திருவருள் ஜோதிட கல்வி மையம் கோவை யூ.ஆர் மதிவாணன் அய்யா அவர்கள் திண்டுக்கல் திரு சின்னராஜ் அவர்களுக்கும் திரு தணிகாசலம் அய்யா அவர்களுக்கும். பாண்டிச்சேரி திரு கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும் திருவருள் ஜோதிட கல்வி மையம் சார்பாக வாழ்த்துக்கள். எங்களது குருநாதர் இராமலிங்கம் என்கிற சாந்தலிங்கனார் அவர்களையும் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கின்றோம்
சிறப்பு அருமையான பதிவு. ஜோதிடம் கணிப்பது கஷ்டமான வேலைதான்! அதை திறமன்பட எவராலும் கணிக்க முடியாது என்பது புரிகிறது. ராவணனை தவிர. ஏனென்றால் ஜோதிடத்தில் கண்டுபிடித்தது எமது ராவணன் தானே. இப்படி அரைகுறையாக தெரிந்து கொண்டே, மக்களிடம் பெரும் பணத்தை வாங்கி அவர்களுக்கு 30 நிமிடங்களில் வேகமாகவும் தவறாகவும் பலன்களைக் கூறும் போது உங்களுக்கு கூசாத? அந்த 30 நிமிடங்களிலும் அனாவசியப் பேச்சிலும் 10 நிமிடங்கள் போய்விடும். கா என்றால் கருப்பட்டி வா என்றால் வாயிலே போடு, என்ற பாணியில் பலன் கூறுவதால், பலரின் வாழ்வு வீணாகப் போகிறது. சரி நீங்கள் கூறலாம் அவர்களின் விதி அப்படி இருக்குது அதனால் நீங்கள் தவறாக பலன் கூறி விட்டீர்கள் என்று. இருந்தாலும் உங்களுக்கு தவறு செய்து விட்டேன் என்ற ஒரு எண்ணம் மனசில் தோன்றாதா? உதாரணத்துக்கு நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை சிந்தித்து சிந்தித்தே எனது நிம்மதி போய்விடும். இந்தியர்களுக்கு அப்படி ஒரு உணர்வு இல்லையா? தெரியாமல் தான் கேட்கிறேன். எதையும் ஆழமாக ஆராய்ந்து பலன் கூறுவதே சிறப்பு என்று எனக்கு தோன்றுகிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும். நான் உங்களிடம் பலன் கேட்கும் பொழுது வேலை மாற வேண்டாம் புரமோஷன் கிடைக்கும் அது இது என்று அடிச்சு விட்டீங்க. ஆனால் நான் கணித்தது போல் வேலை உடனே போய்விட்டது. குரு தசையில் ஆட்சி பெற்ற சுக்கிர புத்தியில். சூரிய திசையில் தந்தையை இழந்தேன். சந்திர புத்தியில் எதிர்பாராமல் மென்பொருள் பொறியாளராக மாறிவிட்டேன். 12.11.1982, 05:05 pm, Mandaitivu (Jaffna).
@@ramyasatish4756 பணம் கொடுத்தது ஒரு பிரச்சனையும் இல்லை. எதனால் இந்த பலன் கணிப்பு பிழைத்தது அதுக்கும் அனைத்தும் அறிந்த சின்னராஜ் அவர்களுக்கு என்பதுதான் எனது கேள்வி. அதைவிட தவறு செய்தால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். இவர் மழுப்பி விடுவார், ஏனென்றால் தனுசு லக்கினத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று இருக்கிறார் அவரோடு புதனும் சூரியனும் உள்ளார்கள். இரண்டாம் இடத்தில் ராகு அத்துடன் பரிவர்த்தனை யோகத்தில் சனி பகவான் வக்கிர நிலையில் இரண்டாம் இடத்திற்கு வருகிறார். அப்புறம் இவருடைய பேச்சுக்கு என்ன குறை. கிரக யுத்தத்தில் இருந்ததால் இவரால் கணிக்க முடியவில்லை. இன்னும் ஒரு இரண்டு நிமிடம் மினக்கெட்டிருந்தால் சரியாக கணித்து இருப்பார். ஆக மொத்தத்தில் ஜோதிடம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஒத்துகிட்டா மகிழ்ச்சி. சரியான காரணத்தை ஆராய்ந்து மீட்டிங் போட்டால் மிக்க மகிழ்ச்சி. அவ்வளவுதான். செலவு செய்ய தானே பணம்.
ஐயா பதிவு நன்றாக இருந்தது. வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து தேய்பிறை அஷ்டமி திதி வரை நல்ல காரியங்கள் நடக்கும் என்று கூறினார். இந்த நாட்களில் சந்திரனுடை ஒளி த்திறன் நன்றாக இருக்கும்.பின் தேய்பிறை அஷ்டமி திதியில் இருந்து வளர்பிறை அஷ்டமி திதி வரை சந்திரன் ஒளித்திறன் குறைவாக இருக்கும். என்று எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
ஒரே கருவில் பிறந்த இருவரில் ஒருவர் உயிருடன் உள்ளார்.ஒருவர் உயிருடன் இல்லை.. அவர்கள் இருவரும் படித்த படிப்பு தொழில் வாழ்க்கை அனைத்தும் வேறு .இதற்கு எந்த ஜோதிடமும் விளக்கம் தராது