#arunagirinathar#piruguprabhakaran#kandaralangaram #bakthiinfinity #velvazhibadu #murugar
.................................................................................................................................
முருகன் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் | Pirugu Prabhakaran |Murugar Vel Valipadu|Arunakirinathar|
.................................................................................................................................
பாடல் 38 ...
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
பொருள்:
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே
பாடல் 40:
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
பொருள்:
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய
திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்
கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின்
திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்
எழுதப்பட்டிருந்த ['விதி' என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.
பாடல் 70:
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததன வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
பொருள்:
நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப்பெருமானது புனிதமானவையும் மென்மையானவையுமான செந்தாமரை மலர் போன்ற திருவடிகளேயாகும். உண்மையில் ஒருசிறிதும் குறையாத
சொல்லுக்குத் துணையாவது 'முருகா' என்று கூறும் அப்பரமபதியின்
திருநாமங்களேயாகும். முன்பு செய்த பழியைத் தருகின்ற
பாவத்தை அகற்றுவதற்குத்
துணையாவது திருமுருகப்பெருமானின்
பன்னிரண்டு புயங்களுமேயாகும். அஞ்சுந்தன்மையுடைய
தனிமையான வழிக்குத் துணையாவது திருச்செங்கோட்டில்
எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானுடைய கூர்மையான
வேலாயுதமும் மயிலுமேயாகும்.
பாடல் 72:
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
பொருள்:
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை,
திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த
வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை,
விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த
கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப்
பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக
உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு
குறையும் உண்டாகாது.
பாடல் 90:
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
பொருள்:
திருமாலின் திருமருகரை, கனக சபையில் திருநடனம்புரியும்
சிவபெருமானின் திருப்புதல்வரை, தேவர்களுக்கும் உயர்வான தேவ
தேவரை உண்மை அறிவின் வடிவாகிய முழுமுதற்கடவுளை,
இவ்வுலகில் கெண்டை மீன்கள் நிறைந்த வயல்களும் சோலைகளும்
சூழ்ந்த திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் திருமுருகப்
பெருமானை அவருடைய திருக்கோயிலுக்குச் சென்று கண்குளிரக்
கண்டு வணங்கும் பொருட்டு அந்தப் பிரம்மதேவன் அடியேனுக்கு
நாலாயிரம் கண்களைப் படைக்கவில்லையே!
............................................................................................................................................................
Whatsapp Channel Link : whatsapp.com/c...
Facebook Link : www.facebook.c...
Instagram Link : www.instagram....
.............................................................................................................................................................
For Business :
Email : vangapanampannalam@gmail.com
15 сен 2024