கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணியஸ்தலமான சபரிமலையில் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கார்த்திகை மாதம் பிறந்தாலே, சுவாமி ஐயப்பனின் அதிர்வுகள் நம்மை ஆட்கொள்ளும். எங்கு பார்த்தாலும் மாலையணிந்த பக்தர்கள் இருமுடிக் கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்வார்கள். ஆனால் சபரிமலைக்கு எல்லோராலும் செல்ல முடிவது இல்லை, சில காரணங்களால் பிரயாணம் தள்ளிக்கொண்டே செல்லும். ஆனால், அப்படி செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள இந்த கோயிலுக்கு மாலையணிந்து இருமுடியுடன் சுவாமி ஐயப்பனை வழிப்பட்டு செல்கின்றனர்.
29 сен 2024