பொதுவாக என்ன பலன் என்று கேட்டால் எவ்வாறு கூறுவது பலன் எதற்கு எடுக்க போகின்றீர்கள் புத்திரத்திற்கா? தனத்திற்கா?குடும்பத்திற்கா? வாக்கிற்கா? எல்லா கிரக நிலைகளையும் வைத்தே எந்த ஒரு பலனையும் இறுதி செய்ய வேண்டும்
செவ்வாய் இங்கு பாதக தோஷத்தோடு இருப்பார் செவ்வாயோடு தொடர்பு கொள்ளக்கூடிய கிரகங்கள் அனைத்தும் பாதக தோஷத்தை பெறும். குறிப்பாக ராகுவோடு இணையும் பொழுது ராகு இங்கே சனி அல்லது புதனின் சாரத்தில் அமரக்கூடிய நிலையில் கடுமையான பாதகத்தை பகை வீட்டில் அமர்ந்து இருக்கக்கூடிய ராகு தனது தசா புத்தியில் செய்வார்.
ஐயா அடுத்து மாரகாதிபதி பற்றியும் சொல்லுங்கள் ஐயா மாரகாதிபதி எங்கு இருந்தால் கெடுதல் செய்வார் ன, எங்கு இருந்தால் கெடுதல் செய்யமாட்டார். மாரகாதிபதியின் விதிவிலக்கோடு சொல்லுங்கள் ஐயா🙏🙏
நான் மீனலக்னம் ஏழாம்மதிபதி புதன் பாதகம்செய்வார். அவர் பத்தாமிடமாக தனுசில் சூரியன் சனி புதன் இணைந்துள்ளது ஏழாம் இடத்தில் குருவக்ரமாக பார்க்கிறார்.இது கெடுதலா சார்.
எதை கெடுதலா என்று கேட்கின்றீர்கள்? கிரகம் கெட்டுவிட்டதா என்று கேட்கின்றீர்களா அல்லது பாவகம் கெட்டுவிட்டதா என்று கேட்கின்றீர்களா எது கெடுதலா என்று கேட்கின்றீர்கள்
@@karpagaviruchamastro குரு வக்ரமாக இந்த மூன்று கிரகங்களை பார்ப்பதும் இந்த மூன்றுகிரகங்கள் வக்ரகுருவை பார்ப்பதும் கெடுதலானு கேட்கிறேன் இதில் பாதகாதிபதி புதன் வக்ரம் பரிவர்த்தனை அஸ்ங்கம் அடைந்துள்ளது வக்ரகுருவும் பரிவர்த்தனை அடைந்துள்ளது.
வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏❤
சுக்கிரன் கேது சேர்க்கை ராகு கேது தோஷம் சனி குரு பரிவர்த்தனை என்ற அமைப்பில் ஜாதகம் உள்ளது. சுக்கிர தசையே நடப்பதால் சற்று பாதிக்கப்பட்ட நிறைவற்ற திருமண வாழ்க்கையே அமையும் சுக்கிர தசா சனி புத்தியில் திருமணம் நடைபெறும். திருமண வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்.
எந்த லக்னத்திற்கு மேல் எட்டில் அமரக்கூடிய சனி நல்லதல்ல. அதுவும் லக்னாதிபதி ஆகிய சனி எட்டாம் இடத்தில் அமரும்போது நல்லதல்ல. கேது உடன் இணைந்து இருப்பதால் அவரது கெட்ட குணங்கள் சற்று மட்டுப்படும்