டி ஆர் பாடல்களில் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது மற்றும் அமைதிக்கு பெயர் தான் சாந்தி; நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா ; இது குழந்தை பாடும் தாலாட்டு போன்ற பாடல்கள் இன்றுவரை அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்
எனக்கு 33 வயதாகிறது 2023 ல் தான் ஒரு தலை ராகம் படம் பார்த்தேன் பார்த்துவிட்டு நான் அழைக்கின்றேன் எவ்வளவு அருமையான திரைப்படம் பாடல்கள் அருமையாக இருந்தது கதை டி ராஜேந்திரன் அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பிரச்சினைகளை உருவாக்குவது மக்கள் இல்லை சில நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வோடு ரசித்து விட்டு சென்று. விடுவார்கள் இதற்கென்றே சமீப காலங்களில் பிழைப்புக்காக அரசியலிலும் சமூக அமைப்புகளிலும் சில கூட்டங்கள் இருக்கிறது அதனால் விளைகின்ற போராட்டங்கள் தான் ✍️
இப் படம் பெரும் சகாப்தம்.... படம் வந்த ஆண்டிலே பார்த்து விட்டேன் இப்போது வயது 59...94 எனது திருமணம்... வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் தற்செயலாக நடந்த சந்திப்பில் எங்களை வாழ்தினார்கள்
அந்த காலகட்டத்தில் படத்தை படமாக பார்த்து ரசித்தார்கள் ஆனால் இப்போது பிரச்சினை செய்வதற்கென்றே படம் பார்த்து ரிவ்யு என்ற போர்வையில் வக்கிர புத்தி களை புகுத்தி விடுகிறார்கள்
TR ரின் அடுத்தடுத்த வெறிப்படங்களுக்கு அவர் வைக்கும் பெயர்கள் ஒன்பது எழுத்துக்கள் கொண்டிருக்கும். அதில் அவர் நம்பிக்கை கொண்டவர். ரயில் பயணங்கள் நெஞ்சில் ஓர் ராகம் உயிருள்ளவரை உஷா மைதிலி என்னை காதலி தங்கைக்கோர் கீதம் உறவைக்காத்த கிளி ஒரு தாயின் சபதம் Etc
T.ராஜேந்திரன் படங்களை முதலாவது ஆளாகப் போய் பார்த்தேன். தன்னம்பிக்கை மிகுதியால் தான் செய்வது தான் சரியான து என்று தான் செய்வது தான் ஸ்டைல் என்று மாறிய பிறகு படமே பார்க்க முடியவில்லை ஃவீராச்சாமி உதாரணம்ஃ சிம்புவும் அதே கதைதான் ஒஸ்திபடம் அதே ரகம் தான்
இந்த படத்தில் இசை ஏ ஏ ராஜ் பாடல்கள் ராஜேந்தர் இனி இப்படி ஒரு படம் பாடல்கள் செயற்கை தனம் இல்லாத நடிப்பு கதா பாத்திரத்தின் வயதுள்ள நடிகர் நடிகை கேமரா ஒளிப்பதிவு இனி வாய்பில்லை. 1981 இளைஞர் இளைஞிகளை கதற விட்ட படம்.எல்லை மீறாத காதல் காதலர்கள்.
நான் ஒரு ராசியில்லா ராஜா , என் வாசத்துக்கு இல்லை இது வரை ரோஜா" என்ற பாட்டை T.R அவர்கள் TMS அவர்களை பாட வைத்தார். அத்துடன் TMS சினிமாவில் பாடியது நின்று போனது.
தவறு. ஒரு தலை ராகம் இசை முழுக்க முழுக்க திரு ராஜேந்தர் தான். உதவிக்கு வேண்டுமானால் அந்தோனி ராஜ் என்பவரை வைத்திருக்கலாம்.அச்சமயம் இதுபோல் ஓர் சந்தேகம் வந்த து.நிறைகுடமான திரு ராஜேந்தர் அவர்கள் அடுத்த படத்திலும் இதே திறமையை காட்டி பாடல்களை வெற்றியடையும் செய்தால் ஒரு தலை ராகம் இசை அவருடையது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்கல்,நெஞ்சில் ஓர் ராகம் போன்ற அவர் இசையமைத்த படங்களின் பாடல்களை வெற்றியடையும் செய்து தான் ஒரு நிறைகுடம் என நிறுபித்தவர். ஏ.ஏ. ராஜ் தனியாக சில படங்களுக்கு பாட்டு போட்டு அப்பாடல் கள் அச்சமயத்தில் வெற்றியடையவில்லை என என்னுகிறேன்.
TR அவர்களின் ஆரம்பகால, கல்லூரி கால வளர்ச்சியில் மயிலாடுதுறை (மாயூரம்) இஸ்லாமியர்களின் உதவி அதிகமாக இருந்துள்ளதை TR அவர்களே சொல்லி உள்ளார் அதே வேளையில் இஸ்லாமியர்கள் தம் சமூதாயத்திற்க்காக சாலையில் நின்று போராடும்போது -TR குரள் கொடுத்தாரா என்பது அவர் உள்மனதிற்ககு மட்டுமே தெரியும்.
@@VILARI சீரியல்ல நல்ல கவனிக்க சொல்லி கேள்வி கேட்டுபரிசெல்லாம்குடுப்பாங்கோ. அதான்பரிசுகிடைக்கும்னு முதல் ஆளா சொல்லிபுட்டேன்!! அதுல,, வெறும் கவனிச்சாவையும் சேத்துனா பணெண்டு முறை. அதையும் சொல்லிட்டேன்!! பதிவு எதுக்கு போட்டிருகீங்க புரில சரி இதையாவது கவனிக்கலாம்னு முடிவு பண்ணேன்!! இதசேத்தா?பதிமூனு தபா!! தல சுத்தவச்சிடேன்.போல🌝
நமது தமிழ் திரைப்பட வரலாற்றில் உலக அளவில் திறமைக்கு சவால் விடுபவர்கள் மூன்று பேர் மட்டுமே. அவர்களில் இருவர் தஞ்சாவூர் காரர்கள். இன்னொருவர் கோயம்புத்தூர் காரர். உலக நடிகர்கள் அனைவருக்கும் சவால் விடும் முதல் நடிகர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். இவருக்கு இணை எவரும் இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் அனைத்து மொழி நடிகர் களும் ஒத்துக்கொண்ட விஷயம். T. ராஜேந்தர். இரண்டாவது. இவர் ஒருவரே அனைத்து பொறுப்புகளை யும் ஏற்று திறம்பட நடித்து அவைகள் அனைத்தும் இரண்டு மூன்று தவிர 100நாள் வெள்ளி விழா. ஒரு வருடம் என்று பல திரைப்படங்களை ஓட்டிக் காண்பித்தவர். கதை. திரைக்கதை. வசனம். பாடல்கள். ஒளிப்பதிவு. இசை. தயாரிப்பு. இயக்கம். பின்னணி பாடகர். நடிப்பு. என்று பத்து துறைகளையும் எடுத்து அதைத் திறம்பட எடுத்து சினிமாவில் வெற்றி படம் கொடுத்தவர். முக்கியமாக எடிட்டிங் வேலையும் செய்பவர். எனவே இவருக்கு இணை உலகில் எவருமே இல்லை. தமிழில் இலக்கியத்தில் இலக்கணத்தில் திறமை படைத்தவர். எம். ஏ. படித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்ட் மெடல் பெற்றவர். கே. பாக்யராஜ். இவர் கதை. திரைக்கதை. வசனம். இயக்கம். இசை. நடிப்பு. என்று பல திறமைகளைக் கொண்டவர். இவரின் பல படங்களில் சமூகச் சாடல் பலமாக இருக்கும். மேலும் தனது ஒவ்வொரு படத்திற்கும் நாலு ஐந்து கிளைமாக்ஸ் எடுத்து வைத்து கொண்டு தனது உதவியாளர் களுடன் கலந்து பேசி விட்டு பிறகு அதையே முடிவில் வைப்பவர். எனவே இந்த மூன்று பேர்களின் திறமைக்கு அடுத்துத் தான் மற்ற எந்தவொரு நடிகனோ இயக்குனரோ வருவார்கள். தமிழ் படங்களின் மும்மூர்த்திகள் இந்த மூவர் மட்டுமே. வேறு எவரும் இல்லை.