#kudukuduppukaran #metromail #blackmagic In This Interview Kudukuduppai Karar Mr. Murugesan Talking About The Dark Side Of Jakkama's Secret And His Life Struggles .
நான் 8 வயதாக இருக்கும் போது கனவில் ஒரு குடுகுடுப்பைக்காரர் என்னிடம் என் வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிளில் முன்பக்கம் சேவல் உருவம் பதித்த கம்பி இரண்டில் ஒன்றைக் கேட்டார். நானும் கொடுத்து விட்டேன். அடுத்த நாள் காலையில் ன் அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் என்ன விபரீதம் நடக்கப் போகுதோ தெரியவில்லை என்றார்கள்.அந்த சமயத்தில் எனது மாமா சுகமில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தார். ஒரு பலசரக்குக்கடையை என் மாமாவும் அப்பாவும் பார்ட்னராகத்தான் நடத்தினர். எனது அம்மாவுக்கு பயம் இரண்டு கம்பிகளை இரண்டு பேரையும்சம்பந்தப்படுத்தி பார்த்து பயந்தார். எனது மாமா உயிருக்கு ஆபத்து என்று நினைத்தார். உண்மையில் அதிலிருந்து எட்டாம் நாள் எனது மாமா இறந்துவிட்டார். இப்போது எனக்கு வயது 68. இன்னும் அந்தக் கனவு மனக்கண் முன்னே வரும்.