மேலணிக்குழி சண்முகவிலாஸ் மளிகை கடையா! கடலா? | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you. #3NimishamIrukkuma?
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்... எல்லாரோட எண்ணத்தையும் ஒடச்சிட்டீங்க சார் கடை எங்க இருக்குங்குறது முக்கியம் இல்லை எப்படி வச்சிருக்கோம் எப்படி கொடுக்குறம்னு அதான் சூப்பர் சார்...
அருமை ,அருமை, நீங்க எப்படி கந்தசாமி அவர்களின் மளிகை கடை அல்ல கடல் பற்றி சொல்ல தேர்ந்தெடுத்தீர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இலவசம் என்று விளம்பரப்படுத்தும் இந்த உலகில் தரம் & நியாயமான விலை, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு என்று சண்முகவிலாஸ் சேவை கேட்க கேட்க பிரமிப்பாக உள்ளது. அதுவும் எங்கள் கார்த்தி குரல் கம்பீரமானது. மூன்று நிமிஷம் இருக்குமா சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். K. Swami, Thanjavur.
நான் ஒரு விழாவிற்கு மளிகை போட்டேன்.ஒரு லட்சம் வேறு மளிகை கடையில் போட்ட பில் இங்கு 89000 தான் வந்தது.மற்ற இடங்களைவிட பொருள் தரமாகவும் மற்றும் பத்து சதவீதம் போல விலை குறைவாகவும் இருக்கிறது.
மிக மிக அருமையான பதிவு கந்தசாமி சார் அவர்களின் சாதனையையும் அவருடைய உழைப்பையும் நீங்க எடுத்து சொன்ன விதம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிரமாதம் உங்களது வாய்ஸில் கேட்கும் பொழுது எங்களுக்கு எல்லாம் ஒரு தனி உற்சாகமும் தனி எனர்ஜியும் கிடைக்கிறது நன்றி கார்த்தி சார் உங்களுடைய உற்சாகமான சாதனைகள் நிறைய தொடர வேண்டும்
நான் இப்போது தான் இந்த கடையை பார்க்கிறேன், முதலில் உங்களுக்கு ஒரு பாராட்டுக்கள் நல்ல விசயம் பதிவு செய்ததற்காக,படித்து முடித்து தன் தகப்பனார்க்கு உதவியாக இருக்கும் இரண்டு பையன்களுக்கும் எனது பாராட்டுக்கள்.தனிமணிதன் உழைப்பு,45 ஆண்டு அனுபவம் மாத்தி யோசித்த மனிதன்.மைக்கில் பேசி ஆட்களை வேலை வாங்கும் விதம் யோசிக்க வேண்டிய விஷயம்.நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பு தந்துள்ளார் மொத்தத்தில் எல்லா வியாபாரிகளும் கத்தகிடனும்.நேரில் சந்திக்க தோனும் மனிதர்.
நல்ல பதிவு sir... யாரு எங்க இருந்தாலும் முன்னேறி வரலாம்னு இது உதாரணம் sir இந்த வீடியோ... தெரியாத மக்களுக்கும் தெரியவைக்கும் உங்க வீடியோ msg sir... Super...மக்கள் பயன் அடைய வேண்டும் என்ற உங்க எண்ணம்தெரிய வைக்கும் உங்கள் முறை, முறைச்சி 👏... உங்க ஒரு ஒரு வீடியோல தெரியிது sir...
உங்கள் புதுமையான வியாபாரம் அறிமுகம் பயணம் வெகு சிறப்பு.முதலில் உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் கார்த்தி. இந்த பிரமாண்ட மளிகை சாம்ராஜ்யம் இன்னும் உலகம் பார்க்க, வந்து பார்வையிட்டு பயன்பெற இந்த காணொளி உதவும். இங்கு எனக்கு பிடித்த அம்சங்களை உங்கள் காணொளி பார்த்ததன் விளைவாக பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 1. அந்த நிறுவனம் உருவாக்கிய ஐயாவின் நிதானம், பொறுமை, பக்குவம், தலைமைத்துவம், வியாபாரம் நுணுக்கங்கள் எல்லாம் அவரின் அனுபவத்தை காட்சிபடுத்துகிறது. எல்லாமே பணம் கொடுத்து கொள்முதல் செய்தல் மற்றும் ஒரு சிறப்பு. அடுத்தது நான் கவனித்தது அங்கு காட்சியான ஒரு சிறு அறிவிப்பு.. இங்கு குட்கா போன்றவைகள் விற்பனை இல்லை. இந்த ஒரு அம்சம் போதுமே ஐயா அவர்களின் வளர்ச்சிக்கு.. தனது தொழில் நுட்பத்தை சொல்லி தருகிறேன் என்ற வார்த்தை யாரிடமும் இருந்து வாய் வார்த்தைக்கு கூட வருவது இல்லை. இதை அவர்கள் சொல்லி தருகிறேன் என்பது அவரின் மனப்பக்குவம். இறுதியாக நீங்கள் கூறிய தொழில் நேர்மை, உண்மை, நியாயம்.. இது ஒன்றே போதும்.. இந்த வாழ்வியல் மந்திரங்களை யாரும் கடைபிடித்தால் நிச்சயம் ஒரு நாள் அவரவர் துறையில் வெல்லலாம் என்பதை இந்த காணொளி நிரூபிக்கிறது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் கார்த்தி 🌹🌹
This maliagai shop ( kadal ) owner's entrepreneurship is highly laudable. His service particularly for the rural folk deserves appreciation from everyone. His success lies in his sustained hardwork and customer satisfaction. All praise the owner.