நான் ஒரு கிறிஸ்தவன். இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மெய் சிலிர்க்கும்.. ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் இந்த பாடல் ஒளிபரப்பாகும்... முழு பாடலையும் நின்று கேட்டு விட்டு தான் அடுத்த வேலை செய்வேன்.....
அவர் மண்ணில் மறைந்தாலும் இன்றும் மதுரை மல்லியை போல் வாசமாய் மதுரை N. சோமுவின் இந்த பாடலை உலகம் முழுக்க ஒலிக்க செய்த கண்ணதாசனுக்கும் சாண்டோ சின்னப்ப தேவருக்கு என்னோட கோடான கோடி நன்றிகலந்த வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌👍
நான் சிறுவனாக முதல் வரிசையில் அமர்ந்து, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஓர் நள்ளிரவு கச்சேரியில், ஐயா சோமு பாட இந்த அருமையான பாடலை நேரில் கேட்கும் வரம் பெற்றேன், அந்த நாத வெள்ளத்தையும் உணர்ச்சி ப்ரவாகத்தையும் ஏறக்குறைய 50 ஆண்டுகள் கழித்து இன்றும் உணர்கிறேன். அருமையான விளக்கம், பாடல் உருவாக காரணமான அனைவருக்கம் நன்றிகள் பல.
நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் ஊர் டென்ட் கொட்டகையில் ஒவ்வொரு காட்சி ஆரம்ப த்திற்கும் முன் இந்த பாடலைத் தான் ஒலிக்க விடுவார்கள். தினமும் கேட்டு பாடல் முழுவதும் மனப்பாடம் ஆகிவிட்டது. பின்னாளில் தான் இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் யார் என்பதை தெரிந்து கொண்டேன். காலத்தால் அழியாத அற்புத பாடல்.
வாழ் நாளெல்லாம்.... இல்லையில்லை உலகம் சுழலும் வரை இப் பாடல்கள் பாடல் காட்சிகள் நெஞ்சை விட்டு நீங்காது...சிறப்பான பாடலை தந்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.....
மருதமலைமுருகனுக்கு அரோகரா .இந்த பாடலை எங்கு கேட்டாலும் கடைசிவரை நின்று கேட்டுவிட்டுத்தான் செல்வேன் இயல்,இசை, நாடகம் முத்தமிழ் அதுபோல் இசையின் மும்மூர்திகள் திரு.கவிஞர் கண்ணதாசன்,திரு.குன்னக்குடி எங்கள் அத்தான் திரு.மதுரைசோமு அவர்கள் இந்த மூன்று தெய்வங்களையும் வணங்குகிறேன் .
என்னமோ தெரியவில்லை இன்று காலையில் இருந்து முருகனின் அருட்பெருமை பற்றியே எனது வாயால் உச்சரித்து அந்த முருகனின் ஆசியோடு துயில் பெற இருக்கும் போது இந்த காணோளியை காண்கிறேன் இதுவும் அவன் செயலே தமிழ் அரசனே போற்றி நலம் காத்து வாழவைப்பாயாக உம்மக்களை .
நாத்திகனையும் ஆத்திகனாக்கும் அற்புத விளக்கம். படம் முழுவதும் பெரிதும் ரிஸ்க் எடுத்து ஒளிபதிவு செய்துள்ளார்கள்.எல்லா பாடலிலும் அறுபடை வீடுகளில் நடைபெறும் உண்மை திருவிழாவிலே படபிடிப்பு நடத்தியிருப்பது படத்தின் சிறப்பம்சம்.இந்திய தயாரிப்பாளர் என்ற பெருமையை தமிழ்திரை உலகிற்கு பெற்றுதந்தவர் "சாண்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் அவர்கள்.
மண்ணாங்கட்டி என் தமிழ் செய்யும் மந்திரம். இந்த பாடல் என் வாழ்வில் 1000 முறை கேட்டுருப்பேன் இன்னமும் மெய் மறந்து கேட்பேன் நான் எந்த கல்லையும் புகைபடத்தையும் வரிபடுபவன் கிடையாது கோவில் அறிவியலின் உச்சம் இயறக்கையே தெய்வம் அடன்பே சிவம் கோ இல் எனது ஆட்சிமுறை மூட நம்பிக்கை தமிழில் இல்லை ஆரியமும. திருட்டு திராவிடமும் நம் கோவில் முறையை மாற்றியுள்ளது. ஸ்வாமியை நம்பாத நான் இந்த பாட்டிற்க்கு அடிமை என் மொழி ஆளுமை இந்த பாடல் ❤️❤️❤️❤️ கடவுள் உண்டு சாமி இல்லை இதிலும் தமிழ் உண்டு 🙏🏾❤️🤣
மனம் போன போக்கில் சென்று கொண்டிருந்த நான் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் படித்த பிறகு தான் நான் யார் என்று தெரிந்து கொண்டேன் பட்டினத்தார் என்ற ஞானியை காட்டியவர் என் வாழ்க்கையின் வழிகாட்டி கவி சக்கரவர்த்தி கண்ணதாசன் அவர்கள் இன்றும் உயிரோடு இருப்பதாகவே நினைத்து வணங்கி கொள்வேன்🙏
@@vimi70 கண்ணதாசனும் எங்கும் அதை மறுக்கவில்லை. அவரின் குறிப்பு இதோ ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான் எனவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்கிற யோகிதை எனக்கு உண்டு.
@@vimi70 எந்த ஒரு சகாப்தம் படைக்கும் மா மனிதர் யாராகினும் குருகிய பாதையில் அல்லது விதியின் வழியில் அழிந்து அல்லது அழிக்கப்பட்டு விடுகிறார்கள் இயற்கையின் சட்டம் அதுதானே
அய்யா இதுவரை வந்த காணொளிகள் எவ்வளவோ நான் பார்த்துள்ளேன். ஆனால் நீங்கள் விவரிக்கும் விதம் என் கண்களில் நீர் வழிந்தது உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க எனது பிரார்த்தனைகள்.
கவியரசர் வரிகள் குன்னக்குடி அவர்கள் இசை மா மதுரை சோமு அவர்கள் வெண்கல குரல் வளம் முருகனை நேரில் தரிசித்த உணர்வு ஏற்படும் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் முருகன் அருள் தேவர் அவர்களின் தெய்வம் முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
உங்கள் விமர்சனத்தில் சினிமாவில் கோலோச்சிய பல பெரியவர்களையும் நினைவுக்குக்கொண்டுவந்து சிறப்பு விமர்சனமாக தந்திருக்கிறீர்கள். இப்போது உள்ளவர்கள் இசையமைக்கு முன்இவர்களை யெல்லாம் ஒருமணித்துளி நினைத்தாலே எல்லோருக்குமே நன்மைதான்.தெய்வங்களாக அவர்கள் இவர்களை வழிநடத்துவார்களாக! கடந்த இரண்டு மூன்று விமர்சனங்களில் அவசரமாக பஞ்ச் வைத்துப் பேசிச்செல்வதை இன்றும் விதி விலக்கல்ல நன்கு உணர்ந்தேன்!பாராட்டுக்கள்! நன்றி! வணக்கம்!!
இந்த பாட்டு தெய்வீக ராகம் கொண்டது..பாடியவர், எழுதியவர், இசை அமைத்தவர், பக்தியுடன் தயாரித்த தேவர் ..அனைவரும் மிக போற்றுதலுக்கு உரியவர்கள்.! இவ்வளவு அழகாக பதியு செய்த உங்களுக்கும் , இந்த பதிவை கேட்கும் மக்களுக்கும் தமிழ்க்கடவுள் முருகையன் அருள் புரிவாராக !
ஒரே பாடலில் தேவரையும் முருகனையும் தன்னையும் இணைத்து கவி புனையும் திறமையும் இசையின் திறமைக்கு ஏற்ப இனிய வார்த்தைகளை பக்தியுடன் சொல்லும் வல்லமையும் கண்ணதாசனை தவிர வேறு எவருக்கும் முடியாத ஒன்று
ஐயா. உங்களுடைய மொழி உச்சரிப்பு. சங்கீதத்தில் புலமை. பேச்சில் நயமும் நாகரிகமும். விஷயத்தில் ஞானம் போன்ற அனைத்தும் மிக்க மகிழ்ச்சியும் மன திருப்தியும் அளிக்கின்றன.. தற்போது இணையத்தில் நல்ல தமிழும் உச்சரிப்பும் கேட்க முடியாமல் போய்விட்டது. வணக்கம் .வாழ்த்துக்கள்.
நீங்கள் இந்தப் படத்தில் கூடிய அனைவருமே பெரிய பெரிய ஜாம்பவான்கள் கடவுளின் படைப்பில் அவரின் புகழ் பாட வந்த மனிதர்கள் அதை இன்றி ஞாபகப்படுத்த வந்த அற்புதமான அன்பு சகோதரர்கள்
ஆண்டவனின் முழுமையான ஆளுமைக்கு ஆட்பட்டவர்கள்தான் புலவரும் கவிஞரும் இசையை தரும் நடனத்தை தரும் கலைஞர்களும் ஓம் நமசிவாய #🧑 ஓம் சக்தி பராசக்தி 🕉️ ஓம் சரவண பவாய 🕉️🙏
இந்த பாடல்களை கேட்கும் போது எல்லாம் சிறுவயதில் கோவிலில் சர்க்கரை பொங்கல் வரிசையில் நின்று வாங்கிய நினைவுக்கு வருகிறது, மிகவும் சந்தோஷமாக நண்பர்கள் உடன் திரிந்த காலம்.
சார் வணக்கம் பல பாடல்களை அதோட போக்கோடு கேட்டுட்டு போயிட்டே இருப்போம் ஆனா உங்க விமர்சனத்துக்கு பின்னாடி அதைக் கேட்கும்போது ரொம்ப மனமுருகி மனசார ரசிக்கிறோம் இந்த ரசிக்கின்ற தன்மையை வளர்த்து விட்டதே நீங்கதான் நீங்கள் நீடூழி வாழ்க உங்களுக்கு ஆண்டவன் எல்லா நன்மையும் தரவேண்டும் சமீபத்தில் உங்களுக்கு இளையராஜாவை பிடிக்காத காரணத்தால் எனக்கு கொஞ்சம் மன கஷ்டமாக இருந்தது ஆனாலும் உங்கள் திறமையை தனிதான் அந்த வகையில் உங்களுக்கு நான் என்றும் ரசிகன் தான் நன்றி சார்
பாட்டு பரவசமோ இல்லையோ...உங்க ப்ரசன்றேஷன் திறமை ஆழறிவு என்னை திணறடித்துவிட்டது. கரூர் கடவூரில் மக்கள் தொண்டாற்றி மறைந்த பெல்ஜியம் அன்னை லியோ ப்ரோவோ அம்மையார் தினமும் முதல் தியானமாக இந்த பாடலையே மலைகள் எதிரொலிக்க பாடி பரவசமடைவார்கள்....உலகின் தலையாய பாடல்களில் இதுவும் ஒன்று.
எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல். தேவர், கண்ணதாசன், குன்னக்குடி மற்றும் மதுரை சோமு அனைவரின் உண்மையான பக்தியில் விளைந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். முருகா சரணம் 🙏🙏🙏
🙏🏾வணக்கம்... பாடல் பாடியுள்ள திறமையைப் பற்றி சொல்வதா....பாடலின் கவித்துவத்தைப் பற்றி சொல்வதா...இசையைப் பற்றி சொல்வதா....தாங்கள் விளக்கம் அளித்த விதத்தைப் பற்றி சொல்வதா.... அனைத்தும் அருமை..... இனிமை... என்றென்றும் சிறப்பிற்குரியது.... 🙏🏾
பெரும்பாலான டூரிங்டாக்ஸ் என்ற கிராமபுற பகுதிகளில் காட்சி ஆரம்பத்தில் முதல் பாடலாகவும் டிக்கெட் விற்பனை முடிந்து கடைசி பாடலாகவும் ஒளிபரப்பு செய்யப்படும்
கண்ணதாசனின் வரிகளுக்கு இணையாக இந்தி பாடலை உருவாக்க முடியாமல் முத்துக்குளிக்க வாரீயளா பாடலை அப்படியே வைத்த வரலாறு உண்டு. குன்னக்குடி என்ன தமிழுக்கேற்ற சந்தங்கள் தரமுடியும் என்றால் இன்றைய இசையமைப்பாளர் எவருக்கும் கண்ணதாசனால் வரிகளை வழங்க முடியும்.
Kannadasn the great poet! No wonder his songs are still living and considered integral part of golden period of Tamil cenema! Hearing his master pieces give not only immense pleasure but also bring the memories of great poets like Vallavan, Kamban and Pattinsththar
இந்த பாடலை பற்றி முன்பே பதிவிட்டது போல் நினைவு ஐயா இருப்பினும் சிறப்பான பதிவு அந்த பதிவில் விடுபட்ட மேலும் சில தகவல்களை அளித்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
Whitney Housten மேற்குத் தேசத்தில் high pitchல் பாடி அதிசயிக்க வைத்தார். ஆனால் தமிழ்நாட்டை மட்டும் அல்ல high pitchல் உலகத்தையே அசைக்க கூடிய பாடல் மருதமலை மாமணியே! ஆனால், ஆங்கிலம் உலக மொழியென்றபடியால், இந்த தமிழ்ப்பாடலின் அருமையை தமிழர் மட்டுமே மெய்ச்ச வேண்டியாதாய்ப் போயிற்று!
இந்த படம் உயர்ந்த நிலைக்கு சென்ற காரணம் இதில் அனைவரின் உணர்வுபூர்வமான ஈடுபாடு தான். எல்லா பாடல்களும் மிகவும் உயர்வானது. திரு மதுரை சோமு அவர்களின் மருதமலை பாடல் மிகவும் உச்ச நிலைக்கு சென்ற காரணம் இவரின் உணர்வு பூர்வமான பக்தி தான். பாடலின் வரிகள் மிகவும் உயர்வானது. மிகவும் சொல்லப்போனால் சாண்டோ சின்னப்பா தேவரின் பக்தி தான். இந்த பாடலுக்கு மெட் அமைத்த இந்த ராகமும் ஒரு காரணம். மிகவும் சொல்லப்போனால் இந்த படத்தில் பாடிய அனைவரும் மிகவும் பக்தி கொண்டவர்கள். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆசீர்வாதம் தான் முருகனின் சக்தியை அதிகரித்து காட்டியுள்ளது. மதுரை சோமு மாதிரி இனி யாரும் பாட முடியாது. இந்த படம் மக்கள் மனதை மிகவும் தொட்டு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற படம். சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ், பித்துக்குளி முருகதாஸ், சூலமங்கலம் சகோதரிகள், ராதா ஜெயலட்சுமி அனைவரும் மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள். தஞ்சாவூர் தியாகராஜன் 🙏
அறுமை🎉 இன்னும் இதுபோன்ற நல்ல பாடல்கள்,சம்பவங்களை இன்றும் இன்னும் கேட்டு மகிழவும், இறையருள் இன்றும் என்றும் கேட்டு, இளையசமுதாயமும் அனுபவிக்க தங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்🎉. எனது உடல் முழுவதும் புல்லறித்து விட்டது. 🎉வாழ்க வளர்க வையகம்🎉 வாழ்க வளமுடன்🎉 ஜெய் ஸ்ரீ ராம்.
அருமை...அற்புதமான ஒரு காட்சியை கன் முன்பு நிறுத்தியமைக்கு மிக்க நன்றி.....கேட்கும் போதே உடம்பு சிலிர்க்குது என்றால் அதை நேரடியாக பார்த்த அனைவருக்கும் எப்படி இருந்து இருக்கும்....முருகா..... எல்லாமே உன் செயல்..😊