இறைவனின் உருவமற்ற நிலைக்கு பிரம்மம் என்று பெயர். இறைவனுக்கு பல நிலைகள் உள்ளன. அதில் ஒன்று உருவமற்ற நிலை. அந்த நிலையியை அடைய வேண்டுமானால் மனிதன் உடல்,மனம் இவைகளிலிருந்து விடுதலை அடைய வேண்டும்.நான் ஆன்மா என்பதை அனுபவத்தில் உணரவேண்டும். இவை தவிர இறைவனுக்கு உருவமுள்ள நிலைகளும் உள்ளன. படைத்தல்,காத்தல்,அழித்தல் போன்ற தொழில்களை செய்யும்போது உருவத்தில் காட்சி தருகிறார்.