கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் ஒரு பார்பனர். பழங்காலத்தில் நாடக கதை வசன கர்த்தா. தமிழில் வசனம் பாடல்கள் அருமையாக எழுதுவார். அவர் எழுதிய ஒரு நாடகம் நன்கு ஓட வேண்டும் என்பதற்காக (சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள ....திருநாளைப் போவார்..... என்று அழைக்கப்படும் நந்தன் சரித்திரத்தில் ) பொய்யான மாற்றங்களை செய்து ...நந்தன் சரித்திரம்... என்று ஒரு டிராமா எழுதினார். BOX OFFICE கலெக்சன் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான ஐயர் பாத்திரத்தை வில்லனாக ரெடி பண்ணி (தற்போது உள்ள சினிமா போல்) , அந்த நந்தன், அந்த கொடுமைகார வில்லன் ஐயர் வயலில், கஷ்டப்பட்டு வேலை செய்வதாக கதை எழுதினார். உண்மையில் அப்படி கொடுமைகார வில்லன் ஐயர் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. நந்தன் வேலை ஆளும் இல்லை. நந்தனார் அவர் அளவில் ஒரு தனிப்பட்ட சொந்த வயல் உள்ள விவசாயி. நந்தன் நல்ல சிவ பக்தர். கையில் பணம் இருந்தால் அருகிலுள்ள சிவன் கோவில்களில் திருவிழா, திருநாள் என்றால் அந்தக் கோவிலுக்கு பணி செய்யக் கிளம்பி விடுவார். அதனால் அவருக்கு ...திருநாளைப் போவார்.... என்ற பெயர் வந்தது. கோபாலகிருஷ்ண பாரதி புரிந்து கொண்ட தமிழ்நாட்டு Mass Psychology (பொது ஜன பொது புத்தி) என்னவென்றால் ஐயரை வைது தாழ்த்தி வசனம் காட்சி எழுதினால் மற்றவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கும் அதைவைத்து கல்லா கட்டலாம் என்பதே. இதை ஈ.வே.ராமசாமி பெரியாருக்கு முன்பே கோபாலகிருஷ்ண பாரதி தெரிந்து வைத்திருந்தார் என்பதுதான் விஷயம். நந்தன் சரித்திரம் - டிராமா சினிமா இரண்டும் வில்லன் அய்யரால் நன்கு ஓடி கல்லா கட்டியது. நந்தன் தேசிகர் நல்ல பாடகர். அண்ணா, கருணாநிதி, etc., படங்களுமே இதே box office collection style வரிசைப் படங்கள் தான். நந்தனார் டிராமா சினிமா முழுவதும் கற்பனையே. சினிமாவில் சரித்திரம் படிக்கக் கூடாது