ஸ்ரீ காளியம்மன் அருள் மாலை - ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தரக்கூடிய ஸ்ரீ ஆயிரங்களியம்மன் சன்னதியில் பாடுகின்ற பாடல் - காரைக்காலுக்கு அருகில் உள்ள திருமலை ராயன் பட்டினம் என்ற ஊரில் அமைந்துள்ளது .
கந்தவீர மாகாளி கமல மங்களை
கருணையான வடிவழகி கனிந்து நின்றனை
விந்தையாகி விளக்குமாகி விளங்கி வந்தனை
விண்ணுமாகி மண்ணுமாகி வெற்றி கண்டனை
மந்தமான புத்தியோட்டி மணமும் தந்தனை
மலரில் வேதன் உன்னைப்பாட மயக்கம் தீர்த்தனை
சொந்தமான காளியம்மா இந்தநாள் முதல்
எந்தனோடு வாழ்வுமாகி என்றும் தங்குவாய்
நந்தவீர மாகாளி நயன மாலினி
நம்பி வந்த எம்மிடையே நலனும் காட்டுவாய்
இந்த வாழ்வில் உன்னையன்றி இங்கு யாருளார்
இன்று நல்ல காலை வந்து இனிமை கூட்டுவாய்
மந்தையாடு போல வாழ்வில் மயங்கி நில்லாமல்
முக்தியோடு செல்வபோகம் முழுதும் நாட்டுவாய்
சொந்தமான காளியம்மா இந்த நாள்முதல்
எந்தனோடு வாழ்வுமாகி என்றும் தங்குவாய்
பொங்குவீர மாகாளி பொய்மை தீர்மணி
பொறுமையோடு பெருமையாகிப் பொருளும் கூட்டினாள்
எந்தையான சிவனைத்தூது எடுத்து அனுப்பினாய்
எழிலியாகி எண்ணமாகி என்னுள் ஆடினாய்
பந்தனைந்த விரலிநீயும் பகைமை என்றது
பறந்துவந்து படைகளோட்டி பசுமை காட்டினாள்
சொந்தமான காளியம்மா இந்தநாள் முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்
விந்தைவீர மாகாளி விரைந்து வந்திடின்
தொந்த நோயும் வந்த நோயும் தொலைவில் ஓடிடு
எந்தமாயம் எம்மைத்தேடி வந்தபோதிலும்
என்னையீன்ற தாய் நினைப்பில் எரிந்து போய்விடு
சிந்தைவாழும் உந்தன் மஞ்சள் சிறிது பூசிடின்
கந்தனோடு கரியன்நீல கண்டன் காணலாம்
சொந்தமான காளியம்மா இந்தநாள் முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்
ஆதிசக்தி ஜோதிசக்தி ஆளவந்த சக்தியே
ஆகமங்கள் ஆனசக்தி ஆத்மஜோதி சக்தியே
நீதிசக்தி நித்யசக்தி நீறுபூசும் சக்தியே
நீலிசக்தி நிருத்தசக்தி நீலமேனி சக்தியே
காதிசக்தி கானசக்தி காணுமின்ப சக்தியே
காளிசக்தி காயசக்தி காட்சிதந்த சக்தியே
வீரசக்தி தீரசக்தி வீடுகாக்கும் சக்தியே
சூரசக்தி சூலிசக்தி சூழும்சக்தி சக்தியே
சொந்தமான காளியம்மா இந்தநாள் முதல்
எந்தனோடு வாழ்வளிக்க என்றும் தங்குவாய்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்
9 сен 2024