காலத்தால் அழியாத தெய்வீக பாடல்...அண்ணன் தங்கை உறவு... பார்த்து பார்த்து இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கும் அற்புதமான பாடல்... பாடல் கேட்கும் போது நெஞ்சம் எப்படி உருகுகின்றதோ அதேபோல் நீங்கள் எடுத்துச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சம் நெகிழ வைத்தது சார்.. மிக்க நன்றி... ப...வரிசையில் வெற்றி படங்களை நடிகர் திலகத்திற்கு கொடுத்தில் இந்த படம் முதல் இடம்.. நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் சேர்ந்து நடித்தால் அதற்கு இணையாக எதையும் கூறமுடியாது.. தியேட்டரில் இந்த திரைப்படம் பார்த்து கண்ணீர் விட்டு..இன்றும் இந்த பாடல் கேட்டால் கண்ணீர் வந்து விடும்..கல்லைப் போன்ற நெஞ்சம் கூட கலங்கிவிடும்... மெல்லிசை மன்னர்களின் கைவண்ணத்தில் உருவான இசையமைப்பை மிகவும் அருமையாக எடுத்துச் சொன்னீர்கள்.. அடுத்த இருவர் இமயம்.. சுசீலா அம்மாவின் குரல் கேட்கும்போது கண்கலங்க நிற்கும் சாவித்திரி அம்மாவின் முகம் மனக்கண்ணில் தோன்றுகிறது.. டிஎம்எஸ் அய்யாவின் குரலில் நடிகர் திலகம் இணைந்து நம்மை அப்படியே உருக வைத்து விடுகிறார்... கவியரசர் இப்படி எல்லாம் பாடல் கள் படைத்த கடவுள்.. இதுவரையில் இப்படிப்பட்ட பாடல் வேறு ஏதும் இல்லை..இனியும் இல்லை... ஒப்பற்ற காவியப்பாடல்... மிக்க மகிழ்ச்சி நன்றி..சார்.. கோமதி மாரியப்பன்..
இந்த பாடல் நின்றதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. திருமணம் செய்து கொண்டு போன பின் பிறந்த வீட்டை எண்ணி அழாத பெண் உண்டா. இளவரசி யாக வளர்ந்து திருமதியாகி மாமியார் வீட்டில் சிக்கி சீரழியாத பெண் உண்டா. பெண்ணை அனுப்பி விட்டு கலங்காத பிறந்தகமும் இல்லை. எல்லோருடைய வாழ்வியலும் இதில் உள்ளது. உங்கள் விளக்கம் மிக மிக அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
இது பாடலோ படைப்போ அல்ல. பொக்கிஷம். ஒரு நூற்றாண்டின் சரித்திரம். உணர்ச்சிகளின் குவியல். உடன்பிறப்பின் குமுறல். வரிகள், இசை, குரல், நடிப்பு, காட்சி.. இவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எத்தனை முறை கேட்டாலும் இதயத்தின் ஓரம் வலியும் சொல்ல முடியாத வேதனையும் நெருடும்.
அண்ணன், தங்கையுடன் பிறந்த ஒவ்வொருவர் நெஞ்சையும் நெகிழ வைத்து, தலைமுறைகளை கடந்து வாழும் பாடல். இன்னும் எத்தனை கவிஞர்களும், இசையமைப்பாளர்களும் வந்தாலும் இப்படிப்பட்ட ஒரு பாடலை தரமுடியாது என்பது உண்மை. அருமையான இந்த பதிவுக்காக மிக்க நன்றி நண்பரே. 🌹🙏👍🌹
மனதையும் கண்களையும் இளக்கிய பதிவு!! நன்றி!!!! இது இசைக்கான கவியா இல்லை கவிக்கான இசையா அல்லது இரண்டும் பொருத்தி இணைத்து பின்னப்பட்டு பிறந்ததா என்று அறிய முடியாத படைப்பு. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள், நீண்ட சரணத்தைக் கொண்டிருக்கும்........'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை........' அது கவனிக்கப்பட்டு பேசுபொருளாக்கி.........கவிஞரை ஒப்பிட்டது............. போன்ற கள நிலவரத்தில் ..... கவிஞரின் 'மலர்ந்தும் மலராத......' அனைவரையும், எதிரிகளையும், விமர்சகர்களையும் உறைந்து மறைய வைத்த பாடல் என்று கேள்விப்பட்டுள்ளேன்........... பல ஆண்டுகளாக பல சுற்றுகள் வந்தும்...திரையரங்கைக் கட்டி வைத்து கண்களைக் கரைய வைக்கும் என்பதையும் கேள்விப்பட்டுள்ளேன். **உண்மையில் தமிழர் வாழ்வியல் இசைக் காவியமாகக் காலாகாலத்திற்கும் கடத்தப் பட வேண்டிய படம் பாசமலர்!!!**
ஆலங்குடி சோமு சார்!! உங்களது சொல் நயம்! மற்றும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் திறமை எங்களை அந்த நிகழ்ச்சியின் ஒருவராகவே எண்ண தோன்றுகிறது. தொடரட்டும் தங்களது கலைப்பணி..நன்றி..
பாடலின் முடிவில் வரும் உவமை "கண்ணின் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக கண்ணும் ஒளியும் தான் இணை. ஆனால் அதை ஒப்புமைப்படுத்தாது கண்ணின் மணியில் விழும் நிழலுக்கு ஒப்புமைபடுத்துவார். காரணம், கண் தெரியாவிடில் ஒளி இராது. காண இயலாது. இருப்பினும் தன் தங்கையின் நிழல் அவன் கண்ணின் மணியில் விழும். படத்தின் இறுதியில் சிவாஜி பார்வை இழப்பார். எனவே கண்ணின் மணி போல மணியில் நிழல் போல கலந்து பிறந்தோமடா... மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் இந்த உறவை பிரிக்க முடியாது என்று பாடி இருப்பார்.
ஜுவனுள்ள வாழ்க்கை.மணைவி இறந்த பின் வரும் சோகமும் அழுகையும் எனக்கு இந்த பாடலின் இறுதி வரிகள் பொருந்துகின்றது.கனவில் நினையாத காலம் நம்மை பிரித்த கதை சொல்லவா. இந்மண்ணும் மறைந்தாலும் நம் உறவை பிரிக்க முடியாதடா.ஆம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்
பாடலை கேட்டால் பாவம் இவர்கள் என்று தோன்றும். பாடல் காட்சியை பார்த்தால் மனம் உருகி கண்ணீர் வெள்ளமாக வரும். கனவில் நினையாத காலம் இடைவந்து நம்மை விட்டு பிரிந்தவர்களில் கவிஅரசரும் சாவித்திரி அம்மாவும் அடங்குவர்
கவியரசர் கண்ணதாசன் அவருடைய வரிகளின் ஆளுமை இசை அரசர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்களின் உயிரின் இசை நாதங்கள் டி எம் சௌந்தரராஜன் பி சுசிலா இவர்களின் மூச்சுக்காற்று நடிகர் திலகம் நடிகையர் திலகம் இருவரின் உடல் மொழிகள் இவர்கள் அத்தனை பேரையும் கட்டி ஆண்ட பீம்சிங் என்ற மாபெரும் இயக்குனர் இந்த உலகமே சுக்குநூறாக உடைந்து சிதறி மீண்டும் உருவாகினாலும் இப்படி ஒரு படைப்பை யாராலும் இனி உருவாக்க முடியாது தமிழர்கள் நாம் கொடுத்து வைத்தவர்கள்
It is true, it happened in my life with sister, am having sisters , when I heard that song , will Recollecting my affection with my sister how we are spending our life, the other song angallukkum kalam varum also Recollecting my experiences, coming up from poor's stage, sister became crore pathing, myself worked in Defence services retired, God is great, thanks
இன்னும் ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்தப்பாடலுக்கான இடத்தைத்தொடமுடியாது தமிழ்த்திரைஇசையில் உங்களுக்குப்பிடித்தபாடல் எது என்றால் உடனே நினைவுக்கு வருவது இந்தப்பாடல் மட்டுமே இதில் ஓர் சிறு திருத்தம் " நதியில் விளையாடி கொடியில் தலைசீவி " அல்ல அது "கொடியின்தலைசீவி" அதுதான் அழகே தென்றல் நதியின் நீர்மேல்விளையாடியபடி அந்த நீர்மேல்படர்ந்திருக்கும் கொடி களின் தலைகளைமென்மையாக வருடிக்கொன்டுவரும்மென்மையானதென்றலைப்போன்றவனே எனகுழந்தையைவர்ணிக்கிறார் உங்களின் எல்லா பதிவுகளையும் பார்ப்பேன் இது உச்சமான பதிவு நன்றி வாழ்த்துகள்
என்ன வரிகள், என்ன இசை, என்ன நடிப்பு, என்ன அருமையான குரல் கொண்ட பாடகர்கள். மொத்தத்தில் ஒரு காலமும் அழியாது. எழுதியவர், இசை அமைத்தவர்கள், நடித்தவர்கள், இயக்குனர், கடைசியாக அற்புதமாக பாடிய பாடகர்கள் அனைவரும் மஹா மேதைகள். மறக்க முடியாதவர்கள்.
இவர் இருந்த காலம் தமிழ் சினிமாவின் பொன்னான காலம்... இவர் கற்ப்பனைக்கு... தகுந்த குரல்....TMS.... பார்க்கும் மக்களின் மனதில் என்றென்றும் இடம் பிடிக்கும் வகையில் நடிப்பால் வாழ்ந்த நடிகர்கள் சக்கிரவர்த்தி....
தங்கள் பேச்சுகளை அண்மையில் தான் கேட்கிறேன். மிகச்சிறப்பு. கூடவே ஒரு வேண்டுகோள். பட்டுக்கோட்டையின் கவிச்சிறப்பைக் கூறுவது போல வாழும் இடதுசாரிக்கவிஞர்களின் பாடல்களையும் அவ்வப்போது விவரித்தால் நல்லது.
Great grand old days of excellence in composing, music setting, acting... perfectly depicted in brother Vellaichamy's presentation.. Thank you for helping us relive those days we enjoyed the excellence of thoughts and arts from giants in our great society.
ஏறத்தாழ 50 அல்லது 60 வருடங்களுக்கு முன் இப்படத்தில் இந்த பாடல் காட்சியை பார்த்த பொழுது பொங்கி வந்த கண்ணீர் இப்பொழுதும் சுமார் 1500 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து கேட்கும் போதும் வருவது ஏன்?
The great lyrics song. Never and ever to forget in our film industry. Hats-off to all great persons those who has taken their personal responsibilities for this success.
தமிழ் வார்த்தைகள் இவ்வளவு அழகாக இருக்கும் என்று இந்த பாடலை கேட்டால் தான் தெரியும் அவ்வளவு தெய்வீகமான அன்பு உறவு பாசம் பரிவு இயலாமை அனைத்தும் ஒரே பாடலில்
ஒரே சூரியன் போல தமிழ் சினிமாவில் இனிமேல் அமையாது. காரணம் படத்தில் அப்படி ஒரு அமைப்பு. இசை நடிப்பு பாடல்வரிகள்பாடுவது எனஅனைத்தும்அமைந்துள்ளது. இனி எவராலும் இப்படி அமைக்க முடியாது