#Partnership மதுரையில் வெளுக்கும் கனமழை: ஓடை உடைந்ததால் ஊருக்குள் வெள்ளம் | Heavy rain | Break in stream | Flood in people area | Madurai |
மதுரையில் தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வந்த நிலையில் சனியன்று இரவு ஒரே நாளில் 16 செ.மீட்டர் மழை பெய்தது.
நேற்று மதுரை தமுக்கம் மைதானம், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக 2 மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கனமழை பெய்தது.
புறநகர் பகுதிகளான அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, அழகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கன மழையால் அழகர் கோயில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகள் நிரம்பின.
அதன் உபரி நீரும், சாத்தையார் அணை உபரி நீரிரும் ஒன்று சேர சாத்தையார் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
ஒரே சமயத்தில் அதிக நீர் வந்ததால் அழுத்தம் காரணமாக வண்டியூர் கண்மாய் நீர் வழிப் பாதையில் ஓடையில் உடைப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகரின் பிரதான பகுதியான மாட்டுத்தாவணியை ஒட்டியுள்ள டி.எம் நகர் அதனை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் ஓடை நீர் புகுந்துது.
வீடுகளின் உள்ளே புகுந்த வெள்ள நீரால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.
சாத்தையார் ஓடையில் தடுப்புச் சுவர் அமைக்க பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மழை நீர், ஓடை நீருடன் சாக்கடை நீரும் கலந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து சாலையை ஆக்கிரமித்து ஆறு போல் ஓடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
வரும் நாட்களில் தொடர் மழை இருப்பதால் விரைந்து தடுப்பு சுவர் அமைத்து தங்கள் பகுதியை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.#Heavyrain #Breakinstream #Floodinpeoplearea #Madurai
13 окт 2024