நல்லவனாக இருந்தும் நல்ல பெயர் கிடைப்பதில்லையே ஏன்?
பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வாழ்பவர்கள் எல்லாம் வசதியோடு வாழும் போது, உண்மையாக வாழ்பவர்கள் மட்டும் துன்பத்தில் உழல்வது ஏன்?
கோல்டு மெடல் வாங்கியும் நல்ல வேலை கிடைக்கவில்லையே சிலருக்கு.... என்ன காரணம்?
அழகு இருந்தும், வசதி இருந்தும், அந்தஸ்தான குடும்பத்தில் பிறந்திருந்தும் திருமணம் நடப்பதில்லையே சிலருக்கு என்ன காரணம்.
வருமானம் இருந்தும் வைத்துக் கொள்ள முடியவில்லை. மாற்றி மாற்றி ஏதாவது ஒரு செலவு வந்து கழுத்தை நெரிக்கிறதே என்ன காரணம்?
தப்பு செய்தவர்கள் எல்லாம் தப்பித்துக் கொள்ளும் போது, எந்த தவறும் செய்யாதவர்கள் மாட்டிக் கொள்வதும், வீண் பழியை சுமப்பதற்கும் காரணம் என்ன?
முழு ஆரோக்கியமாக இருந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதும், பிறந்த குழந்தைகளை பால்ய வயதில் இழந்து விடுவதும், வளர்ந்த பிள்ளைகள் கவனிக்காமல் போவதற்கும் யார் காரணம்? அநேகமா இதற்கு பிரம்மஹத்தி தோஷம் காரணமாக இருக்கலாம் என்பார்கள்.
6 сен 2024