அருமை தோழரே நீங்கள் மற்றும் மதுரை தோழர் ஹக்கீம் ஆகியோரால் சிறு சட்ட அறிவை பெற்றுள்ளோம் எங்கள் ஊராட்சியில் கேள்விகளை எழுப்பி பல திட்டங்களை பெற்றுள்ளோம் அனைத்தும் உங்கள் இருவரையே சாரும் நன்றி தங்கள் பணி மேலும் தொடர வேண்டும்
ஐயா வணக்கம் என் தாய் பெயரில் உள்ள AD பட்டாவில் வேறுவொருவர் வீடு கட்டி உள்ளார் ( கூரை வீடு) அவருக்கு AD பட்டா உள்ளது அதாவது இரண்டு மனை இரண்டு வீடு அதில் ஒன்று எங்கள் பட்டா ஒன்று நாங்கள் 27 வருடம் வாழ்ந்து வந்த வீடு தெரு என்பதால் ரோடு போட வீட்டைப் பிரிக்க சொல்கிறார்கள் எங்கள் பட்டாவில் கட்டியுள்ள வீட்டைப் பிரிக்க முடியாது என்று சொல்கிறார்கள் எங்களுக்கு பிரதமர் வீடு வந்துள்ளது வீடு கட்ட சொல்கிறார்கள்
2020ல்பாகப்பிரிவினை மூலம் பெறப்பட்ட வீட்டிற்கு பட்டா பெற்று விட்டேன். மாநகராட்சி யில் வீட்டு வரி கட்ட வழி காட்டுங்கள். எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கட்டவேண்டும்? தவறினால் அபராதம் உண்டா? விரிவாக விளக்கினால் நன்று.
ஐயா வணக்கம் பட்டா வேறொருவர் பெயரில் உள்ளது.வீடு நான் கட்டி குடியிருக்கிறேன் இதுவரை எனது மனைவி பெயரில் வீட்டு வரி இதுவரைபெற்றுவந்தேன்.இருபதுவருடம் ஆகிவிட்டது.ஆனால் பட்டாதாரர் எங்களுக்கு இரசீது தரக்கூடாது என்று மனுசெய்துள்ளார்.நாங்கள் இன்னும் இரசீது வாங்க செல்லவில்லை.நத்தம் இடம்.முன்பு எனது தாத்தா பாட்டி வாழ்ந்த வீட்டு மனை.மின் இணைப்பு எங்கள் பெயரில் உள்ளது.இனி நாங்கள் இரசீது பெறச் சென்றால் கிடைக்குமா? தரவில்லை என்றால் என்ன செய்வது?
சார் அப்பா பெயரில் பட்டா இருக்கிறது ஆனால் அம்மா பெயரில் வீட்டு வரி ரசீது கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அம்மா ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் அப்பா பெயரிலேயே வீட்டு வரி ரசீது வழங்க அம்மாவுடைய இறப்புச் சான்றிதழ் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்தும் அப்பா பெயரில் வீட்டு வரி ரசீது வழங்க இழுத்து அடித்துக் கொண்டே வருகிறார்கள் அப்பா பெயரிலேயே வீட்டு வரி ரசீதையும் பெற என்ன செய்ய வேண்டும் வாரிசு சான்றிதழும் கேட்டார்கள் என்பதற்காக Vao thasilthar office ஆகியவற்றில் நடையா நடந்து வாங்கினேன் அதைப் பெற்றுக் கொண்டும் நான் அலைக்கழிக்கப்படுகிறேன்
இனிய வணக்கம். முதலில், தாங்கள் தமிழ் மொழியினை நன்கு கற்றல் வேண்டும். அதன் பின்னர் கருத்துக்கள் பகிர்வது சிறப்பு. வார்த்தைகள் மற்றும் சொற்களை கவனமாகவும், சரியாகவும் உச்சரிப்பது சிறப்பு. இனிய சிந்தனைக்காக.
ஐயா வணக்கம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) ல் OSR நகல் வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினேன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் கிரமத்து OSR நகல் பதிவு வைப்பறையில் இல்லை எனவே 6(3)ன் கீழ் ஆவண காப்பகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்பு ஆவண காப்பகத்திலிருந்து எங்கள் கிரமாம் இனாம் கிரமாம் ஆகும் OSR நகல் ஆவண காப்பகத்தில் பதிவு இல்லை என்று பதில் வந்துள்ளது.? OSR DOCUMENT VERA ENGA KEDIKUM?
நத்தம் பட்டாவில் உள்ள வீடுகளுக்கு வரி கட்டினாள் ஆன்லைனில் பதிவு செய்ய முடியுமா ஆ பதிவேட்டில் பட்டா இல்லை ஆனால் அந்த இடத்துக்கு வருவாய் துறையில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தும் அரசாங்க சீலுடன் பட்டா எண் உள்ளது தற்சமயம் காளீ இடமாக உள்ளது
In Panchayats the residents prepare fake Documents & collect taxes according to ther will&pleasures. Based on house tax raceipts EB servives be granted by this way Theft current useages increased. It is to be stopped immediately.
,😅🎉😅😅 😮😢🎉😂❤l😅அனுப்புநர் : M.புதியராஜ் , S/O முத்துசாமி கோனார், 56/10, நடுத்தெரு, இராஜபதி கிராமம், கங்கைகொண்டான் P.O., திருநெல்வேலி மாவட்டம். ( மற்றும் சகோதரர்கள்) . பெறுநர் : உயர் திரு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள், திருநெல்வேலி. 9. அய்யா பொருள் : உயர் மின் அழுத்த. இரட்டை சுற்று பாதை மின் கோபுரம்அமைப்பதற்கு நிலம் கையகப் படுத்துவது சம்மதமானது. பார்வை : 1) திருநெல்வேலி கனம் வருவாய் கோட்டாட்சி தலைவர் அவர்களது அலுவலக அறிவிப்பு எண்: ந.க.அ5/2876/2023 Dt 14.08.2023. 2) திருநெல்வேலி கனம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் அலுவலக அறிவிப்பு எண் COLL TNV / 5592 / 2023 - G2. Dt. 15.8.2023. oooOooo எங்களுக்கு திருநெல்வேலி மாவட்டம்,மானூர் தாலுகா, சித்தார்சத்திரம் கிராமம் அ.பு. சர்வே எண் 546 , 549. & 576 யில் 13.36 ஏக்கர் நிலம் உள்ளது. மேற்காண்ட 13.36 ஏக்கர் நிலமும் வீட்டு மனைகளாக உள்ளது. .இந்த நிலத்தை சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக. கங்கைகொண்டான் Sipcot. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புகளை வெளியிடப்பட்டு , தொடர்ந்து பல முறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு, முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கண்ட. எங்களது வீட்டு மனைகளாக உள்ள நிலத்தின் வழியாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைத்து இரட்டை சுற்று மின்பாதை ( Double Circuit ) அமைப்பதற்கான பார்வையில் கண்ட அறிவிப்புவந்துள்ளது. இந்த பகுதியில் குடியிருப்பு வீட்டு மனைகள் அதிக. அளவில் இருப்பதால் பெரும் மின் விபத்தும், உயர் மின் கதிர் வீச்சும் ஏற்படும்அபாயம் உள்ளது.மேலும் வீட்டு மனைகளாகஉள்ளதால் எங்களுக்குறிய.நிலத்தை நாங்கள் கொடுக்க.விரும்பவில்லை என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம். l L