பத்தாம் வகுப்பு படித்த போது 75 பைசா டிக்கெட்டில் பார்த்த படம். வெளிநாடுகளில் எடுத்த படம் என்று என் தந்தையிடம் கூறி அனுமதி பெற்று சென்று கல்லக்குடியில் (டால்மியா புரம்) பார்த்து ரசித்த படம்.
இந்த நேரத்தில் இதுசுகமோ? இதழ் ஓரத்தில் பரவசமோ? இந்த சிச்சுவேஷன் டியூனில் உள்ள கொஞ்சல் இதுவரை எந்த பாட்டிலும் வரவில்லை. தொடரும் வயலின்களின் ரிபீட் மிக இனிமை. இது ஒரு ராகமாலிகை. மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க!
அந்தக்கால பிரபலமான பாடல் . மனப் பாடமாக இப்போதுகூட பாடுவேன். என் வயது 64. தெளிவான பாடல். டபுள்சைடு பெரிய பாட்டு. ஐரோப்பாவின் அழகை இந்தப் பாடல் மூலம் காட்டப்பட்டிருக்கும். கோபு, சித்தாம்பூர்.
1969 தீபாவளி அன்று முதல்நாள் முதல் காட்சி எங்கள் நகர் NVGB யில் அண்ணன் சிவாஜியின் தீவீர ரசிகராக படம் பார்த்ததை எண்ணினாள் கண்கள் கலங்கும் சேக் திண்டுக்கல்
எத்தனை நாள் ஆனாலும் கேட்டு கொண்டேயிருக்கும்🎉❤அழகான பாடல்🎵🎤🎶 வாழ்க வளமுடன் ஐய்யா நடிகர் அழகு மன்னன் மனிதநேயம் உள்ளம் கொண்ட சிவாஜி கணேசன். ஆர்🙏💕 உதயகுமார் முன்னாள் மண்டலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருக்கோவிலூர். 4:26
MSV TMS P.Suheela இந்த மூன்று பெயர்க்களும் இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். என்ன ஒரு இனிமையான பாடல் தந்து எங்களை மகிழ்வித்துள்ளீர்கள்.சில் சில் சப்தம் இல்லாமல் பின்னணி இசையுடன் தெளிவாக பதிவு மிகவும் நன்று.உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
திரை இசையின் இலக்கணம் உடைத்து இலக்கியம் படைத்த அற்புதமான ஒலி, ஒளி பதிவு. 50 வருடங்களுக்கு முன்பே புதுமை புகுத்தி, புரட்சி செய்து, இன்றும் வறட்சி காணாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இணையற்ற அற்புதப் பாடல்..
எங்களது ஊரான உடன்குடியில் நடைபெரும் தெரு விழாக்களில் "கிரேட்டா சவுண்ட் சர்வீஸ்" இப்பாடலின் இசைத்தட்டை கொண்டு வருவார்கள். பெரிய பாடல்...ஒரு பக்கம் பாடல் ஓடி முடிந்தவுடன்...மறுபக்கம் திருப்பி போட்டு கேட்ட காலம்... ஆஹா நினைத்தாலே இனிக்கிறது. புதுமை இயக்குனரின் படமென்றாலே பாடலுக்கு பஞ்சமிருக்காது...அதுவும் மன்னரின் இசையில்... இப்பாடல் மிகவும் தனித்துவமிக்கது.... இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களும்... சுசீலா அம்மா அவர்களும்... தேனும் பாலும் போன்ற ஒரு அருமையை நமக்கு தந்திருக்கிறார்கள்...! உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...
என்றும் காலத்தால் அழியாத காவியப் பாடல் இந்த பாடல்களில் உள்ள கவிநயம் பொருள் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் இப்பாடல்களை கேட்டும் பாகியம் கிடைத்தமைக்கு நன்றி
பாடலை கற்பனை வளம் சூழ புனைந்திருக்கும் கவிஞர் கண்ணதாசன்... "நாடு விட்டு நாடு சென்றால் பெண்மை நாணமின்றி போய்விடுமே".!?.. வரிகளுக்கும் காட்சிகளுக்கு ஏற்ப இசைக்கோர்வை தந்த மெல்லிசை மன்னர்.. .. வண்ணம் தந்த பின்னணியில் ஐரோப்பிய கண்டத்தை சுற்றி திரியும் காதலர்களாக நடிகர் திலகம்.. எழில் அழகி காஞ்சனா.. ஐரோப்பிய கண்டத்தின் நகரங்களில் பாடித்திரியாமல் ஒலிப்பதிவு அரங்கில் மட்டும் பாடிய சுசீலா.. சௌந்தரராஜன் .. ஆல்ப்ஸ் மலையின் பனி சிகரத்தில் .. ஈஃபில் கோபுரத்தின் பாதத்திலும் காதலர்கள் வலம் வரும் அழகிய எழிலை காட்சிப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர்.. அன்று "தீராமல் ஆசை கொண்டு..".. திரும்பிய திசையெல்லாம் கேட்ட பாடல்.. தமிழ் திரை ரசிகர்களால் ஏமாற்றப்பட்ட இயக்குனர் தயாரிப்பாளர் ஸ்ரீதர்..
என்ன ஓரு அற்புதமான பாடல் முதல் வணக்கம் ஸ்ரீதர் இரண்டாம் வணக்கம் கண்ணதாசன் and மூன்றாம் வணக்கம் ஒளிப்பதிவாளர் எல்லாவற்றுக்கும் மேலே சிவாஜி கணேசன் and காஞ்சனா இனி எத்தனை பாடல் வந்தாலும் இதை தொட முடியாது ஐயா TMS and P Suseela எத்தனை பாடகர்கள் வந்தாலும் இவர்களை தொட முடியாது 🙏
First movie which shooted in foreign countries.this movie "sivantha man" released in 1969 deepavali at tuticorin balakrishna theater ticket edukkirathukkul shirt kizhinchu pochu. Antha pattathu rani songs kku visil parakkum. All songs are super hit. Golden time youth period.
ஓடம் பொன்னோடம்... அது உன்னோடும் என்னோடும் ஓடும்.. ஓடட்டும் ஓடம் என்ன... இனி என் வாழ்வு உன்னோடு ஓடும்... கவியரசரின் அழகு வரிகள், மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை, டி. எம். எஸ் +பி. சுசீலாம்மா இனிய குரல் வளம், நடிகர் திலகம் +காஞ்சனா அழகு ஜோடியின் நடிப்பு அனைத்தும் என்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும்..
Even Oscar is not enough to felicitate the great MSV.TMS and P Susheela are matchless pair as our Action giant Sivaji excels in every frame of the movie.
நாம் அப்போது சென்று ரோமபுரி பார்திருக்கக்கூடுமா என்ன ஒரு படைப்பு, ஒரு நையா பைசா பார்ப்பது என்பது எவ்வளவு கடினம் அந்த நேரத்தில் சாதாரண மனிதனுக்கு கிடைத்த arputha வாய்ப்பு 🙏👍👌
What a lovely song by msv and so melodiously sung by tms and suseela Sivaji and kanchana are very beautiful and also France and rome. So many years have gone but still these kind of melody songs never goes away from our hearts
நானும் சிறுவயதில் HMV Record இசைத்தட்டில் வரும். எங்கள் ஊர் கோயில் 10 நாட்கள் திருவிழா சமயம் இது போல் பாடல் கேட்கலாம். பாட்டு போடுகிறவர் அருகில் அமர்ந்து கொண்டு ஒரு நாளைக்கு ஐந்து ஆறு தடவைகள் போடச் சொல்லி கேட்பேன் அந்த நாட்களை நினைத்து பார்க்கிறேன்.