மிக அருமையாக உள்ளது அப்பா... இப்பொழுது இருக்கும் இந்த காலக்கட்டத்தில் சிறுவர்கள் இதுபோல இயற்கையோடு ஓடி ஆடி விளையாடுவதும், கலைகளில் ஈடுபட்டு இருப்பதை காண்பதற்கும்..பார்ப்பதற்கே எனக்கு புத்துணர்ச்சியாக உள்ளது.. 😍😍
குழந்தைகள் எல்லாம் இக்காலத்தில் தொலைபேசியை உபயோக படுத்தும் விதமாக மாறி விட்டது வையகம்... இக்கட்டத்தில் இது போன்ற குழந்தைகள் செய்யும் பல நல்வினையை பற்றி கூற அப்பா எடுத்த முயற்சிகள் என்னை வியக்க வைக்கிறது... மற்றும் பாடல் வரிகளும் அருமை... மேலும் பல பாடல்கள் எழுதி மேன்மேலும் பெருக வாழ்த்துக்கள். அன்பு மகள் கண்மணி.
ஆர்ப்பரிக்கும் இளமை அடங்கி நின்றுவிட்டது. கருணை சுரக்கிறது. கண்ணீர் வருகிறது. கீர்த்திமிகு நேர்த்தியாய் நீ நின்று நிலைத்திருப்பாய்... நெஞ்சகம் தன்னில் தொழுது வணங்கி... அவனின் அமைதியை நேர்மையாய்ப் போற்றி, வழிந்த கண்ணீரை பாடல் ஆக்கி, நான் ஒரு பாடல் பாடுகிறேன் என்று உனக்காக இசை ... பாடுகின்றார் . பரந்தவெளியில் மிதந்து வரும் காற்றில் பாடல் உன் காதுகளில் விழட்டும்! அருள் வாழ்த்து நிறையட்டும்!!
உருக்கமான வரிகள், தோழா... கவியாய், இசையாய் என்றென்றும் நீ வாழ்கிறாய். நட்புக்கு இலக்கணம் எம் இசை அண்ணா, எம் இசையின் இதயம் இவ்வளவு மென்மையா? எம் இசையின் இதயத்தில் வாழ்ந்த உன்னை, எம் இதயத்திலும் ஏற்றிவிட்டதே இசையின் இசை. வாழ்க தோழா...
எனது அன்பான வேண்டுகோளுக்கு தங்களின் இதய செவியை கொடுத்தும் அதைஏற்றும் புதியதாக SUSCRIBERS-ஆக isaivanan official -ல் இணைத்துக்கொண்ட என் அன்பான தமிழ்நெஞ்சங்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்-வாழ்க வளமுடன்-என்றென்றும்-உங்கள் இசைவாணன்.