அயோத்தியில் ராமர் கோவிலின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து, வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி கோவிலைத் திறந்து வைக்கிறார். பிரான் பிரதிஷ்டா என்ற கும்பாபிஷேக நிகழ்வும் அன்று நடைபெறவுள்ளது.
இதையொட்டி ‘அயோத்தி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து சுமார் 30,000 கோடி ரூபாய் செலவில் பல மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகின்றன. இதனால், சிறிய, ஆட்கள் அதிகம் வந்து போகாத நகரமாக இருந்த அயோத்தியின் முகம் தற்போது வேகமாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
‘அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் நடந்து வரும் இந்தப் பணிகள் ராமர் கோவிலைச் சுற்றியிருக்கும் பிரதான பகுதிகளில் நடந்து வருகின்றன. ஆனால், ஊருக்குள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், அயோத்தி மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் இந்த வளர்ச்சிப் பணிகள் சென்று சேரவில்லை.
#Ayodhya #India #ayodhyarammandir
செய்தியாளர்: விஷ்ணு ஸ்வரூப்
ஒளிப்பதிவு & எடிட்டிங்: டேனியல்
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
12 янв 2024