கையில பாதி நாள் சம்பாதிக்கனும்... இவ்வளவு பெரிய வீட்டை( மன்னிக்கவும் கடலை) கட்ட வாய்ப்பே இல்லை... வேற வேற வேற லெவல் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமையான காணொளி.தெய்வங்களோடு வாழும் பாக்கியம் பெற்றவர் நீங்கள்.முன்னோர்களின் மீது நீங்கள் கொண்ட பக்தியின் காரணமாக இன்னும் அதிக அதிகமான ஆசீர்வாதங்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் முன்னோர்கள் வழங்குவார்கள்.
காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் இந்த பிரம்மாண்டமான அரண்மனை பார்க்கப் பார்க்க பிரம்மிக்க வைக்கிறது இன்னும் பல கோடி ஆண்டுகள் பெருமை சேர்க்க வேண்டும். நான் காரைக்குடியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். நாங்கள் தூரத்திலிருந்து தான் பார்த்திருக்கிறோம். இந்த வீடியோவை பார்ப்பது வீட்டுக்குள்ளேயே வந்த மாதிரி இருந்தது நன்றி அண்ணா.
இந்த வீடு பார்க்க பார்க்க அழக உள்ளது. அருமையான மரத்தில் சிறப்பான வேலை பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது .. இந்த மாதரி பழைய கால பாரம்பரியத்தை பாதுகாப்பு செய்ய வேண்டும். செட்டிநாடு வீடு உணவும் புகழ் பெற்றது.
I cant control my tears .our forefathers are really great .heaven ku poitu vantha maari oru feel thanks for sharing this beautiful video.sir you are very lucky ivlo irunthum how humble you are..
அப்போது அனைவரும் நேர்மையாக பயபக்தி ஆக இருந்த ஒரே காரணத்தினால் தான் இதுபோன்ற ஆச்சரியம்மான, அதிசயமான கட்டிடங்களை கட்ட முடிந்தது அண்ணா. நீங்கள் பகவானின் ஆசி பெற்றவர்கள் போல இவற்றில் வாழ்வதற்க்கு கொடுப்ணையை கொடுத்துள்ளார் மென்மேலும் சரியான முறையில் பராமரித்து வாருங்கள் அண்ணா அதுவே உங்கள் முன்னோருக்கு நீங்கள் செய்யும் மிக பெரிய ஒரு பாக்கியம்மாகும் அண்ணா
Naan Sri Lanka waaw Idha mari home en kanawulayum waradu sir neega romba kodutthu wechawanga en kannaye ennal mamba eladhu sandhosam Masha Allah..... idha video wla pakkuradhe semaya irukku.....
நான் செட்டிநாட்டில் பிறந்தவள் உங்கள் சமூகதார் பழக்க வழக்கம் தான் எல்லோருக்கும் இருக்கும் அங்கு பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் செட்டியார் இனத்தவர் வீட்டை மட்டுமல்ல கோயிலையும் சிறப்பாக பராமரிப்பார்கள் வாழ்க நகரத்தார்
தமிழகத்தின் வளர்ச்சியில், தமிழினத்தின் வாழ்வியலில் மிகப்பெரிய பங்களிப்பு செய்த சமூகத்தவர். காரைக்குடியில் உள்ள பல வீடுகள் இவர்களுடைய கட்டிட கலையின் மேன்மையையும்,வாழ்வியல் மாண்பையும் இன்றளவும் பறைசாற்றும்.
அருமை..இதற்க்கு வடிவமைப்பு செய்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து இன்றும் நாம் கட்டும் வீடுகளில் இதில் உள்ள சிறப்பம்சங்களை பின்பற்றலாம். குறிப்பாக முற்றம், சன்னல், கதவு போன்றவை..தரைத்தளம் மிக பளபளப்பாக காணப்படுகிறதே...அதே போல் கூரை அமைப்பு பற்றியும் அறிய ஆவல்...இது போன்ற கலை பொக்கிசத்தை பாராமரித்து வரும் தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!👌🏼
Long video but still I watched without skipping..always old is gold..good that still you are spending time and money to renevate the house.. overall worth watching this video
சிவகங்கை சீமையிலே உங்களுடைய கட்டிடம் மிகுந்த அருமையாக உள்ளது உங்களுடைய பழமையான வீடு பார்க்க எங்களுக்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது எங்களுக்கு ஒரு நாள் அழைப்பிதழ் கொடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் இவ்ளோ பெரிய வீடு பராமரிப்பு என்பது மிகுந்த கடினம் உங்களை மனதார பாராட்டுகிறேன்
Idha video la parkum podhe nan enoda amma appa elaruk avlo happy ah pesitu irundhom... மிகவும் அருமையான பதிவு.. innum 1000yrs indha veedu irukanum nu kadavul kitta vendikirom nanga...
பழங்கால பெருமைகளை போற்ற வேண்டும். ஆனால் இப்போதைய தலைமுறைக்கு இது தெரிவது இல்லை. இப்போது உள்ள அரசியல்வாதிகளிடம் இருந்து இதை காப்பாற்றி பாதுகாத்து வருவதே பெருமைக்குரிய விஷயம். என்னுடைய கல்லூரி பேராசிரியர் மரியாதைக்குரிய திரு. வள்ளியப்பன் அவர்களை நானும் என் நண்பர்களும் 38 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது அவர் ஒரு வீட்டை காட்டினார். அந்த வீடும் இதேபோல் ஒரு அமைப்பில் இருந்தது. அதைப் பார்த்த போது எங்களுக்கு மலைப்பாக இருந்தது. தங்களின் இல்லம் அல்ல கோவில் அதைவிட பெரிதாக உள்ளது. நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள். உங்கள் முன்னோர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சமீபகாலமாக உங்கள் அரண்மனையை பார்க்க எனக்கு தெரிந்த காரைக்குடி நண்பர்கள் அனைவரையும் கேட்டுப் பார்த்தேன். யாரும் பார்க்கலாம் என்று கூறவில்லை. உங்கள் அரண்மனையை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்பது என் லட்சியம் நன்றி
அரண்மனை பார்க்கணும்னா தஞ்சாவூருக்கு பெரிய கோயில் அரண்மனை இருக்கு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் அரண்மனை இருக்கு யார் வேணா போய் பாக்கலாம் போய் பாருங்க ஃப்ரீ தான் அதை விட்டுட்டு ஒரு தனி நபர் வீட்டு அரண்மனையை பாக்குறீங்க. இல்ல உங்க வீட்டு வந்து சுத்தி இந்த மாதிரி வீடியோ போஸ்ட் போட முடியுமா பத்துக்கு பத்து வீட்ல நிக்க வச்சாலும் போட்டு பாருங்க உங்க வீட்ட முடியும்
அற்புதம். அருமை. கலைச் சுரங்கம் உங்களுடைய அரண்மனை வீடு. என்ன ஒரு நேர்த்தி..ஒரே ஆச்சர்யம் ஆக உள்ளது. ஒவ்வொரு விஷயமும் அக்கறையோடு வடிவமைக்கப் பட்டுள்ளது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
ஐயா வணக்கம், தங்கள் அரண்மனையின் பெருமைகளை இன்றைய சூழ்நிலையை ஒப்பிடுகையில்... அரண்மனைக்கே ராஜாவாகிய தாங்கள் மிகவும் கனிவுடன், யதார்த்த நடையில்... இன்றைய தலைமுறையினரும் புரிந்துகொள்ளக்கூடிய உரைநடையில்... தாங்கள் விளக்கிய விதம்... தங்களின் முப்பாட்டனார் தங்கள் உருவில் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்கின்றோம் ஐயா... "நிறைகுடம் தழும்பாது" சாலச் சிறந்த பழமொழி தங்களுக்கே... பொருத்தமானது என்றால் மிகையல்ல... நன்றி ஐயா.
It is not a mere house or residence but a combination of architectural skill and a symbol of Tamil Culture..it is a proud not only to the owner but to the Tamil Society also
மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். மிகவும் பிரமாண்டமான வீடு, எங்கள் ஊர் பாகனேரியில் நகரத்தாரின் இதுபோன்ற வீடுகளை வெளியில் இருந்து பார்த்ததுண்டு , உள்ளே எவ்வாறு எல்லாம் வடிவமைத்து கட்டி இருப்பார்கள் என்று இந்த பதிவின் மூலம் அறிய முடிகிறது. நமது முன்னோர்களின் திறமைகளை கண்டு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நகரத்தாரின் அறிவில் மிக சிறந்த கட்டிட கலைஞர்கள். அவர்களின் தந்திரங்களை முழுமையாக பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு அசைக்க முடியாத உறுதியை காண முடிந்தது. தற்போது நகரத்தார் வாழுகின்ற ஊர்களில் அங்கு இருக்கும் பிரமாண்டமான வீடுகளில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே வாழ்வதை காண்கின்ற போது அந்த மக்களின் என்னிக்கை வேகமாக குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. அதை கண்டறிந்து அரசாங்கம் உதவ முன்வரவேண்டும். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக MP , மந்திரியாக இருந்தும் அந்த பகுதி வளர்ச்சிக்கு சிறு துரும்பை கூட கிள்ளிப்போடாத ப, சிதம்பரத்தை தவிர இந்த மக்கள் நல்லதை மட்டுமே செய்யும் குணம் படைத்தவர்கள். தெரிந்து யாருக்கும் தீமை செய்துவிட மாட்டார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். இவர்களின் ரத்தத்திலேயே ஊரியுள்ள வணிக திறமையை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சி அதை செய்யும்.