பூ முடிப்பாள் இந்த பூங்குழலி - பாடகர் முகேஷ் On 20th Jan 2017, உயர்திரு ஆடிட்டர் ஜெகதீஷ் அவர்களது மகள் திருமணவிழாவில் திரை பிரபல பாடகர்கள் பாடிய நிகழ்வு
எனது ஆசிரியர் திரு வி.பரமசிவ பாண்டியன் அவர்கள் மிக அழகாக பாடுவார். அவருடன் 1975-77 என் பள்ளி பருவம் மறக்க முடியாதது. எனது பள்ளி "அருணா சுகர்ஸ் உயர் நிலை பள்ளி " எறையூர், பெண்ணாடம். VPP ஐயா தங்களை பார்த்து 44 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்கிருந்தாலும் வாழ்க . கோ.செல்வராஜூ நக்கம்பாடி, அரியலூர் 18/05/2021
Mukesh.. After seeing your recent program at கலைவாணர் அரங்கம், during MSV 90.. I honesty love your sweet voice man... Best wishes.. For your long singing.
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி பூமுடிப்பாள் இந்த பூங்குழலி புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி பார்வையிலே மன்னம் பேரெழுதி பார்வையிலே மன்னம் பேரெழுதி அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி பூமுடிப்பாள் இந்த பூங்குழலி புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி பூவையின் அண்ணன் கைவளை பூட்டி பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி பூவையின் அண்ணன் கைவளை பூட்டி தாய்வழியே வந்த நாணத்தை காட்டி தாய்வழியே வந்த நாணத்தை காட்டி தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி பூமுடிப்பாள் இந்த பூங்குழலி புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி ( நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் இருபதாம் நாள்… திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும், நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன் தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன், ரகுராமன், ரகுரா..மன். மாதனார் தங்கள் மகளென்று பார்த்திருக்க மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க கொட்டியது மேளம் குவிந்தது கோடி மலர் கட்டினான் மாங்கல்யம் மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க கடமை முடிந்தது கல்யாணம் ஆக கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க கடமை முடிந்தது கல்யாணம் ஆக அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட பூமுடித்தாள் இந்த பூங்குழலி புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி கண்ணில் நீரெழுதி கண்ணில் நீரெழுதி