அது அள்ளுனது இல்லை வெண்ணை மக்களே....அந்த பகுதியின் பழக்கமே அப்படி தான்... ஒருத்தர் தான் வீட்ல ஒரு 5 வருஷத்தில் எந்த திருமணமோ இல்லை இல்லை காதணி இல்லை புதுமனை புகுவிழாவோ இல்லை என்றால் அது வரை அவன்க செஞ்ச செய்முறையை திருப்பி வாங்குறது தான் இந்த கடா வெட்டு விருந்து...இதுல எத்தன பேரு சாப்பிட்டு மொய் வச்சிட்டு போயி இருக்கங்களோ அவங்க வீட்டு நிகழ்ச்சிக்கு இந்த mla வர வருஷத்துல திருப்பி செய்யணும் செஞ்சதை அப்படியே யாரும் திருப்பி செய்ய மாட்டாங்க செஞ்சதை விட 500 இல்லை 1000 அதிகமா தான் செஞ்சு ஆகனும்...இது பேராவூரணி அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த பழக்கம்...இந்த பழக்கம் தான் பகுதி மக்கள் ஒரு கல்யாணம் இல்லை வீடு குடி புக யாரிடமும் வட்டிக்கு வாங்குறதை தவிர்க்க தான் இந்த முறை...இது சுழற்சி மாதிரி செஞ்சத்தை திருப்பி செய்யணும் இப்போ இவரின் 10 கோடி செய்முறை வாங்கி இருக்கிறார் என்றால் அவர் கிட்ட தட்ட குறைந்த பட்சம் 5 வருஷத்தில் 9 கோடி கிட்ட செய்முறை செஞ்சு இருப்பார்..அடுத்தமுறை இவர் வீட்ல விழா நடக்கும் போது 10 கொடி கு மேல தான் செய்முறை வரும்...நானும் அந்த பகுதி தான் பட்டுகோட்டை...இது ஏன் ன்ன பண மதிப்பு கொரஞ்சிட்ட் போகும் 20 வருஷம் முன்னாடி உங்க அப்பா கல்யாணத்துல ஒருத்தர் 50 ரூபாய் மொய் வச்சு இருந்தா இப்போ நீங்க அவங்க வீட்ல நடக்குற விஷேதுல அதே 50 ரூபாய்க்கு மேல 1 ரூபா வச்சு 51 ஆக வைப்பீங்களா முடியதுல...அதை தவிர்க்க தான் இங்க இப்படி ஒரு பழக்கம்...