குடும்பத்தில் உள்ளவர்களே கல்யாணம் நடந்தால் வேறு குடித்தனம் செலாகிறார்கள் 50 ஆண்டுகள் ஒரு தலைமையில் இருப்பது சாதாரண விசயம் இல்லை நான் கோபி செட்டி பாளையத்தில் ஒரு கிராமத்தை சார்ந்தவன் என் குடும்பத்தில் நடந்த நல்ல நிகழ்வுகள் கெட்ட நிகழ்வுகள் அனைத்திலும் கலந்த உள்ளார் என்வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர் அய்யா கே ஏ எஸ் அவர்கள் அவருடைய தொகுதியில் அமைதியாக இருப்பதற்கு அவருடைய மக்கள் தொடர்பு தான் முக்கியம் அய்யா நீடூழி வாழ்க.. ..
1980 தேர்தல் முடிவுகள் மிக மிக நன்றாக நினைவில் இருக்கிறது. வானொலியில் தேர்தல் முடிவுகளை கேட்டுக் கொண்டு இருந்த போது முதல் வெற்றி அறிவிப்பு கோபி தொகுதியில் அண்ணன் செங்கோட்டையன் வெற்றி என்பதுதான். அதுவும் சுமார் பதினைந்தாயிரம் வித்தியாசம். அந்த வித்தியாசத்தை பார்த்ததுமே தெரிந்து விட்டது அடுத்தது மீண்டும் அஇஅதிமுக ஆட்சிதான் என்பது. செங்கோட்டையன் ராசியான மனிதர் என்பதுதான் இன்று வரை எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. 1980 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து துவண்டு இருந்த நேரத்தில் குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றி என்பது சரித்திர சாதனை. எத்தனை தேர்தல்களை பார்த்திருந்தாலும் 1980 சட்டமன்றத் தேர்தல் போல இருக்க முடியாது.
பேரன்பிற்குரிய அண்ணன் செங்கோட்டையன் அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் சுமார் 50 ஆண்டு காலம் பணியாற்றி வந்த நான் கழகத்திற்கு எப்பேர்பட்ட சோதனை வந்த போதிலும் கழகத்தை விட்டு நடந்ததில்லை இன்றைய காலம் வரை உங்களை போல பாதை தடம் தவறாமல் நடந்து வரும் நான் கழகம் சிதைந்து கிடப்பதை கண்டு மிகவும் மருத்துவமனை உங்களைப் போல மூத்த தலைவர்கள் கழகத்தை கொண்டு சேர்த்து காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன் அண்ணா நாமம் வாழ்க புரட்சித்தலைவர் நாள் வாழ்க அம்மாவின் புகழ் ஓங்குக நாளை நமதே அண்ணன் அவர்கள் ஒன்று படிவுகள் என நம்புகிறேன் நன்றி வணக்கம்
1991 - 96 ல் போக்குவரத்து அமைச்சராக இருந்த பொழுது எங்கள் ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூர் கழத்தில்அன்னை ஜானகி ராமசந்திரன் புகைப்படத்தை அண்ணன் திறந்து வைத்த கல்வெட்டு இன்றும் உள்ளது புரட்சி தலைவரின் விசுவாசிகளில் இன்றும் நம்மிடம் இருக்கும் நபர்கள் அண்ணன் செங்கோட்டையன்பன்ட்ருட்டியார் திருநாவுகரசர் மூவர் மட்டுமே கழகம் மாறாமல் பயணிப்பது செங்கோட்டையன் ஒருவரே
சகோதரர் செங்கோட்டையன்.. நான் பெருமாநல்லூர் வாசி... உங்கள் மீது மிகவும் மரியாதை உண்டு.... கட்சிகளுக்கு அப்பாற்பட்டு.என் கருத்து.... தமிழ்நாட்டில் இநத அளவு கல்வி பொருளாதாரம் முன்னேற்றம் அடைய இரு கழகக்கட்சிகளே காரணம்.. இன்றைய அரசியல் சூழலில் தமிழ்நாடு தொடர்ந்து நல்ல முறையில் பயணிக்க தங்கள் மாதிரி தலைவர்கள் மிகவும் தேவை... தொடர்ந்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
மதிப்பிற்குரிய ஐயா செங்கோட்டையன் அவர்கள் கோபிசெட்டிபாளையைத்தை மாவட்டம் ஆக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் விவசாய பொருளாதார முன்னேற்ற மாவட்டமாக கோபிசெட்டிபாளையம் மாவட்டம் திகழும்
ஓட்டுக்காக ஒரு கவுண்டர் தான் அதிமுக அடையாளம்னு பேசிய முதல் நிர்வாகி, அன்று என் மனதிலிருந்து மரியாதை இழந்தார். செங்கோட்டையன் அல்ல என்னை பொறுத்தவரை மாங்கொட்டையன்
வாட்சாத்தி கிராமத்தில் காலத்தால் அழியாத கொடுமை துயரம் நடைபெற்ற போது தமிழகத்தில் வனதுறை அமைச்சர் ஆக இருந்தவர் இந்த மாண்புமிகு அமைச்சர்தான்.எந்த ஒரு நிகழ்வும் வாட்சாத்தியில் நடக்கவில்லை என்று கூறிய மாண்புமிகு அமைச்சர் இவர்தான்.
மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களே,, புரட்சித்தலைவி தங்கதாரகை அம்மா அவர்களின் உண்மையான விசுவாசியாக இருந்தீர்கள். போயஸ் கார்டனுக்குள் புகுந்த மாபியா கும்பல் அம்மாவை வீழ்த்துவதற்கு முன்பு உங்களை தனிமை படுத்தியதை கண்டு உண்மை தொண்டர்கள்மனம் வெதும்பினோம். அந்த சதிகலா உங்களை சட்டசபையில் நான்காவது வரிசையில் உட்கார வைத்ததை கண்டு கண்ணீர் வகுத்தோம். மாண்புமிகு அம்மாவையே பிளாக் மெயில் செய்யும் அளவுக்கு சதிகார கூட்டம் வளர்ந்து விட்டது,, கடைசியில் இரண்டு லட்சம் கோடி சொத்துக்காகவும்,, குடும்பத்தை சேர்ந்த அத்துணை மாபியா கும்பல் திருடர்களையும் கட்சியை விட்டு நீக்கியதற்காக பழிவாங்கவும்,, அம்மாவை தீர்த்து கட்டியபோது,, ஒன்றுமே செய்ய முடியாதவராக இருந்து விட்டீர்கள். அப்போலோவில் மாண்புமிகு அம்மாவை மாபியா கும்பல் மறைத்து வைத்திருந்தபோது,, சசிகலா கும்பலுக்கு எதிராக குரல் கொடுத்து,, மாண்புமிகு அம்மாவை காட்டியாக வேண்டும் என்று புரட்சியில் ஈடுபட்டு இருந்தீர்கள் என்று சொன்னால்,, இன்று அண்ணாதிமுகவின் முதல் அமைச்சர் பதவியில் உங்களை தவிர வேறு யாரும் அமர்ந்திருக்க முடியாது. மாண்புமிகு அம்மாவை தீர்த்து கட்டிய மாபியா கும்பலை தமிழக அரசியலில் இருந்து ஒழித்து கட்ட,, உங்கள் கடைசி மூச்சு உள்ளவரை கழக பணியாற்ற வேண்டும்.
2017-2021 ல் கல்வி அமைச்சராக இருந்து இவர் ஆற்றிய சாதனைகள் அதுவும் 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்காக இவர் ஆற்றிய சாதனைகள் மிகவும் குறிப்பிடத்தக்கது.
எனக்கு பிடித்த அரசியல் தலைவர்.....நேரில் கோபியில் நிறைய நேரம் மிக அருகில் பார்த்து உள்ளேன்....இவர் ஆபிஸ் அருகில் ஒரு கடையில் வேலை பார்த்தேன்.....எல்லா தமிழ் ஜாதியையும் நல்ல மதிக்க கூடிய மனிதர்....❤❤❤
சிறந்த அரசியல் பிரமுகர் சிறந்த சமூக பயன்பாட்டாளர் எங்கள் ஊரின் தங்க மகன் கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டை அய்யா அவர்கள் கொஞ்சம் இசைந்து போயிருந்தால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருப்பார் ஆனால் அவர் இசையவில்லை
எனக்கு அதிமுகவை பிடிக்காது அதுவும் குறிப்பாக எடப்பாடியை அறவே புடிக்காது ஆனால் இந்த செங்கோட்டையன் அவர்களின் பேசி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது... என்ன ஒரு கண்ணியமான பேச்சு ரொம்ப பணிவான பேச்சு
நல்ல மனிதர். Senkottayan அய்யாவும். முத்துசாமி யும் mgr காலத்தில் ஒன்றாக பயணித்த போது கோவை perur தொகுதி ஒத்தkaal மண்டபம் கோவை தம்பி காலத்தில் பார்த்தது இப்போது அப்படியே உள்ளார். நல்லவர் எளிமையான நல் உள்ளம் படைத்தவர் எளிமையான திரு kas நீடுழி வாழ வேண்டும் வாழ்த்துக்கள்.
மிகவும் ஆற்றல் மிக்க சிறந்த மனிதர். கூவதூரில் முதலமைச்சர் ஆக தேர்ந்தெடுத்து இருக்க வேண்டியவர். நன்றி உள்ளவர். இவரைவிட்டுவிட்டு நன்றிகெட்ட எடப்பாடியை தேர்ந்து எடுத்ததன் பலன்.. இன்று கட்சியில் யாரிடமும் நன்றி இல்லை அர்ப்பணிப்பு இல்ல விசுவாசம் இல்லை
அம்மா அவர்களால் 2011ல் நியமித்த 16000 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆக விடாமல் அவர்கள் வாழ்வை சீரழித்த பாவம் உங்களை சும்மா விடாது ... கடந்த 12 வருடங்களாக 1)உடற்க்கல்வி 2)ஓவியம் 3)இசை 4)தொழில் கல்வி உட்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 16000 நபர்கள் பணி நிரந்தரம் ஆகாமல் வறுமையில் தவித்து வருகின்றனர் இதில் தாங்க முடியாத வறுமையில் கிடைத்த ஆசிரியர் வேலையையும் விட முடியாமல் வேறு வேலைக்கும் போக முடியாமல் மாதம் 10 ஆயிரம் சம்பளத்தில் வீட்டு வாடகை கொடுப்பதா? போக்குவரத்து செலவு செய்வதா? பிள்ளைகளுக்கு ஆடைகள் வாங்கி கொடுப்பதா? வயதான பெற்றோருக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுப்பதா? மளிகை சாமான்களை வாங்கி கொடுப்பதா என்று தெரியாமல் மெண்டல் டார்ச்சர் ஆகி 120க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தற்க்கொலை செய்து கொண்டார்கள்.. வறுமையில் தவித்து தனக்கு ஏற்பட்ட நோயுக்கு கூட முறையான ஆஸ்பத்திரி செலவுகளை செய்ய வசதி இல்லம்மால் 700க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் இறந்து போனார்கள் கோடானுகோடி வீண் செலவு செய்யும் அரசாங்கம் வெறும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஆண்டுக்கு 180கோடி கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்தீர்கள் அனைவருக்கும் கல்வி (SSA) திட்டத்தின் வழியாக 1500 கோடி வரை மத்திய அரசு வழங்கும் நிதியில் போதும் அதில் 180 கோடியை 16000 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய ஒதுக்கீடு செய்ய நீங்கள் அமைச்சராக இருந்த போது பிடிவாதமாக மறுத்து முடியாது என்று 16000ஆசிரியர்களை பணி நிரந்தரம் ஆக விடாமல் தடுத்தீர்கள்... அம்மா உயிருடன் இருந்திருந்தால் 16000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருப்பார்கள் ஆனால் நீங்கள் கல்வி அமைச்சராக இருந்த போது உங்கள் காலில் விழுந்து கெஞ்சியும் கல் நெஞ்சம் கொண்ட உங்களால் வறுமையில் வாடி தவிக்கும் 15000 பகுதிநேர ஆசிரியர்கள் வயிற்றெரிச்சல் உங்களை ஒரு நாள் இல்ல ஒரு நாள் கேட்கும்..
அஇஅதிமுக வின் ஆணிவேர்.தனது சுயசரிதையை சமகாலத்தில் வெளியிட தகுதி வாய்ந்த ஒரே தலைவர்.நல்ல மனதுக்காரர் தலையே போகிற சூழ்நிலை வந்தாலும் தான் கொண்ட அஇஅதிமுக விட்டு வரமாட்டார் மொத்தத்தில் தலைவர் என்று சொன்னால் தலைமுறைக்கும் சாதனை செம்மல் ஐயா அவர்கள் தான்
❤❤ அம்மாவுக்கு Election campaign point போட்டு கொடுத்த master 🎉🎉 சில சூழ்ச்சியால் அமைச்சர் பதவி விலகினார் பின்னர் முதல்வர் பதவியும் பறிபோனது 😢😢 திமுக எதிர் கட்சியாக இருந்தாலும் இவர் மீது கருணாநிதி,MKS ஒரு நன்மதிப்பு வைத்து இருந்தார்கள்.🎉 மதுரை பக்கம் இவருக்கு தனி விசுவாசிகள் டீம் இருக்கிறது ❤
நீங்கள் எப்படி தலைவர் எம் ஜி ஆர் அவர்களை அண்ணே என்று சொன்னேர்களோ அதே போல் நானும் உங்களிடம் ஒரு வேண்டும் கோள் வைக்கிறேன் அண்ணே அதிமுக ஒன்றாக வேண்டும் என்பதுமட்டுமே ஒரு தொண்டன என் விருப்பம்
Icon of Loyalty ❤️... This man attends not only grand invitations but also the poor funerals on his constituency ... He came to my sisters funeral too... Leader of TN36
தமிழகத்தின் அனைத்து வழித்தடங்களும் நெடுஞ்சாலை மட்டுமல்ல சிறிய கிராம சாலைகள் முதல் ஊர் அமைப்பு தேர்தல் பிரச்சார முறையில் சிறந்த வழிநடத்தல் என்ற சிறப்பு ஜெயலலிதா அம்மாவிடம் இவருக்கு இருந்தது
அன்றைக்கு அண்ணன் அவர்கள் மட்டும் முதல்வராக இருந்திருந்தால் அ இ அ தி மு க வில் பல பிரச்சினைகள் சமநிலை பட்டிருக்கும் நான் பார்த்து வியந்த சாதுரியம் மிக்க மாமனிதர் முகத்தில் எப்பொழுதும் அமைதி தவழும். எல்லோருக்கும் மதிப்பளிக்க தவறாதவர் அண்ணனை நம்பி வந்த எவருக்கும் தீங்கிழைக்காதவர் --- என் மனதில் வந்து போகும் மா மனிதரில் இவரும் ஒருவர்❤❤ ❤❤❤❤❤
அதிமுகவில் இவருடைய உழைப்பு MGR, அம்மா அவர்களுக்கு அடுத்து இவர் தான் இவருக்கு நிகர் யாருமில்லை. 234 தொகுதிகளிலும் இவர் கால் படாத தொகுதி இல்லை. போக்குவரத்து துறையில் இவருடைய சிறந்த பணி இன்றும் பேசப்படுகிறது. தன்னை சந்திக்க வரும் தொண்டர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கும் நல்லபண்பாளர். தலைமைக்கு தகுதி உள்ள நல்ல வர்.