Unconditional love gets from only parents.. Due to individual person karma there is partiality... partiality came from individual person karma.. example one guy gets jealous of other guy so there life style will change automatically
True thats the way of life. When you love someone unconditionally whatever happens you will start seeing good in everything and it becomes a optimistic mindset in everything which inturn changes everything in life.
நீங்கள் பதிவு செய்த பதிவுகள் எல்லாவற்றிலும் விட இது மிக முக்கியமான அருமையான பதிவு. மிகத் தெளிவாக, அறிவியல் ஆன்மிகம் பற்றி கூறி இருக்கிறீர்கள். நன்றி, இந்த மாதிரி தெளிவாக தங்கு தடையின்றி விழும் கருத்துக்கள் கொண்ட பேச்சாளர்கள் மிகவும் குறைவு. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🎉❤
இயற்கையோடு பேசுவது மிக எளிமையாய் நடக்கிறது எனக்கு.அவை தரும் பதில்களும் தெளிவாய் புரிகிறது.இதுவே உண்மையான வாழ்க்கை என நன்கு புரிகிறது.ஆனால் பிடிப்பற்ற,உண்மையற்ற,வேறுவழியில்லாமல் குடும்ப கடமைகளுக்காக விரும்பாவிட்டாலும் வேறு வழியின்றி திரும்புகிறேன் ஐயா,.தேடும் வழியில் விரும்பும் வழியில் செல்லும்போது எல்லாம் சாத்தியமே.ஆனால் மனித வாழ்வியல் நெறியற்றதாயினும்,அதனை தோடரவேண்டியது வருத்தமாக உள்ளது.
இந்த பதிவு நல்ல முயற்சி. குறிப்பாக இதை நன்றாக நிறைவு செய்திருக்கிறீர்கள். நோக்கம் மனிதகுல மேம்பாடு - அவ்வளவுதான். Mysticsm என்பதை புரியாநிலை என்று கொள்வதே சரி. உள்ளுணர்வு, கனவு, hallucination (மாயை?) போன்ற நம் அறிவியலுக்குட்படாத விஷயங்களை ஆன்மீகத்தில் இணைப்பதும் (வியாபாரம் கூட - கனவுகளுக்கு பலன் மாதிரி) நம் நடைமுறையில் இருக்கிறது. காரணம் நாம் கற்பிக்கப்பட்ட அடுக்குகளின் (learnt layers) மூலமாகவே சிந்திக்கிறோம். அந்த அடுக்கு இல்லாத ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்பதும் உண்மை. மனம், சிந்தனை, உணர்வு விஷயங்களில் நிறைய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன புது பரிமாணங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தங்கள் பதிவு சிந்திக்க வைக்கிறது - நன்றி. தங்கள் பணி தொடரட்டும்.
மிகவும் சிறப்பான பதிவு ஐயா! தேடல் உள்ளவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கும், உள்ளார்ந்த கேள்விகளுக்கும் பலரது அனுபவங்களே சான்றாகவும், இயல்பூக்கியாகவும் இருக்கிறது. ஞானம் என்பது பெற்றுக் கொள்வதல்ல. விட்டுவிடுதலில்தான் இருக்கிறது.
நன்றிகள் ஐயா, மகா சிறப்பான பதிவு, அறிவியல் சமுத்திரத்தில் துளிகளையும் ஆன்மீகம் துளிக்குள் சமுத்திரங்களையும் அளிக்கின்றது . இதைத்தன்ணுர்வு ஊடாக முயற்சித்தால் கிடைக்கலாம்.. தொடர்க உங்கள் பணி, நன்றிகள் வணக்கங்கள்,
ம் .வணக்கம். வாழ்த்துக்கள் . சில உண்மைகள் . புரிய மட்டுமே . மா மகரிஷிகள் சொன்ன உண்மைகள் .அன்று கண்டான் சித்தன் மெய்ஞ்ஞானம் .இன்று கண்டான் மனிதன் விஞ்ஞானம் .இரண்டும் ஒன்றுதான் .மெய்ஞ்ஞானம் தனிமனிதனுக்கு விஞ்ஞானம் உலகுக்கு . உயிர் உணர்வு உடல் மூன்றும் இணைந்ததுதான் மனிதன் .இவைகளை அறிந்துகொள்வதுதான் ஆன்மீக
மிக அற்புதமான பதிவு. மிக சரியாக எந்த பக்கமும் சாயாத கருத்துக்கள். ஐயா, இதில் தாங்கள் கூறியுள்ள tunnel experience, வாசனை போன்ற மற்றும் சில அனுபவங்கள் நான் நேரிடையாக அனுபவித்து உள்ளேன். இதைப்பற்றி மேலும் தங்களிடம் நேரில் பேச விருப்பம். வாய்ப்பு கிடைத்தால் பிரபஞ்சம் அனுமதித்தால் பேசுவோம். நன்றி
ஓம் நமசிவாய.வாழ்த்துகள் ஐயா. நாம் ஒரு பிரபஞ்ச கலவை. நாமும் அதுவாகவே ஆகின்றோம். இந்த பிரபஞ்சம் கொடுத்த பரீட்சை வினா தாள் தான் இந்த மனித பிண்டம், அனைத்து கேள்விக்கான விடைகளும் வெளியே இல்லை, அனைத்து கேள்விக்கான விடைகளும் சூட்சுமாக இந்த மனித பிண்டமான வினா தாளுக்குள்ளே இந்த பிரபஞ்சம் கொடுத்து இருக்கின்றது. அதற்க்கான விடையை எழுதுவதோ, கிழித்து எறிவதோ, அல்லது கசக்கி எறிவதோ எல்லாத்தையும் ஒப்படைத்து விட்டு அமைதியாக தனது கடமையை செய்து கொண்டிருக்கின்றது இந்த பிரபஞ்ச பேராற்றல். சரியான விடை எழுதியவன் உயர்ந்த நிலையை அடைகின்றான்.அப்படி சரியான விடையை இந்த பிரபஞ் பேரியக்க களத்துக்கு கொடுத்தவர்களையே இந்த பிரபஞ்சம் சித்தர்களாக்கியது, அதுபோல் நபிகள், இயேசு, புத்தர் இவர்கள் இந்த மனித வினாத்தாளுக்கான விடையினை வெவ்வேறு கோணங்களில் விடை எழுதினாலும் இறுதியில் அனைத்தும் ஒன்றையே உணத்துவதனால் இவர்கள் அனைவரையும் இந்த பிரபஞ்சம் உயர்ந்த இடத்தில் வைத்தது. இப்போ என்ன நடக்கிறது என்றால் மற்றவன்டய பாத்து கொப்பி பன்னி விடையளிக்கும் மனிதனை இந்த பிரபஞ்ச பேராற்றல் ஏக்க மறுக்கின்றது.
Today,s your philosopchical encounter on Science and Mysticism with your own thoughts is useful. Though it is complicated one, you made it easier through your deep studies in philosophical ocean. With references of Socrates, Russell, full critical thoughts on near death experience scientific out look, three types of Mysticism, Heraclitas philosophy, performance Mysticism, chemical Mysticism is inspired and useful to ruminate. Your conclusion with Russell, and Ramamkrishnar for Science an Mysticism is also inspired. Thanks sir.
சிறந்த தலைப்பில் ஆழமாகவும் எளிமையாகவும் இருக்கிறது உங்களின் இந்த சிந்தனை பகிர்வு மிக்க நன்றி ❤ இறை அனுபவம் என்பது அது மண்ணில் மழை பெய்வது போல மரத்தில் காய் கனியாவது போல காலமும் சூழலும் அமையும் பொழுது அது இயல்பாய் நடக்கிறது என்றே நான் கருதுகிறேன் அறிவியலும் ஆன்மீகமும் சார்ந்த கேள்விகளும் தர்க்கங்களும் இந்த பயணத்தில் ஒரு எல்லைவரைதான் அது நம்மோடு வருகிறது ,,என்னுடைய ஒரு சிறு அனுபவத்தால் உணர்ந்ததை,அறிந்ததை இங்கே பதிவு செய்தேன் இதுபோன்ற உங்களின் பதிவுகள் ஒரு ஆரோக்கியமான அக சூழலை நிச்சயம் உருவாக்கும் உங்களின் வழியாக இறை அதை செய்கிறது 🌟❤
*இறை அனுபவத்தை யாரும் பெறவோ, தரவோ முடியாது என்பது உண்மைதான்.ஆனால் பிரபஞ்சத்தில் எதுவும் சாத்தியம் என்பதும் உண்மை.அப்படி தருவதும், பெறுவதும் தனி மனித வாழ்க்கை சுதந்திரத்தில் இயற்கைக்கு மாறாக குறுக்கிட்டு, குருவித் தலையில் பனங்காயை வைத்தது போலாகி விடும்.* *ராமகிருஷ்ணரிடம் கடவுளைக் காட்ட சொல்லிய நரேந்திரன் லௌகீக வாழ்க்கையை இழந்தார்*
*"பல நாட்களுக்கு முன்பு கோபால் சேன் என்ற இளைஞன் ஒருவன் இங்கு வந்து கொண்டிருந்தான்.* *இதனுள் இருப்பவர் கோபாலனின் மார்பில் காலை வைத்தார்.உடனே கோபாலன் பரவச நிலையில், 'உங்களுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது.உலகியல் மக்களுடன் இனிமேலும் என்னால் இருக்க முடியாது .நான் வருகிறேன்.'என்று கூறி வீட்டிற்கு சென்று விட்டான்.சில நாட்களுக்குப் பிறகு அவன் இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்"* - *_ஸ்ரீராமகிருஷ்ணர்_*
ஆன்மீகமும் அறிவியலும். தனிமனிதன் வளர்ச்சிக்கு வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு சமூக நலம் மேன்மை கண்ணோட்டத்துடன் இந்த காணொளி பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மிக்க நன்றி ஐயா.💐🙏👍
Thanks for the wonderful contribution to the society. The self-inquiry auto-started 3 years within me and out of curiosity I was in search of preachings by Vallar, Vedharthi, JK, Osho, and many other siddhars. When I come to know yet another interesting personality, I was stunned by his openness to offer the learnings of spiritual practices through a single book - "Siddha Vedham". Beloved @socrates Studio admins, Please bring this notice to Mr. Murali Sir. I want to hear about Swami Sivananda Paramahamsa, the Channel analysis about the much-hyped "Vasi Yogam" Taught in siddha vedam book.
Thank you sir fir standing for science, but for accomodating spirituality also. The gift guven to living beings especially human being by scientist is immense.
Vethathiri vetaveli moves Kolkal moves star காட்சியாக பார்க்க முடியும் தன்னுடைய மனதை நுண்ணிய நிலைக்கு யார் சென்றாலும் உணரலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்
A classic....Spirituality speaks about the righteousness only...... If one is consciously righteous in his life there is no need for any spiritual experience.... Really well explained....
nothing என்பதன் உண்மை வடிவம் no thing என்பதுதான். ஒன்றும் இல்லாத ஒரு இடத்தை விளக்க நமக்கு அங்கு எந்த பொருளும் இல்லை என்று பொருள் சார்ந்துதான் விளக்க முடிகிறது. பொருள் சார்ந்தே வாழ்ந்து பழகி விட்ட நமக்கு பொருள் அல்லாத ஒன்றை புரிந்து கொள்வது மிகவும் கடினமான விஷயம். இதை விளக்க சரியான சொற்கள் கூட நம்மிடையே இல்லை. தீவிர தேடுதலின் முடிவில் புலப்படலாம். அனுபவம் இல்லாதவர்க்கு இது வெறும் கற்பனையே. there is a big difference between intelligence and wisdom. intelligence is materialistic. wisdom is non materialistic.
One thing true thing is there , What we experience thing is an activity modification of consciousness so nothing is impossible , something is true exists , thats mei porul sivam .
மெத்த நன்றி. துவைத்த மற்றும் அத்வைத நிலைப்பாடு காண்பவர் position விளக்கம். வைரத்துள் ஒளிக்கற்றை ஊடு செல்கையில் எது எது சொல்லிக் கொள்வது கஷ்டம். பிரிந்தபின் தான் தன்னுள் சில அருட்டல்கள் அறியும். கடவுள் உணர்வு அற்பமான தன் உணர்வை மேற்கொள்ளும் அளவு கடந்தது. அதனால் மனம் தான் கடவுள் என்று நினைக்கலாம். மாறாக கடவுள் தன்னை ஆட்கொண்டார் என்ற முடிவுக்கும் வரலாம். இந்நிலை பெறுவது நாம் செய்யக்கூடிய படி அல்ல. தூரத்தில் திகழும் ஒரு பெயர் அற்ற நிலைப்புள்ள பேரறிவு ஒன்று தானாய் அணுகி அகத்தை ஈர்த்து தன் வேலையைப் பாரென்று காட்டும். காணும் போது புத்தி இயங்காது அது நிஜத்தில் இல்லாத ஒன்று போலிருக்கும். மாற்று பிரபஞ்சத்தில் புல்லா கல்லா காண்பதெல்லாம் குறிப்பறியக் கூடிய வகையில் இதயத்தோடு பேசி அவ் உயிர்ப்பிப்பவன் சிறப்பை தன்னில் விளக்கும். கிறிஸ்து வழியில் அனுபவங்கள் overall முத்திரை கொண்டவை. முதலில் ஆன்மா இறைவனின் முக ஒளியில் கண்கொட்டாது நோக்கும். அவ்வேளையில் காய்ந்து தூய ஒளியான அழகேறும். அவ்வொளி வரும் வேளையில் பட்டப் பகலும் நிசப்தமான கார் இருள். ஒளியழகுள்ள இயேசு அதனைக் காதலை விடக்கனிவான ஆத்ம உருக்கத்தை உருவாக்கும் வகையில் கண் நோக்கி முன் செல்ல அவர் அழகிலும் அன்பிலும் ஆத்ம அவா ஆன்மாவை உலகை துறக்க செய்யும். உச்சி தேனிலும் இசைவான அன்பால் ஊறி உள்ளே வழியும். புத்தி அ றிவு மட்டுமல்ல அதிலும் நுண்மை உணர்வுள்ள ஆத்மாவும் தான் இனி இல்லாமமை அடைந்தது போன்று சுத்தமாய் எவ்வித அறிவும் போகிய நிலையுற்று விழும் போலிருக்கும். மொழியமுடியாத இருள். பயம் தரும். ஆனால் கிறிஸ்தவ மறைஞானத்தில் இச்சூனியம் போன்ற அறிவுதரும் நிலை கடக்கப்பட்டு ஆன்மா புத்தொளியுடன் பீறி மீழும். அதன் பின் என்றும் இங்குமில்லை அங்குமில்லை. இவ்வுலக நாட்டம் மங்கி விடும். காதல் என்றன் பரிமாணம் புரியும். உயிர்கள் தந்தையாகிய அவனுடையன என்றுணர்ந்து பணி செய்வது மகிழ்வாகும்.
ஆன்மீகம் இல்லாத ஊருக்கு வழிசொல்வது. பலவீனர்களின் கூடாரம். கற்பனாவாதம். உலகத்தை சீரழிப்பதோடு மூடநம்பிக்கைகளினால் மக்களின் வாழ்வியலை மிகவும் பின்னோக்கி நகர்த்துவது. பாவம் மக்கள். அவர்களுக்காக வருந்துகிறேன் மாறன் கனடா
just Brilliant sir. your explanation with enormous knowledge highly scientific in approach besides driving all of us towards an extraordinary experience domain with world wide references is worth a zillion thanks.
ஆன்மீகம் என்பது கூட்டத்தினுள் அமர்ந்து இறையை உணர்வது Mysticism என்பது கூட்டத்திலிருந்து வெளியே வந்து தன்னை உணர்வது ஆன்மீகத்திற்கு ஒரு வழிகாட்டி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் Mysticism த்தில் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட உணர்வு தோன்றும்
*"நாளை இந்நேரத்துக்கு என் உடல் சாம்பலாகி விடும்.இது வரை நான் படித்த படிப்பு கற்றுக் கொண்ட ஞானம் எல்லாம் அழிந்து விடும்.என் மரணத்துக்கே இவ்வளவு வருத்தப் படுகிறேனே ? சங்கீத வித்வான்கள் , அரசியல் வாதிகள் , விஞ்ஞானிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஞானத்தையும் , அறிவையும் சம்பாதித்து இருப்பார்கள் ? அத்தனை முயற்சிகளும் மரணத்தினால் அழிந்து போவதை நினைத்தால் எனக்கு வேதனை ஏற்படுகிறது."* - *_எண்டமூரியின் ' அந்தர்முகம் ' நாவலில் இருந்து_*
இந்த பதிவில் பயணிக்கிறபோது இன்று செயற்கை தொழில்நுட்பமுறையில்கண்டுபிடிப்புகளில் பார்க்கவேண்டியுள்ளது.. குறிப்பாக மனிதமூளையின் பரிணாமம் குறித்து கண்டுபிடிக்க அனுபவங்கள் பயன்படலாம்
Sir, u r scientific world given .... name to kant bcoz of his systematic life style. Professor In india Laxmibai rebirth story in Gandhiji's life time . Sir, u r principal in the college i'm a student
விஜய் TVல் 'நீயா நானா 'நிகழ்ச்சி போல ஆன்மிக அனுபவம் நடைமுறை வாழ்க்கையில் கண்டவர்களை வைத்து நீங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்துங்கள். மிகப் பயனுள்ள தகவல்கள் நிறைய கிடைக்கும். ஏனெனில் நானே என் வாழ்க்கையில் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். இது போன்ற அனுபவம் கிடைத்தால் குருவைத் தவிற யாரிடமும் கூறக்கூடாது என விவேகானந்தர் கூறியிருக்கிறார். நான் தங்களை குருவாக பாவித்து என் ஆன்மிக அனுபவங்களை அப்பொழுது பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
சமயம்.... ஆன்மிகம்.... ஆத்மா.... கடவுள்.... போன்ற முகமூடிகளை அணிந்துகொண்டு கோடிக்கணக்கான அப்பாவி மக்களை தங்களுடைய காலடிக்குள் அடிமைகளாக்கி.... வைத்திருக்கும் ""ஆன்மிகக் கோமாளிகளிடமிருந்து"" மனித இனம் விடுதலை பெறும் நாள் எந்நாளோ😢😢😢😢😢😢😢😢😢
As a learning person, mysticism is unrevealed one. Atom came into western world after 18th century but In tamil people talk about Atom before 2nd century AD . vinayagar agval is evidence for that .
@@sm12560 tamil concentrated on harmonylife in the universe. The Anu is used to convey what is ultimate in the universe . Western Atom finding is for the comfort & to dominate others. That has happening since 16 th century. Still japan isn't came out of nuclear but recently it let the nuclear reactor water into sea.
ஆன்மீகமாய் நினைப்பவர்களுக்கு இது ஆதிசிவ நிலை. அறிவியலாய் எடுப்பவர்களுக்கு இது பிரபஞ்சம் காட்டும் பேருண்மை. ஆனா first time ல புரியாது. மறுபடி மறுபடி இந்நிலை கிடைக்கணும்.
நான் ஆன்மாவாக இருக்கிறேன் என்ற உணர்வு என்பதுவும் மனதின் ஒரு எண்ணமே, மனதின் உணர்வு எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பு என்பது இல்லை, இது எனது அனுபவம், உயிர் மனம் ஆன்மா எண்ணங்கள் என்பது குறித்து என்ன கேள்வி கேட்டாலும் நான் விளக்குவேன். நன்றி, வணக்கம்.
Regarding mysticism video, I thoroughly enjoyed sir, your presentation on this subject is exemplery. I am your fan , I regularly watching videos sir. Hatsoff to you sir.
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். எங்கள் நட்பு வட்டாரங்களின் தாழ்மையான பகிர்வுகள்...... #ஆத்மா.... ஆன்மிகம்.... கடவுள்.... சமயங்கள்..... கடவுள் என்ற நிலை...... வழிபாடுகள்..... சமயம் சார்ந்த சடங்கு... சம்பிரதாயங்கள்..... இவை அனைத்துமே மனித மூளையின் கற்பிதங்களே..... #இவை அனைத்தும் மறு ஆய்வு செய்யப்படவேண்டும்....... உள்ளுணர்வு..... விளக்க இயலாத சில புதிர்கள்.... அமானுஷ்யங்கள்.. தொன்மங்கள்..... இருக்கத்தான் செய்கின்றன. ஆனால்...... இவை குறித்த நமது தேடல்களைத் தொடரவேண்டுமேயன்றி.... அவற்றை ஒரு வரையறைக்குள் அடக்கிவிட இயலாது. வரையறைக்குள்
Journey of souls by Micheal Newton says ,four types of souls,also how many percent contributes.same திருமந்திரம் பாடல் உள்ளது.. நான்கு வகை ஆன்மாக்கள். அந்த பாடல் 2073 கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்புஅறி யாரே. எல்லோரும் ஒரு ஆன்மீக உணர்வுடன் தான் உள்ளோம். என்ன!!! குறி அவன் அறிவிக்க வேண்டும்.
அன்பே சிவம். அன்பு விற்பனைக்கு அல்ல. ஆன்மீக அனுபவங்கள் மனித மேம்பாட்டுச் சிந்தனை. உண்மை, தர்மம், ஒழுக்கம் சார்ந்த ஆன்மீகம் கடைப்பிடிக்க ஆனந்தம் அதாவது சச்சிதானந்தம். சச்சிதானந்தம் - சத்+சித்+ஆனந்தம் சத் - சத்தியம் சித் - அறிவு ஆனந்தம். இதை வாழ்வில் ருசிப்பது தனி சுகம். இதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
என் 18 வயதில் இதே போன்ற N.D.E. அனுபவம் எனக்கு ஏற்பட்டது... மரணத்தின் விளிம்பு வரை சென்ற எனக்கு ஒரு வழி காட்டுதல் தரப்பட்டு , பி ன் மரணத்திலிருந்து மீண்டு வந்தேன்... அது முதல் வாழ்க்கை குறித்த என் பார்வையே மாறி விட்டது.. மெய்வழி சாலை பாண்டியன் போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்.
சார். இந்த வீடியோ வை.. முழுமையாக கவனம் செலுத்தி கேட்டேன்.. எனக்கு தோன்றியதை பகிர்ந்து கொள்கிறேன். 1. பிரபஞ்சம் தோன்றிய காலம் பற்றி , விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்கள். அந்த வகையில் பிரபஞ்சத்தில் நாம் ஒரு புள்ளி கூட கிடையாது. பிரபஞ்சம் தோன்றியதை கண்டுபிடிக்கும் போது, இதுவும் தூசி போல கண்டுபிடிக்கப் படும். அது போல, மருத்துவ விஞ்ஞானத்தில், மூளையின் செயல்பாட்டை ஓரளவுக்கு தான் இன்று வரை கண்டு பிடித்து உள்ளார்கள். அந்த கண்டுபிடிப்பு மேலும் வளரும் போது. இதற்கான விடை. எளிதாக கூற முடியும். மொத்தத்தில். எல்லா வகையான உணர்வு நிலைகளும். மூளை என்ற மையத்தில் இருந்து தான் உண்டாகிறது. அதனால், இதை வியந்து பார்க்க தேவை இல்லை. மேஜிக் . செய்யும் போது . எப்படி நினைக்கிறோமோ , அது போல தான் இதுவும். மூளை பற்றிய புரிதல், இன்னும் வளரும் போது. இதற்கும் விடை உறுதியாக கிடைக்கும் என்று தெளிவாக உணர்கிறேன். நன்றி சார்.
புலன் கடந்த ஆன்மீகம் அனுபவம் என்பது உண்மைக்கு புறம்பானது. மனம் என்று நாம் சொல்வது நம் கற்பனையின் வடிவமே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தியில் அலைகிறார்கள். அதனால் யார் சொல்வதும் யாருக்கும் சாத்தியப்படாது. உங்கள் செயலே உங்கள் வாழ்க்கை. அதனால் பிற சொல்லும் கற்பனைகளை ஏற்றுக் கொண்டு அலைய வேண்டாம் சிந்திக்க வேண்டாம்.
Science is a child. Spirituality is an experienced old man. Both don't agree. Eventually the old man wins. Science is based on proof. Spirituality is based on faith. To conclude, we should have faith in the eternal and more forward to immortality. Thank you sir.
Excellent video! So much shared without any bias towards any. Thank you for doing this. Perhaps you should do a video on Prodigies. It seems a mystery on how very young kids can outperform without any proper training. Mozart or Bharathy or Sachin or Balamurali Krishna...
Hi sir, It’s our pleasure to get such a wonderful facts from you about both spiritual path and scientific fact fullness for leading a better and healthy life. Thanks a lot.. I have been following ur videos since 3 months and watched almost all south Indian spiritual Bhagwan videos.. after seeing these.. I have a question on food habits.. Thanks.. All the best for future endeavours!!! Can we have yours suggestion about the food pattern for the people who wants to improve their spiritual skills..
Pls read the Bible many times without any parameters (holy mind). It's word of God. You can get and know about all questions of the past,present, future... The only one book everlasting.... Pls....
இறைவன் உங்களிடதிலே இருக்கிறார் என்று சொல்ல வந்த என்னையே இறைவன்னகி விட்டீர்களே என்று கூறி கடையை கட்டிவிட்டேன் என்று கூறினார் வள்ளலார் அவர்கள். அறிவியல் என்று நீங்கள் கூறுகின்றீர்கள் ஞானிகள் இறைவன் என்று கூறுகிரார்கள்
Read the chapter on near death experience by Carl Sagan in Broca's Brain. He divides the experiences into 2 types: near death experience and fear death experience. (Fear death means the person believes he's going to certainly die but is saved.). The experience of going through a tunnel, towards a light etc., are due to release of some chemicals by the brain (to act as pain killers) near death.
இதில் தாங்கள் ஜாதகம் பற்றி இணைத்து பார்த்தால் இதற்க்கான விடை கிடைக்கும். பிறந்த தேதி நேரத்தில் மூளையின் ஆன்ம பலன் உணருவதே பிறவில் அனுபவிக்கும் இன்ப துனபம். உயிரை பிரபஞ்சத்தில் கல்க்க விட்டு பிறகு மேம்பட்ட உயிர் நிலையை இணைத்து கொள்வதால் தான் உட்கார்ந்த இடத்தில் உயர் நிலை உணர் தன்மையில் நிலை கொள்கிறான். அப்போழுது மூளை அந்த இடத்தில் தன் ஜென்ம பலனை மேம்படுத்துகிறது. அதை உலகிற்கு சொன்னால் எல்லாம் உயிர்நிலை ஏற்று கோள்ளும். உடல் நிலையை ஆசையினால் ஏற்று கொள்ளாது. ஆன்ம வழி பயணம் உயிர்க்கான உயர்நிலை. அறிவியல் பயணம் வாழ்க்கையின் உடல்நிலையை இனபமாக வைத்து கொள்ளும் உயர்நிலை. எதற்காக படைக்க பட்டு இருக்கிறோமோ.... எது உன்னை இழுத்து கொள்கிறதோ... அதை நோக்கி பயணிப்போம்.. உலகில் ஆண்... பெண் போல் ஆன்மீகமும் அறிவியலும் இணைத்தால் தான் இயங்கும்🙏💐
ஐயா வணக்கம் தங்களிடம் நல்ல மாற்றம் தெரிகின்றது நீங்கள் ஆராய்ந்து அறிவியலும் நம்புமாறு ஆன்மீகத்தை உரைக்க முற்படுகின்றீர்கள் . ஆனால் பொருள் முதல் வாதத்தை மட்டுமே நம்பும் பகுத்தறிவாதிகள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம் மூளைக்கு அப்பாற்பட்டு ,/ நம் கண்களுக்கு அப்பாற்பட்டு , உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ,எண்ணிலடங்காத விஷயங்கள் நிச்சயமாக நடக்கின்றன . நடக்க முடியும் இதை யாரும் மறுக்க முடியாது .இதையே ஆன்மீகம் என்ற பெயரில் அரிய முற்படுகின்றார்கள். ஆனால் விஞ்ஞானத்தோடு ஒட்டி இவைகளை அறிய முற்படுவது உயிரோடு இருக்கும் போது கஷ்டம். இதற்கு ஒரே வழி முன்னோர்கள் காண்பித்த வேத உபநிஷித்துகளை அறிந்து நம்மையும் நாமே தியானத்தின் மூலம் அறிந்து வாழ்வதுதான் . நிச்சயமாக அனைத்தையும் கண்டு உணர்ந்து கொள்ள முடியுமே தவிர பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பாளர்களுக்கு கடை விரிக்க இயலாது . இந்த முயற்சி தெளிவான பகுத்தறிவுடன் தங்களை மேன்மேலும் உயர்த்திக் கொள்ள வழி வகுக்கும். இதனால் என் போன்ற வாசகர்களுக்கும் தங்களை தொடர்ந்து பின்பற்றுபவர்களுக்கும் பலன் கிட்டும் . அது நிச்சயம் அறிவு சார்ந்த பலன் தான்..
Sir it is an eternal question. Even this is true, why this experience is for only very very.few ie., for .00001 percent. Why not we think it is due to genetic reason. Kindly do interview with such people.. Which may be very useful