அளவை எட்டியதால் அளவெட்டி என்ற பெயர் வந்தது. கலை கலாச்சாரம் கல்வி கேள்விகளில் அளவை எட்டிய கிராமமாக இருந்தது. பல கலைஞர்களையும் கல்விமான்களையும் கவிஞர்களையும் ஈன்றெடுத்த ஊர்
பவனீசன் அளவெட்டி என்ற இடத்தில் அந்த யோகா்் சுவாமிகள் மற்றும் வெள்ளைக்கார சுப்பிரமணிய சுவாமிகள் சிவன்ஆலயம் தோற்றம் பற்றிய உங்களின் தெளிவான விளக்கம் தமிழின் உயிா்ப்பு தெரிகிறது. காட்சிகள் அருமை அந்த சிவன் ஆலயம் மாறுபட்ட அமைப்பு அழகு.❤காட்சிக்கு நன்றி .
நன்றி அண்ணா எமது ஊர் அளவெட்டியை எடுத்து காட்டியதற்கு ஆனால் இதை விடவும் இன்னும் நிறைய இருக்கு குளம்,நெல் நிறைந்த வயல்,சுத்தீர கிணறு நிறைய கலைஞர் உருவாக்கிய ஊர் அண்ணா
அளவெட்டி என்ற பெயர் எப்படி ஏற்பட்டதாக அங்கு தற்போது வாழுகின்ற மக்களுக்கு தெரியாமல் இருப்பது எனக்கு கவலை அழிக்கின்றது. அளவுக்கு எட்டிய பெரிய கிராமமாக எமது மூதாதையர் கருதியதால் தான் அளவெட்டி என்ற காரணப்பெயர் வந்தது. நான் அளவெட்டியில் 77 வருடத்திற்கு முன் பிறந்து வளர்ந்த வளர்ந்தவன். தற்போது 46 வருடங்களாக லண்டனில் வாழ்ந்து வருகின்றேன்.
ஊர் ,வீதியின் பெயர்கள் சொல்லி காணொளியைப் பதிவு செய்தமைக்கு நன்றி பவனீசா.... அளவெட்டியில் அதிகம் கோவில்களும், முன்னணி நாதஸ்வரக் கலைஞர்களையும் உருவாக்கிய ஊர்.
வணக்கம் தம்பி பவனீசன்!! அளவெட்டியின் செய்திகளை அளவெட்டின் சரித்திரம் தெரிந்த பூர்வீகமானவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொண்டால் பலப்பல சுவையான அருமையான தமிழர் வாழ்வும் கலை கலாச்சாரங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களைப்பெறலாம்.
தம்பி பவனீசன் எங்கள் ஊர் அளவெட்டி யை பதிவிட்டதற்கு மிகவும் நன்றிகள் முதலில் காட்டிய சிவன் கோவில் ஹவாய் இறைவன் ஆலய குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் ஆன்மிகம் தேடி 1945ம் ஆண்டு இலங்கை வந்த போது கொழும்பில் அளவெட்டியைச் சேர்ந்த கந்தையா செட்டியார் என்ற கல்வி மானை சந்தித்த போது அவர் அந்த மனிதரை யாழ்ப்பாணம் அழைத்து வந்து கொழும்புத்துறை தவத்திரு யோகர் சுவாமிகளிடம் சேர்ப்பித்தார் அவரிடம் தீட்சை பெற்ற பின் அந்த கந்தையா செட்டியாரிடம் கொண்ட அன்பினால் அளவெட்டியில் ஓரு வீட்டில் அவரை அமர்த்தி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க சைவர்களை அழைத்து வந்து பஜனைகள் செய்வார்கள் பின் 1979ம் ஆண்டு சற்று தள்ளி கடைத்தொகுதி உள்ள பகுதியில் ஒரு இரு மாடி கட்டிடங்களை வாங்கி அதில் சைவ ஆசிரமம் அமைத்தார் .போர் காலத்தில் அந்த கட்டிடம் முற்றாக அழிந்து விட்டது இன்று கோவில்உள்ள காணிதான் சுவாமிகள் வாங்கிய முதல் காணி அதிலும் 1978 காலப்பகுதியில் சிவலிங்கம் ஒன்றை அமைத்து கோவில் வழிபாடு செய்தனர் இன்று அதே காணி புதிய கோவில் அளவெட்டி என்ற பெயர் வர காரணம் அதன் எல்லைகள் அளவுக்கு எட்டியதால் என்பதே ஆகும் .சோழ நாட்டு மாருதப் புரவீகவல்லி என்ற இளவரசி மாவிட்டபுரம் முருகன் ஆலயத்தை அமைத்த பின் ஏழு பிள்ளையார் ஆலயங்களையும் அமைத்தார் அவையாவன 1.கொல்லங்கலட்டி பிள்ளையார் 2. பன்னாலை பிள்ளையார் 3. அளவெட்டி அழகொல்லை பிள்ளையார் 4அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் 5..அளவெட்டி பெருமாக்கடவை பிள்ளையார் 6.ஆலங்குழாய் பிள்ளையார் 7.கல்வளை பிள்ளையார் யாழ் குடா நாட்டில் உள்ள வழுக்கை ஆறுதான் நீங்கள் பார்த்த வெள்ளவாய்க்கால் அளவெட்டியி வாழ்ந்த தவில் மேதை தட்ஷணாமூர்த்தி நாதஸ்வர மேதை என் .கே பத்மநாதன் ,சிதம்பர நாதன் இப்படி எண்ணற்ற கலைஞர்கள் மீதி அடுத்த பதிவில் இ யோகேந்திரன் --நோர்வே
யோகர் அண்ணா நாங்களும் இந்த கோவிலில் செட்டியார் யோகம் அக்கா அவர்கள் இருக்கும் போது பூஜைகள் பார்த்து மதிய போசனம் குருபூஜை எல்லாம் பார்த்து பயனையில் கலந்து கொண்டு தேவாரங்கள் பாடிய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது மிக்க நன்றி பவனீஷன் 2023ல் இந்த கோவில் போய் பார்தோம் மிக்க மகிழ்ச்சி 🙏
அளவெட்டி என்ற பெயர் வந்த காரணம் அளவுக்கதிகமாக செல்வங்களைகொண்டிருந்தமையால் அளவெட்டி என்ற பெயர் வந்தது .நீங்கள் அளவெட்டி மேற்கு அளவெட்டி தெற்குக் கும் வரவேண்டும்.அடுத்த காணொளியில் உள்ளடக்கவும் நன்றி.