#மனைவி, #கணவன் #husband #wife மிக மிக முக்கிய பதிவு.. மனைவியை மோசமான வார்த்தைகளால் திட்டும், கை நீட்டி அடிக்கும், புரிந்து கொள்ளாமல் நடக்கும் கணவன்மார்கள் இந்தப் பதிவை ஒருமுறையேனும் பாருங்கள். உணர்வீர்கள்.. - ஆத்ம ஞான மையம்
நான் மட்டும் இல்லை இங்கே இருக்கும் கமெண்ட் எல்லாம் பார்த்தால் எனக்கு நிறைய என் போன்ற சகோதரிகள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நம் அனைவரையும் அந்த முருகன் ஒரு நாள் காப்பாற்றுவார்.காத்திருப்போம் நம்பிக்கையுடன்
அம்மா நீங்க பேசும் போது எனக்கு அழுகை யா வருது கடவுளே நேரில் வந்து பேசினது போல் இருந்தது ஏனா நான் தான் comments சொன்னேன் மா என் வீட்டுக்காரர் இந்த வீடியோ பார்த்தாலும் திருந்த மாட்டார்மா அப்பவும் என்னைக் கெட்ட வார்த்தை சொல்லி தான் திட்டுவார்மா எங்க வீட்டுக்காரர் குடிப்பார் மா தயவு செய்து எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா ❤
அம்மா எனக்கு இதேபோல் நிம்மதி போச்சு கல்யாணம் என்ற பெயரில் ஒரு மானங்கட்ட வாழ்க்கையில் சிக்கிக் கொண்டு அடிமையாக ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என் பிள்ளைக்காக அம்மா.
அம்மா நீங்க என் பக்கத்துல இருந்திருந்தா கட்டியனைச்சி யிருப்பேன் உங்கள் பதிவு முடியும் வரை நான் அழுதேன் மனதிற்கு ஆறுதலாக இருந்தது எனக்கே சொல்வது போல் இருந்தது.நான் கண்டிப்பாக என் கணவருக்கு share பண்ணுவேன் கோடான கோடி நன்றிகள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா அம்மா அம்மா என்னால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை எதற்கு திருமணம் செய்து கொண்டோம் இப்படி அடிமை தனமாக வாழ்கிறோமே என்று தினம் தினம் வேதனை பட்டுகொண்டிருக்கிறேன் அம்மா சரியான நேரத்தில் இப்படி ஒரு பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🙏🙏
மனைவி மறைவுக்கு பின் அவன் எப்படி எல்லாம் துன்பத்தை அனுபவிக்கிறான் என்பதை சுட்டி காட்டி இருக்கலாம். ஒரு பொருள் இருக்கும் போது அந்த அருமை தெரியாது அம்மா. இவ்வளவு கொடுமைகளையும் ஒரு பெண் அமைதியாக காரணம் அவள் பெற்ற பிள்ளைகளுக்காக தான். இல்லை என்றால் அந்த பெண் கேட்க நாதியற்று இறந்து இருப்பாள். என் நிலைமையும் அப்படி தான். நன்றி அம்மா
வணக்கம் அம்மா நன்றி அம்மா இந்த பதிவை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என் கணவர் என்னை புரிந்து கொண்டதே இல்லை இந்தப் பதிவைப் பார்த்தாலும் அவர் திருந்த மாட்டார் என்னை ஒரு மனுஷியாக மதிப்பதே இல்லை ஆனால் எனக்கு என் கணவரை தவிர வேறு யாரும் இல்லை அம்மா
நீங்க சொல்லிட்டீங்க மா இதை பார்த்தாலுமே என் கணவர் வந்து திருந்தவே மாட்டார் மா அவங்களுக்கு மட்டும் அவங்க அக்கா தங்கச்சி அம்மா அப்பா எல்லாருமே கூட இருக்கணும் ஆனால் கட்டிக்கிட்டு அவளுக்கு வந்து எதுவுமே இருக்கக்கூடாது எங்கேயும் போயற கூடாது இவர் காலடியில் கிடக்கும் இவங்களே கடைசி வரைக்கும் சாகுற வரைக்கும் வேலை பாக்கணுமா எல்லாம் பிள்ளைகளுக்காக நம்ம வந்து சகித்துப் போக வேண்டியதா இருக்கிறது எப்போ அந்த கடவுள் உயிரை எடுப்பார் என்று தெரியவில்லை என் அருமை அப்போது தான் தெரியும்?
இதுவரை எத்தனையோ சண்டை நடந்து இருக்கிறது,,,,ஒரு நாள் கூட அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டதில்லை,அவருக்கு தான் என்ற அதிகாரம் மிகவும் அதிகம்,நிறைய முறை மனது அளவில் நிறைய காயம் கண்டிருக்கிறேன் 😢😢😢,,,என்னை போன்ற பெண்களுக்காக இந்த பதிவு மிகவும் அருமை மிக்க நன்றி அம்மா
மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அம்மா என்ன என் husband ஒரு பொருட்டாவே மதிக்கவே மாட்டேங்கிறாங்க ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு உங்க வீடியோ பார்த்ததும் எனக்கு கொஞ்சம் மன நிம்மதியா இருக்கு 😞😞
கவலை படாதீர்கள் சகோதரி. பெண்களுக்கு என்றாவது நல்ல காலம் வரும். அது வரை கடவுளை நினைத்து கொண்டு பொறுமையாக இருங்கள். யாரையும் திருத்துவது கொஞ்சம் கடினம். வாழ்க
❤அம்மா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்தையும் கேட்கும் போது என் மன பாரம் கண்ணீராக வடிந்தது 😥😥என் கணவர் வீடியோ பார்க்க சொன்னால் கூட பார்க்க மறுக்கிறார் 😔என்ன தான் செய்வது அவ்வளவுதான் 😔😥😥
நான் ஒரு மனித மிருகமிடம் வலிய சென்று மாட்டிக் கொண்டேன். என் பெற்றோருக்கு நான் செய்த நம்பிக்கை துரோகத்திற்கான தண்டனை என்று சகித்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என் கணவருடன்.. வாழும் போது நரகம்.. 😢 இறந்த பின்பாவது நிம்மதி வேண்டும் இறைவா😢😢
மனைவியை அடிக்கின்ற கேவலமாக பேசுகின்ற கணவன்மார்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் ... மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம். வித்யாசமான பதிவு நடைமுறையில் அன்றாடம் நடக்கின்ற பதிவு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவதில்லை. நல்ல கணவருக்கு நல்ல மனைவி அமைவதில்லை. நல்ல கணவன் மனைவி அமைந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான். நாம் இருக்கும் போது நம் துணையின் அருமை தெரியாது. அவர்கள் இல்லாத போது வருந்தி பயன் இல்லை. நாம் இந்த பூமியில் வாழும் காலம் நமக்கு தெரியாது இருக்கும் வரை எல்லோரும் சந்தோஷமாக வாழ்வோம் அன்புடன்.
அம்மா இந்தப் பதிவு எனக்காகவே போட்டது மாதிரி இருக்கிறது என் கணவர் என் ரொம்ப அன்பானவர் அதேபோல் ஆயிரம் மடங்கு கோபக்காரர் உங்கள் வீடியோவையும் அவர் விரும்பி பார்க்கக் கூடியவர் இந்தப் பதிவை பார்த்து அவர் மனம் திருந்தினால் எனக்கு ரொம்ப சந்தோசம்
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா.. எனக்காக நீங்க பேசுவது போல் இருக்கு அம்மா.. என் முருகன் தான் எனக்காக இந்த பதிவு போட சொல்லி இருக்கார் 🥺🥺🥺🥺🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் கணவர் எனக்கு கிடைத்ததில் நாள் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேனோ தெரியல அம்மா. எல்லாம் என் அப்பன் முருகன் அருள் தான். என் அப்பனுக்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இதற்கு தீர்வு தான் என்ன தாயே குழந்தைகளுக்காக சில விஷயங்களை சகித்துக் கொள்ள வேண்டி இருக்கு மரணத்தை விட கொடியது மனவேதனை அனுசரித்து நடந்து கொண்டாலும் எனக்கான இடம் கிடைக்கவில்லை அம்மா சொல்லி அழுவதற்கு கூட என் தாய் இல்லை..........
என் மாப்பிள்ளை இப்படி தான்.என் மகள் வாங்காத அடியும் கேட்காத கெட்ட வார்த்தை இல்லை.பெற்ற வயிறு பற்றி எரியுதம்மா.அவர் அப்பா அம்மா இதற்கு விதிவிலக்கல்ல.என் அப்பன் ஈசனை நம்பி இருக்கிறோம்.
அம்மா நீங்கள் சொல்லும் அனைத்தும் நான் panieruka இனி நா அப்படி நடந்துக்க மாட்டாங்க ரொம்ப நன்றி 😭😭😭😭 நா என் மனைவி யா நல்லா பாத்துக்குற thanks for ur advice
ரொம்ப நன்றி அம்மா நான் இப்படி ஒரு பதிவு நீங்க போடா வேண்டும் என்று ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் அம்மா. எங்கள் அம்மா இன்னும் இந்த வேதனையை அனுபவிக்குறாங்க அம்மா. எங்க அம்மாவை சந்தேகம் பட்டு 60 வயதிலும் எங்க அம்மா என் அப்பா தகாத வார்த்தைகளால் பேசி கஷ்டப்படுத்துறாரு அம்மா. சந்தேகம் படும் ஆண்களுக்கு பதிவு ஒன்று போடுங்க ப்ளீஸ்
என்னை ஒரு வார்த்தை சொல்லி திட்டுனது மனசு கஷ்டமா இருக்கு என்னை அடிச்சும் இருக்காரு காலம் எல்லாம் ஆண்களுக்கு அடிமை யா தான் இருக்கனும் போல எல்லாம் தலை எழுத்து கடவுள் எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்காரு கடைசி காலத்தில் தான் மனைவி அருமை புரியும் ஆண்களுக்கு 😡😡😡
தற்போது உள்ள நிலைமையில் 1995 பின் பிறந்த ஆண்கள் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் தற்போது பிறந்த பெண் குழந்தைகள் நீங்கள் கூறியது போன்று அனைத்திலும் வலிமையாகவும் திறமையாகவும் இருக்கிறார்கள். நீங்கள் கூறியது போன்று இன்னும் சில ஆண்டுகளில் அனைத்தும் மரும்.
அம்மா அருமையான பதிவு அம்மா கனவுகளைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா ப்ளீஸ் எந்த மாதிரி கனவு வந்தால் பலிக்கும் என்ற ஒரு பதிவு கொடுங்கள் அம்மா ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்கிற இந்த கமெண்ட்ஸ் பார்த்துட்டு கொடுங்கம்மா 🙏🙏
அம்மா என் பெயர் வெண்ணிலா ஏற்கனவே நான் மெசேஜ் பண்ணி இருக்கேன் அம்மா எனக்கு ரெண்டு பெண் குழந்தை குழந்தைங்க இருக்காங்க அவரு அப்பா வந்துட்டு கொஞ்சம் இன்னொரு பொண்ணு கூட தவறான சகவாசம் வெச்சிருந்தாலும் இப்ப அவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு கால்ல எலும்பெல்லாம் முடிஞ்சிருச்சு அம்மா அவர் சரியாக ஒன்னரை வருடமாகும் மனைவி பேச்சை கேட்டால் இந்த மாதிரி ஆகா வாய்ப்பு இருக்காது அம்மா இன்னொன்னு மனைவிய கஷ்டப்படுத்திட்டு எங்க போனாலும் அவங்க நல்லா இருக்க மாட்டாங்க என்பதற்கு எங்க வாழ்க்கை ஒரு உதாரணம் இனி எங்க லைஃப்ல கஷ்டங்கள் வந்து அவர் சரியாக வழி இருக்கும் பணத்தால் சரி மனசாலியும் சரி அம்மா உங்க ஆசீர்வாதம் வேணும் அம்மா எங்களுக்கு சீக்கிரமா குணமாகி சரியாகணும்னு நீங்க கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க அம்மா
மண்னில் போட்ட அனைத்து விதைகளும் முழைப்பதில்லை அம்மா.உங்கள் கூற்றுப்படி மகாலட்சுமி வெளியில் இருந்து வாசம் செய்கிறாள் .. உள்ளிருந்து ஞானமடைய சைவ நீதியை வகுத்தவர்கள் நமது முன்னோர்.எல்லோரும் தன்னை சுருக்கி இல்லறத்தோட வாழ்ந்தால் மட்டுமே இனிமை. வாக்குவாதத்தை தவிர்த்து அடக்கம் அமரருள் உய்க்கும் படி வாழனும்.
அம்மா நான் 21 வருடமாக இந்த மாதிரி கொடுமைகளை அனுபவிக்கிறேன் இதிலிருந்து எனக்கு எப்போது விடுதலை என்று கடவுள்தான் வழிகாட்ட வேண்டும். இந்த பதிவை கூட என் கணவர் காது கொடுத்து கேட்கவில்லை.
அம்மா, கருடபுராணத்தில் பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டாலே உடனே குளித்துவிடவேண்டும் என்று படித்திருக்கிறேன். நாம் இன்றைக்கு இதை பின்பற்றுவதில்லை. ஆனால் நாம் வீட்டில் அல்லது வெளியில் தான் இருப்போம். ஆனால் கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கையில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறோம் அல்லது இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துக்கொண்டு போகும் காட்சி கண்ணெதிரே படும். இவ்வாறான சூழ்நிலையில் இதை பார்த்துவிட்டு கோவிலுக்குள் போகலாமா?? அல்லது என்ன செய்ய வேண்டும் அம்மா. நிறைய தடவை இவ்வாறு நடந்துள்ளது.
வணக்கம் சகோதரி. நான் சென்ற பதிவில் உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். மறுநாள் உங்களை வடபழனி முருகன் கோவிலில் உங்களைப் பார்த்து, உங்களுடைய சொற்பொழிவு (பார்த்து,)கேட்டேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களிடம் பேச முடியவில்லை. லஷ்மி சீனிவாசன்.
எனக்கு திருமணமாகி முப்பது வருடங்கள் ஆகிவிட்டது.இன்று கூட தவறான வார்த்தைகளால் திட்டினார்.நீங்கள் சொல்லியது போல் எங்களிடம் மஹாலட்சுமி தங்கவே இல்லை.உங்கள் பதிவை பார்த்த பிறகாவது அவருக்கு தெரிந்தால் சரி.
நீங்கள் சொல்லிட்டிங்கல இனி விளையாட்டு கு கூட அடிக்க மாட்டேன் சண்டை போட மாட்டேன்.❤ஆனா மனைவிகள் கனவர்களை அடிக்க கூடாது னு ஒரு வீடியோ போட்றுங்க உசுறுக்கு உத்ரவாதம் இல்லை😂😂
நன்றி அம்மா . எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது என் கணவர் தினமும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக என்னை திட்டுவது கேலி செய்வது என்றிருப்பார்கள். இதுவே எனக்கு பழகியும் விட்டது. இறைவன் தந்த உறவு அது சிறிது ஏற்ற இறக்கமாக இருந்தாலென்ன என்று சகித்துக் கொண்டு வாழ்கிறேன். என்னிடமும் சில குறைகள் உள்ளது அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு என் கணவர் என்னுடன் வாழ்கிறார்கள். .
Hello Madam. Namasthe, Today's this video made me cry through out till end. You just spoke as a mother to every woman. If some men take your words will surely help their respective house. You have actually touched our heart and advised well. Thanks a ton. Keep up the good work🎉🎉❤❤❤❤❤