இப்படி தெய்வீக பாடலை செவி குளிர கேட்பேன் என நினைத்தறியேன் இப்பாடலை கேட்டது என் பாக்யம் ஏதோ போன ஜென்மத்தில் யான் சிறு உயிர்க்கு சிறு உதவி செய்துள்ளேன் என நினைக்கிறேன்
இறை மறு்பாளனாக இருந்த நான் அருட்பாவால் ஈர்க்கப்பட்டு அருட்பெருஞ்ஜோதியை ஏற்றுக்கொண்டேன் என்கிறீர்கள் ஆனால் சாய்பாபா படத்தை வைத்துள்ளீர்கள் நீங்கள் எப்படி இறை மருப்பாளராகவோ அல்லது அருட்பெருஞ்ஜோதியை ஏற்றுக்கொண்டவராகவோ ஆவீர்
@@வள்ளலார்அருள்வைத்தியசாலைஏகன் அநேகர் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...... இறைவன் ஒருவனே.... அவனே, ஒருவராகவும் பலவாறாகவும் இருக்கிறார் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்
படமுடியாது இனித்துயரம், படமுடியாது அரசே! பட்டதெல்லாம் போதும். இந்தப் பயந்தீர்த்து இப்பொழுது-என் உடல் உயிராதியை எல்லாம் நீ எடுத்துத் கொண்டு-உன் உடல் உயிராதியை எல்லாம் உவந்து-எனக்கே அளிப்பாய். வடலூர் சிற் றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணே! மணியே-என்குருமணியே! மாணிக்க மணியே! நடன சிகாமணியே! நவமணியே! ஞான- நன்மணியே! பொன்மணியே! நடராஜ மணியே! வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ! வகை அறியேன். இந்த ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ? இதுதகுமோ? இதுமுறையோ? இது தருமந்தானோ? மாழைப் மணிப் பொது நடஞ்செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ கோழை உலக உயிர்த் துயரம் இனிப் பொறுக்க மாட்டேன் கொடுத்தருள் நின் அருள்-ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே!
🙏 வள்ளல் பெருமானின் நெஞ்சை உருக்கும் அருமையான பாடல் அய்யா மலையூர் நாவரசர் இனிய கானம் கேட்டு இரவு தாயின் அரவணைப்புடன் தினம் தினம் நிம்மதியா உறங்குகிறேன். அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை.
தொடர்ந்து 100 முறை கேட்டாலும். இன்னும் கேட்டு க் கொண்டே இருக்க தோன்றுகிறது. மனதை உருக்கும் மிக அருமையான பாடல். அருமையான குரல் வளம். அய்யா உமக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றி. 🙏🙏🙏
@@abirami9476 கடை விரித்தேன்; கொள்வாரில்லை என்று கூறிச் சென்றார் வடலூர் வள்ளல் பிரான். மரணமிலாப் பெருவாழ்வுக்கான ஒரு கடையை விரித்தார்;நாடுவாரில்லை. ஏனென்றால் அது எத்துணை முக்கியமானது என்று மக்களுக்குத் தெரியவில்லை. மரணம் என்றால் என்னவென்று தெரிந்தால் தானே மரணமிலாப் பெருவாழ்வின் முக்கியத்துவம் தெரியும்! "மற்றறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீரானால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே" என்று வடலூர் வள்ளல் பாடியிருக்கிறார். அப்படியானால் மரணம் எப்படிப்பட்ட ஆபத்தான,பாவமான ஒன்றாக இருக்கும்! சிந்திப்பீர்!
தாங்கள் வள்ளலார் அவர்கள்மேல் இருக்கும் மிகுந்த அன்பினால் அப்படி கூறுகிறீர்கள் உயிரே..... சித்தர் சிவவாக்கியர் ஆதி சங்கரர் ராமானுஜர் பாரதி போன்ற ஆன்மீகத்தில் புரட்சி செய்தோர் நிறைய உண்டு ஆனால் மக்கள் தெரிந்துகொள்ளவில்லை .....
@@snarendran8300 மரணம் பாவம் அல்ல.. எல்லா உயிர்களுக்கும் பிறப்பும் இறப்பும் இயற்கை நியதி. வள்ளலார் பெருமகனார் கூறுவது சிந்தனையிலும் செயலிலும் நாம் செய்கிற பாவம் எனும் மரணத்தை குறித்தே..!
படமுடியாது இ னித் துயரம் பட முடியாது அரசே பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என் உடல் உயிர் ஆதியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எ னக்கே அளிப்பாய் வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே, குரு மணியே, மாணிக்க மணியே நடன சிகாமணியே என் நவமணியே, ஞான நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட மரபினில் யான ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த எழைபடும் போடு உனக்குத் திருவுளச சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன் கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!
Pls any one help my son studies he is studying mmbs in Russia government university 2nd year we unable pay 2nd year terms fees due date all ready over pls support my son studies I am helpless cell number 9003009736
வள்ளலாரின் வார்த்தைகளா? உருகிப்பாடும் குரல்வளமா? என ஒன்றுக்கொன்று ஒன்றோடொன்று போட்டியிட்டு உயிரை உருக்கும் அற்புதமான பாடல். கேட்க கேட்க திகட்டாத அருமையான அற்புத பாடல் 🙏🙏🙏🙏🙏
வள்ளலார் பெருமானின் வரிகளுக்கு அய்யாவின் குரலால்மெருகேரி பாட்டின்ஏற்ற இரக்கத்தால் உயிரோட்டம் பெற்று விட்டது இதுபோன்ற உருக்கமான பாடல்களை மேலும் பாடியருளுமாறு கேட்டுகொள்கிறேன் நன்றி அய்யா
என் வாழ்கையில் பல கஷ்டங்கள் பட்டு இருக்கின்றேன் ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் என் கஷ்ட்டம் எல்லா ம் பறந்து விட்டது போல் உணர்கிறேன் இப்பாடலை பாடியவர்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி....................
மனிதனாக பிறந்திருந்தாலும் படுகின்ற வேதனையை அனைவராலும் வெளிப்படுத்த முடிவதில்லை அதைய உணர்ந்து வெளிப்படுத்த கூடிய அறிவை பரம் பொருள் கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.. (விலங்கினங்கள் கூட இதற்க்கு விதி விலக்கு அல்ல)✨
வடலூர் சிற்றம்பலம் வாழ்ந்திடும் என் கண்ணே கோழை நான் இனி துயரம் படமுடியாது ஆதலால் வடலூர் சிற்றம்பலத்தில் வாழ்ந்திடும் என் கண்ணே கண்ணின் மணியே வந்திடு என் கருவில் வந்துடு என் மடியில் மகனாய் அவதரித்திடு இல்லை என்னை அழைத்திடு உன் ஜோதியில் ஐக்கியம் ஆகிறேன் உன்னுடன் என் கண்ணே சிவமே 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
இது போன்ற இயற்கை , பிறப்பு ,வாழ்கை , இறப்பு , ஒழுக்கம் , தவறு ,நல்லவை ,கெட்டவை ஆகியவைகளை இயற்கையோடு இணைந்து உள்ளூர உணர்ந்து எளிய தமிழில் பாடலால் தமிழ் இறைவனிடியார்களால் மட்டுமே முடியும் , வேறு எந்த மொழிலும் இவ்வளவு இல்லை
உடலும் மனமும் சோர்ந்து இனி என்ன செய்யலாம் செய்ய முடியும் என்ற நேரத்தில் தெய்வத்திடம் நானும் உன் மகன்தானே எனச் சரணடைய எல்லாம் நலமாய் ... நிறைவடைகிறது. நன்றி திரு.ஆறுமுகம் கணேஷ்
ஆறுமுகம் கணேஷ் அவர்கள் திருவடிகளுக்கு நன்றி..... தாங்கள் செய்யும் இப்பணி ஆம்மாவின் பசியை போக்கும் பணி, ஆன்மாவிற்கு உணவளித்துகொண்டிருக்கிறீர்கள்... இப்பணி மென்மேலும் தொடற சித்தர்கள் அருள் என்றும் நிலைக்கட்டும்... வாழ்க வளமுடன்..
குடும்பத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் கொரனா பாதிப்பு நேரத்தில் இப்பாடல் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது வள்ளலாரின் அருள் கிடைப்பது உறுதி என முழுமையாக நம்புகிறேன்
ஆங்கிலேயர் காலத்தில் வறுமையில் வாடிய மனிதர்களை கண்டு நடுங்கி ஈசனை வணங்கியும் அவரிடமுறையிட்டும் பல சிந்தனையில் இந்த பாடல் வரிகள் ஞானத்தில் தெளிந்து நீரை போல் எழுதிக் பாடிய தருனம்.
நான் தெய்வத்திடம் வேண்டுவது எப்போதுமே ஒன்றேதான் என்னை வைத்து என்ன செய்யப்பட வேண்டு்ம் செய்து உன்னை சரனடைய வேண்டுமென வேண்டிகொள்வேன் என் சிந்தனை உதிக்க காரணம் சிவன் நான் அதிகமாக திருப்பதி பழனி முருகனை தரிசிப்பேன் என் மாவட்டத்திலுள்ள ஸ்ரீரெங்கநாதர் ஒருமுறை தரிசித்தேன் பலமுறை திருப்பதி பழனி சென்று வந்துள்ளேன்
🕉️🙏பட்டதெல்லாம் போதும்.. இந்தப் பயன் தீர்த்து இப்பொழுது.. என் உடல் உயிராகிய எல்லாம் நீயெடுத்துக்கொண்டு உன் உடல் உயிராகியவெல்லாம் உவந்தெனக்கு நீ அளிப்பாய்... படமுடியாதினி துயரம் படமுடியாதினி அரசே.. திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்🕉️🙏...
இந்தப் பாடலுக்கு இசை ஒரு அமையாத பட்சத்தில் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் இசை மேதை இளையராஜாவிடம் இந்த பாடலை கொடுத்து சேமித்து இசை அமைத்தது என்று சொன்னால் வருங்காலத்தில் இந்த பாடலுக்கு ஈடுஇணையற்ற