இப்போது வெளியாகும் தமிழ்ப் படங்களில் 90சதவிகிதப் படங்களுக்கு நான் தான் பாட்டு. இது ஒருவகையில் மோனோப்பலி போல்தான்.. தொழில்ல போட்டி இல்லேன்னா தரம் எங்கிருந்து வரும்? என்று கேட்டது கவியரசரே தான்.. இன்றைய திரைத் துறையினருக்கு இது ஒரு பாடம்…
சார் உங்க அப்பா நல்லவர். அவர் ஆன்மா உங்கள் கூடவே இருக்கும். கலங்க வேண்டாம். நாங்கள் உங்களுக்குக்காக நிச்சயம் ஆண்டவனை பிரார்த்திப்போம்.உங்கள் பதிவு கேட்டுவிட்டு கண்கலங்காமல் இருந்ததில்லை.என்ன ஒரு மனசாட்சி. தெய்வம் சார் அவர்.
Nobody could match our Kavignar Kannadasan for his songs, humanity and wisdom. Wish somebody should emerge to,at least to emulate his deep knowledge of Tamil and its great literature and its richness. Also his way of making a common man understand his evergreen songs and its message/meaning. Great, my salutes his memory
கவியரசரின் நல்ஆசிகளும், அவர் தன் உயிராய் மதித்து வணங்கிய கண்ணனின் அருளாசிகளும் தங்கள் மகள் திருமணத்தை உடன் நின்று மிகவும் சிறப்பாக நடத்தித்தரும். மேளங்கள் முழங்கிவர, மேடை அழைக்கவர காதல்மணம் சூழவர அருமை மகள் கழுத்தில் எங்கள் எல்லோரின் ஆசியுடன் மங்கலநாணை மாப்பிள்ளை அணிவிக்கட்டும். கொட்டட்டும் மேளம், குவியட்டும் கோடிமலர், கட்டட்டும் மாங்கல்யம் மனை வாழ்க, துணை வாழ்க, குலம் வாழ்க.
எங்கள் அன்பும் ஆசீரும் என்றும் உங்கள் குடும்பத்தில் அனைவருடனும். புதுமண பிள்ளைகள் எல்லா வளமும் பெற்று நலமாய், கவிஞர் புகழாய், நீடூழி வாழ வாழ்த்துகிறோம்!!!
இவ்வளவு நாட்கள் உங்கள் பதிவு வராததால் உண்மையில் மனம் கலங்கி தான் விட்டது. மனம் இப்போது லேசாகி விட்டது. நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏 கவியரசர் ஒரு மகாகவி மட்டுமல்ல ஒரு மாமனிதர். தானே கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்று எண்ணாமல் தனக்கு நிகரான கவிஞர்களுடன் பறப்பது தான் ஆரோக்கியமானது என்று எண்ண எவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும். வாழ்க கவியரசர் புகழ்🙏💐
உங்களது குடும்பம், வாழ்வாங்கு வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது வாழ்வு சிறக்க ஆண்டவன் அனுதினமும் துணையிருந்து அருள் புரிவானாக. மகளின் திருமணம் சிறப்பாக நடக்க எனது ஆசிகள்.
கவியரசர் இல்லாத இவ் உலகத்தில், ஏதோ பெயர்க்கு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், அடடா என்ன ஆச்சரியம், நம் இதயத்திலும், நினைவுகளிலும் அல்லவா ஒரு மாபெரும் அரசனை போல் வாழ்ந்து கொண்டிருன்றார். வாழ்க கவியரசர் புகழ், ஒவ்வொரு நல்ல மனம்படைத்த, தமிழ் நெஞ்சங்கள் உள்ளவரை, இவ் வையகம் உள்ளவரை, வாழ்க பல்லாண்டு, எந்த நிலையிலும் கவியரசருக்கும் 🙏, அவர் தம் புகழுக்கும் மரணமில்லை.
தங்கள் தந்தையின் பாடல் வரிகளையே பதிலுக்கும் மனவுருதிக்கும் தருகிறேன்: "அவன் தானே நம்மை செய்தான் துன்பங்கள் ஏனடா?" துன்பம் தொலையும் வழியை அவனே அருள்வான். "நல்லவர்க்கு நல்லதெல்லாம் நடப்பது தான் நீதியடி !" இதுவும் கவியரசரின் வரிகளே. வணக்கம், வாழ்த்துக்கள்.
கவியரசரின் தெளிந்த நீரோடை போன்ற அவரது தூய மனதினால் தான் சாகாவரம் பெற்ற எண்ணற்ற கவிதைகளை படைக்க இயன்றது. அந்த உன்னத ஆத்மா பல தலைமுறைகள் வரை உங்கள் குடும்பத்தைக் காக்கும். தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து வளங்களும், மகிழ்ச்சியும் பெற்று சுபிட்சமாய் அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும். வாழ்க வளமுடன்! 🙏
கவியரசு கவித்திறன், ஆற்றல் போட்டியை பொறுத்து அல்லாமல், எப்போதும் அவருக்குள் உள்ள அதிகபட்ச, மிகச் சிறந்த திறமையை அவர் தம் இலக்கிய படைப்புகளில் வெளிக்கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.தங்கள் மகள் திருமணம் கடவுள் அருளால் சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.
தங்கள் மகளின் திருமண வைபவம் மிக சிறப்பாக நடந்தேரும் இறைவன் அருளாலும், தங்களது தந்தையின் ஆசியாலும், என்போன்ற கவிஞரின் பக்தர்களின் வாழ்த்துக்களாலும். நீண்ட நாள் கழித்து தங்களது பதிவு கண்டு மனமகிச்சியடைந்தேன். இறைவன் முருகன் பேரருளால் மணமாகும் குழந்தைகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.
அன்புள்ள சகோதரரே தங்களின் மகள் திருமணம் ஐயாவின் ஆசியாலும் கடவுளின் அருளாலும் சிறப்பாக நடைபெறும். எல்லாம் நன்மைக்கே... உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்
கடவுள் தங்கள் குடும்பத்தினருக்கு எந்த குறையும் வைக்க மாட்டார். தாங்கள் இந்த பதிவை செய்த முறை மிகவும் அருமை. தங்கள் மகளின் திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்🙏
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே கலங்காதீர்கள் உங்களுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். கண்ணதாசன் என்ற மிகப் பெரிய ஆளுமை அவரின் ஆன்மா தன் பேத்திக்கு நல்லதே நடக்கும். எங்களின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்உண்டு. உங்களுடைய பதிவுகள் வராமல் பழைய பதிவுகளை யே திரும்பத் பார்த்துக்கொண்டிருந்தேன் நேரம் கிடைக்கும் பொழுது பதிவுகளை போடுங்கள் வாழ்க வளமுடன்
வணக்கம், கவலை வேண்டாம் ஐயா கவியரசர் கண்ணதாசன் வீட்டு கல்யாணம் மிக சிறப்பாக நடந்தேறும் கோடான கோடி உள்ளத்தை தன் பாட்டு வரியால் பட்டா போட்டுகொண்ட அந்த மாமனிதரின் பேத்தியின் திருமணம் நன்றாகவே நடைபெறும் மணமக்களுக்கு என் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துகளும் சீறும் சிறப்புடன் வாழ மனம் மகிழ்ந்த ஆசிர்வாதமும் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
நீங்கள் கண்ணதாசன் ஐயா பற்றி சொல்லப்படும் விஷயங்களை வைத்து தான் என்னோடு ஒவ்வொரு நாளும் நகர்கின்றன கண்ணதாசன் ஐயா நினைவால் தான் நான் என் மனம் ஒவ்வொரு நாளும் கவலைகளை தாண்டி ஓடி கொண்டிருக்கிறது..ஐயா அவர்கள் அனுதினமும் என் கவலையை போக்கி கொண்டுள்ளார். கவலையை போக்குப்பவன் கடவுள் அந்த வகையில் என் கடவுள் கவிஞர் கண்ணதாசன் ஐயா மட்டுமே... என்றும் கண்ணதாசன் ஐயா நினைவில் நாங்கள்...
கவிஞர் ஒரு காவியம் அதுமட்டுமல்ல அவர் ஒரு திறந்த புத்தகம் தன் குணநலன்களை மறைக்காமல் சொன்ன மாமேதை கவிஞர் ஒரு காவியம் கவிதை இலக்கியம் இதிகாசம் அவர் ஒருபோதும் தன்னை உயர்வாக சொல்லியதில்லை ஆனால் இன்றைக்கு தனக்கு நிகர் யாருமில்லை என ஒன்றக்கும் உதவாத வார்த்தைகளை மீண்டும் மீண்டும் எழுதிய வார்த்தைகளை பாடலாகத்தரும் அந்த கவிஞர்போல் அல்லாமல் சுவைக்க சுவைக்க திகட்டாத வார்த்தைகளை பாடலாக தந்த ஒப்பற்ற கவிஞர் நம் கண்ணதாசன் ஒரவரே.
ஃபேஸ்புக்கில் வாலி அவர்களது பேட்டி ஒன்று பார்த்தேன். அதில் அவர் கூறுகிறார்:- மன்மதலீலை படத்தில் கண்ணதாசன் எழுதிய "மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரம்" என்ற பாடலில் "கணவன் அமைதெல்லாம்" என்று இருந்திருக்க வேண்டும் அதைப்பற்றி கண்ணதானிடமே கேட்டேன். அவர் பதிலாக 'அது இயக்குனரின் பொறுப்பு' என்று கூறி முடித்து விட்டார்." இது எந்த அளவிற்கு உண்மை என்று அறிய அந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். அதில் கண்ணதாசன் சரியாகவே எழுதியுள்ளார். அதனால் தான் இயக்குனர் சிகரம் என்று அறியப்படும் பாலசந்தரும் அதை அனுமதித்திருக்கிறார். அந்தப் பாடல் கமல்ஹாசன் தான் காதலிக்கும் அடுத்தவன் மனைவி பற்றியும் தன் மனைவி பற்றியுமே பாடுகிறார். வாலிக்கு இது புரியாதது ஏன் என்று தெரியவில்லை.
அந்தக்கொப்புடையம்மனும் குன்றக்குடியாரும் துணை நின்று உங்கள் செல்ல மகளின் திருமணத்தை சீரும் சிறப்புடனும் நடத்தித்தர மனதார வேண்டி மணமக்களை வாழ்த்துகிறேன். ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி . புதுச்சீர் பெறுவாள் வண்ணத்தேனருவி ‘என்ற கவிஞரின் வார்த்தைகளுக்கிணங்க அவர் பேத்தியின் திருமணம் நடைபெறும்.
உங்கள் மகள் திருமணம் அமோகமாக நடை பெறும். மனம் கலங்க வேண்டாம். படைப்பதினால் நான் இறைவன் என்று சொன்ன கவிஞரின் ஆசிகள் உங்கள் குடும்பத்திற்கு என்றும் உண்டு.
உங்களது தந்தையின் ஆசீர்வாதம் ஒன்றே போதும். அது களங்கமற்ற, அன்பு நிறைந்த உள்ளம். வாழ்க்கையை பலருக்கு புரியவைத்த கடவுள். இன்று அந்த மனம் யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம். வாழ்க உமது மகள். வாழ்க பல்லாண்டு. திருமணம் இனிதே நடைபெறும். மணமக்கள் நீடு வாழ்வர், நலமுடனும், வளமுடனும்.
our best wishes and blessings to your daughter and would be son-in-law,will pray to god the Nov.2021 the marriage will be of your daughter will be performed very well.
உங்கள் நல்ல மனதிற்கும், கவிஞரின் பேத்தியாக பிறந்த பாக்கியத்திற்கும், உங்கள் மகள் சகல சௌபாக்யமும் பெற்று எல்லாம் வல்ல இறைவன் அருளால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள்
அண்ணா கவிஞர் சுவாமி விவேகானந்தர் பற்றி ஏதாவது கூறியிருந்தால் அதை எனக்காக தாருங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல கவிஞர் குடும்பத்தினர்க்கே உலகத்தமிழர்களின் ஆசீர்வாதம் என்றைக்கும் இருக்கும்.
You have done & acted correctly by postponing your daughter’s marriage. God will bless the couples.Moreover, the great fans of your dad, all, will be with you&with your family .🙏🙏🙏
சக்தி வசந்தன் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் காணொளி கண்டது மகிழ்ச்சி. உங்கள் முகம் வாட்டமாகவும் சோர்வாகவும் தெரிகிறது. உடல் நலம் பேணுங்கள் சார். உங்கள் மகள் திருமணம் இனிதே நடைபெற எங்கள் வாழ்த்துகள்.
Certainly eagerly awaited for your video and glad it is here, thank you very much for another brilliant share. Kavinyar's works will not bore anyone let alone be an overdose. How I wish I had known better Tamil. Wish your daughter speedy recovery and all the best for her wedding. Best wishes from Malaysia.